திருப்பூர், ஜூன் 2– திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப் பணி திட்டம் அலகு - 2 சார்பாக, உலக புகையிலை ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. புகையிலையின் தீமை குறித்து விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. அலகு 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். “உணவை அதிகரியுங்கள், புகையி லையை அல்ல” என்ற இந்த வருட மையக்கருத்தை வலியு றுத்தி மாணவ செயலர்கள் ராஐபிரபு, விஜய் ஆகியோர் தலை மையில் கல்லூரி நுழைவு வாயிலில் வாகன ஓட்டிகளுக்கு புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. கல்லூரி வளாகத்தில் புகையிலை பயன் படுத்த மாட்டோம், புகைபிடிப்பவர்களை கண்டால் விழிப்பு ணர்வு கொடுப்போம் என்ற உறுதி மொழி எடுத்தனர்.