districts

img

உலக தலைக்காய விழிப்புணர்வு தின பேரணி

கோவை, மார்ச் 20- உலக தலைக்காய விழிப் புணர்வு தினத்தை முன்னிட்டு இருசக்கர வாகன தலைகவச விழிப்புணர்வு பேரணியை கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் ஞாயிறன்று துவக்கி வைத்தார். உலக தலைக்காய விழிப் புணர்வு தினத்தை முன்னிட்டு ஞாயிறன்று, கோவை மாவட் டம், நீலாம்பூரில் உள்ள ராயல் கேர் மருத்துவமனை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து  நடத்திய இருசக்கர வாகன தலைகவச விழிப்புணர்வு பேர ணியை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் துவக்கி வைத் தார். இந்நிகழ்ச்சியில் ராயல் மருத்துவமனை சேர்மன் கே. மாதேஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதன்பின் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் பேசுகையில், ஒவ்வொரு ஆண் டும் மார்ச் 20 ஆம் நாள் உலக தலைக்காய விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படுகிறது. சாலை விபத்துக்கள் ஏற்படும் போது தலை காயங்களினால் நிகழும் பாதிப்புகள் அதிகள வில் உள்ளன. சாலை விபத்துக் களை குறைப்பதற்கும், தலை காயங்களுக்கு உரிய சிகிச் சையை உரிய நேரத்தில் வழங்க வும், இதுகுறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தவும் இந்த தினம் உலக முழுவதும் கடைபிடிக்கப் படுகிறது.

மாநில அளவில் அதிக சாலை விபத்தில் நடைபெறும் பகுதிகளில் கோவை மாவட் டத்தின் மேற்கு மண்டலம் இருக்கிறது. இப்பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலை கள் சேர்ந்த 49 சாலைகள் விபத்து கள் நேரும் பகுதியாக கண்டறி யப்பட்டு அப்பகுதிகளில் தற்கா லிக தீர்வாக மாற்று ஏற்பாடுகள் காவல்துறை மற்றும் நெடுஞ் சாலைத்துறைகள் வாயிலாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், விபத்துக்களை குறைக்கும் வகையிலும், நிரந்தர தீர்வு காணும் வகையிலும் சாலை களின் அமைப்பை மாற்றி அமைக்க பரிசீலிக்கப்பட்டு வரு கிறது. இப்பகுதிகளில் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் மூலம் கடந்த ஒரு வருட காலமாக இப்பகுதி களில் விபத்துகள் எதுவும் நடை பெறவில்லை. மேலும், இருசக் கர வாகனங்களில் செல்லும்  அனைவரும் கட்டாயம் தலை கவசம் அணிய வேண்டும். தங் கள் இன்னுயிரை ஆபத்தில் இருந்து காக்கும் தலைகவசம் உயிர் கவசமாகும் என்பதை உணர்ந்து அனைவரும் விழிப் புடன் சாலை பயணத்தை மேற் கொள்ள வேண்டும், என்றார்.