மேற்குத் தொடர்ச்சி மலையின் பாலக்காட் டுக் கணவாய் வழியாக வரும் காற்று இதமாக இருப்பதால் கோவை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் வருடம் முழுமையும் வெண் பட்டு உலகத் தரத்தில் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுவதால். இங்கு ஆயிரக்க ணக்கான விவசாயிகள் பட்டு உற்பத்தி தொழில் செய்து வருகிறார்கள். பட்டு உற்பத்தி வரலாறு. மனித நாகரிகம் தோன்றிய காலத்தில் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் சீனாவில் பட்டு தோன் றியதாக ஆய்வுகள் கூறுகிறது. பின்னர் பட்டு உற்பத்தி உலகநாடுகள் முழுவதும் பரவியது 2000 ஆண்டுகள் முன்தான். இந்தியாவில் கர்நா டக மாநிலத்தில் மைசூரில் உள்ள ராஜாவுக்குப் பட்டினால் ஆன ஆடைகள் வந்தாக வரலாறு, அதன் பின் இந்தியாவில் பல மாநிலங்களில் பட்டு விவசாயம் பரவியது. முதலில் உலகம் முழுவதும் மஞ்சள் பட்டுக் கூடுகளினால் ஆன ஆடைகள் பயன்பாட்டில் இருந்தது. பின் நாளில் ஜப்பான் நாட்டின் ஜெயிக்கா திட்டத்தின் மூலம் புதிய தொழிநுட் பத்துடன் வெண்பட்டு கூடுகள் அறிமுகம் செய் யப்பட்டது.
ஆரம்பக் காலத்தில் குடியிருக்கும் வீடுகளில் வட்டதட்டுக்களில் புழுக்களை வளர்த்துப் பட்டுக் கூடு உற்பத்தி செய்யப்பட்டது. நாளடைவில் பட்டுக் கூடு வளர்ப்பானது விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கப்பட்டு பின் பட்டு வளர்ச்சித் துறை உருவாக்கப்பட்டது. சமீபகாலத்தில் உயரிய தொழிற்நூற்பத்து டன் வேலை புழுவை குறைத்து வெண்பட்டு புழுக்கள் சதுரவடிவ தட்டிகள் (ரேக் ஸ்டம்) மூலம் தனி மனை அமைத்து விரிவுபடுத்தப்பட்டது. பின்பு முட்டை பொறிப்பு, புழு வளர்ப்பு, ஆகி யவை விவசாயிகளால் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த கால நிலை குறைக் கப்பட்டு நவீன தொழினுட்ப முறையில் பயிற்சி அளிக்கப்பட்டு இளம் புழு வளர்ப்பு மையங்கள் மூலம் புழுக்கள் பெறப்பட்டு, பட்டுக் கூடுகளிலி ருந்து நூல் இலை தயாரிக்கப்படுகிறது. இந்த சமூ கத்தில் பட்டு, ஆடை அலங்காரமாகவும், மருத்து வத்துறை சார்ந்த பயன்பாட்டுக்கும் பயன்படுத் தப்படுகிறது. மேலும் 50-க்கும் மேற்பட்ட நாடுக ளுக்குப் பட்டு ஏற்றுமதியின் மூலம் மிகப் பெரிய அளவில் வருமானம் நாட்டிற்குக் கிடைக்கிறது. இப்படிப் பட்டு உற்பத்தி தொழில் விவசாயத்தின் ஒரு பகுதியாக உள்ளதால் நம் விவசாயிகள் உலகத் தரத்தில் பட்டு உற்பத்தியைக் கொண்டு செல்ல பல புதிய தொழில் நுட்பங்களை ஏற்ப டுத்த மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.