சேலம், பிப்.5- உலக புற்றுநோய் தினத்தை முன் னிட்டு, சேலத்தில் நடைபெற்ற விழிப் புணர்வு கருத்தரங்கில் பலர் கலந்து கொண்டனர். உலகப் புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, மக்களின் சேவகன் சமூக நல அமைப்பு மற்றும் தமிழ் மாநில மக்கள் உரிமை பாதுகாப்புக் கழகம் சார்பில், புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி சேலம் அய்யந்திரு மாளி கையில் இருந்து துவங்கி, சண்முகா மருத்துவமனையில் நிறைவடைந் தது. இப்பேரணியை தமிழ் மாநில மனித உரிமை பாதுகாப்புக்கழக சட்ட ஆலோசகர் பிரின்ஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணி யில் தமிழ்நாடு கூட்டு நடவடிக்கைக் குழு முதன்மை ஒருங்கிணைப்பாளர் சரஸ்ராம் ரவி, மக்களின் சேவகன் சமூக நல அமைப்பு மாநிலத் தலை வர் ஜெ.மோகன், மத்திய மாநில அரசு பொதுத்துறை ஊழியர்கள் கூட்ட மைப்பு ஆலோசகர் ராஜசேகரன், சேலம் மாநகர இளைஞரணி திமுக அமைப்பாளர் கேபிள் சரவணன் உட்பட 300க்கும் மேற்பட்ட இளை ஞர்கள் கலந்து கொண்டனர். இதன் பின் சண்முகா மருத்துவமனையில், இன்றைய இளைஞர்களுக்கு தேவை உடல் நலமா? மன நலமா? எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற் றது. உயிர்மெய் தமிழ்ச்சங்க மாநிலத் தலைவர் சேலத்து பாரதி சொல்லரசர் நடுவராக இருந்து தீர்ப்பு வழங்கி னார். கூட்டு நடவடிக்கைக்குழு முதன்மை ஒருங்கிணைப்பாளர் சரஸ்வராம் ரவி, சண்முகா மருத்துவ மனை நிறுவனத் தலைவர் பி.எஸ்.பன்னீர்செல்வம் ஆகியோர் கருத்த ரங்கை தொடங்கி வைத்து பேசினர். இதில் உடல் நலமே எனும் தலைப் பில் அன்னபூர்ணா நர்சிங் கல்லூரி பேராசிரியர் எஸ்.பரிமளா, இந்திய மூல நிவாஷி காவல்படை தமிழமு தன் ஆகியோர் பேசினர். மனநலமே எனும் தலைப்பில் திருவள்ளுவர் பெருமன்றத் தலைவர் காளி.தங்க துரை பேசினார். விடுதலைக்குரல் ஆசிரியர் அன்பரசு வாழ்துரையாற்றி னார். முடிவில், பூமலைராஜன் நன்றி கூறினார்.