திருப்பூர், ஜூலை 11- திருப்பூரில் நடைபெற்ற, உலக மக்கள் தொகை தின நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர். திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பில் வியாழனன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மோகன் குமார் முன்னிலை வகித்தார். இதில், மாணவச் செய லர்கள் மது கார்த்திக், கிருஷ்ணமூர்த்தி, திவாகர், ரேவதி, ஆகியோர் தலைமையில், “எவரையும் தவறவிடாதீர் கள், ஒவ்வொருவரையும் கணக்கெடுங்கள்” என்ற மையக் கருத்தை வலியுறுத்தி உறுதிமொழி ஏற்கப்பட் டது. இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.