கோவை, ஜூன் 7- நிமிர்வு கலையகம் மற்றும் பேரூ ராதீன கல்வி நிறுவனங்கள் சார்பில் ஜூன் 18 ஆம் தேதியன்று கோவை யில், உலகிலேயே முதல் முறையாக பறை இசை மாநாடு நடைபெற உள்ள தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை, உப்பிலிபாளையம், ஆடிஸ் வீதியில் உள்ள கோயமுத் தூர் பத்திரிகையாளர் மன்றத்தில், பேரூர் ஆதினம் சாந்தலிங்க அடிக ளார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், நிமிர்வு கலையகம், கடந்த 12 ஆண்டுகளாக பறை இசையை உலகம் முழுவ தும் கலைப்பணிகளை ஆற்றி வரு கிறது. இக்கலையகம் பறை இசை கற்பிக்க, இசைப்பள்ளிகளை உரு வாக்கி, கலைஞர்களுக்கு உதவிட மக் கள் உதவிக்குழு என்ற திட்டத்தை உருவாக்கி, நூல்கள் மற்றும் களப் பணிகளுக்கு பறை ஆய்வு நடுவம் என பல்வேறு தளங்களில் இயங்கி வருகிறது. இந்நிலையில், ஆதித்தமி ழர்களின் இசைக்கருவியான பறையை, மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு முன்முயற்சியாக, நிமிர்வு கலை யகம் மற்றும் பேரூராதீன கல்வி நிறு வனங்கள் இணைந்து உலகின் முதல் பறை இசை மாநாடாக உலகப் பொது இசை பறை மாநாடு - 2023 நடத்துகிறது. கோவை, பேரூர் பகுதியில் உள்ள தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை மற்றும் அறிவியல் தமிழ்க் கல்லூரியில் வரும் ஜூன் 18 ஆம் தேதியன்று காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த பறை இசை மாநாடு நடைபெற உள்ளது. பறை இசையை அடுத்த தலைமுறையினரி டம் பண்பாட்டு வடிவமாக மட்டுமல் லாமல், ஒரு பயன்பாட்டு இசைக் கருவியாக பழக்கப்படுத்த வேண் டிய தேவை நம்மிடம் உள்ளது.
அதற் கான ஒரு முன்முயற்சியாக 100க்கும் மேற்பட்ட தொல்லிசை கருவிகள் கண் காட்சி நடத்தப்பட உள்ளது. பாரெங் கும் உள்ள பறைக்குழுக்களை பொதுமக்களுக்கு அறிமுகம் செய்ய வும், நாட்டார் கலைஞர்களுக்கான தமிழ்நாடு அரசின் நலத்திட்ட உதவி கள் பற்றிய தகவல்களை கொண்டு சேர்க்கவும் கண்காட்சி அரங்கில் ஏற் பாடுகள் செய்யப்பட்டுள்ளது. உலக பொதுமறை திருக்குறள் போல, அனைத்து மக்களுக்குமான பொது இசையாக உள்ள பறை இசையை உலகப்பொது இசை என் றழைக்கலாம். அதன் சிறப்பை எடுத் துரைக்கும் வகையில் 1,330 திருக் குறள் பறைப்படை என்ற பெயரில் 1.330 பறைகளை ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் முழங்க உள்ளது. தென் மாவட்டங்கள், கிராமப்புற பகுதிகள் மற்றும் பழங்குடி மக்களிடமும் உள்ள இசைக்கருவிகளின் கலை நிகழ்ச்சி கள் நடைபெற உள்ளது. பறை கலை ஞர்களை பெருமிதப்படுத்தும் வகை யில். பறைக்காக பணி செய்த கலை ஞர்கள், எழுத்தாளர்கள், அமைப் பினருக்கு கலையக விருதுகள் வழங் கப்பட உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ளும் தமிழ்நாடு அர சின் அமைச்சர் பெருமக்கள் விருது களை வழங்கி கெளரவிக்க உள்ள னர். சிறப்பு வாய்ந்த இந்த மாநாட்டில் தமிழ்நாடு முழுவதும் உள்ள பறை கலைஞர்களும், பெருமக்களும், அரசு அதிகாரிகளும் கலந்து கொள்ள உள் ளதாக, அவர் தெரிவித்தார்.