தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பேரூராட்சி மற்றும் நகராட்சி ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் தொடர் பாக துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, நகராட்சி ஆணையர் சோ. புவனேஷ்வரன், பொறியாளர் புவனேஷ்வரி, பேரூராட்சி செயல் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.