உடுமலை, டிச.28- தொழிலாளர்களை பழிவாங் கும் நோக்கில் செயல்படும் ஜெயின் இரிகேசன் நிர்வாகத்தை கண்டித்து தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம், உடுமலை தாலுகா, எலையமுத்தூர் பகுதியில் ஜெயின் இரிகேசன் சிஸ்டம்ஸ் லிட் என்ற விவசாய பொருள்கள் தயாரிக் கும் நிறுவனம் உள்ளது. இந்த தொழிற்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இங்கு வேலை செய்யும் தொழிலாளர்க ளுக்கு முறையாக மாதா மாதம் சம் பளம் வழங்காமல் நிர்வாகம் இழுத் தடித்து வந்தது. இதுதொடர்பாக சிஐடியு தொழிற்சங்கத்தின் மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தற் பொழுது முறையாக சம்பளம் வழங் கபட்டு வருகிறது. இந்நிலையில், இங்கு வேலை செய்யும் 29 தொழி லாளர்களை பழிவாங்கும் நோக்கில் மாநிலத்தின் பல இடங்களுக்கு பணி மாறுதல் செய்து நிர்வாகம் உத்தர விட்டுள்ளது. இதனை கண்டித்து திங்களன்று தொழிலாளர்கள் உள் ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர். இப்போராட்டம் இரண்டாவது நாளாக செவ்வாயன்றும் தொடர்ந் தது. அப்போது, நிறுவனத்தில் எவ் வித தவறுகளும் செய்யாத தொழி லாளர்களை பணி மாறுதல் செய்த உத்தரவை திரும்ப பெற தொழிலா ளர் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.