districts

img

வீட்டுமனை கேட்டு விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல். ஏப்.23- வீட்டுமனை கேட்டு விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம்,பள்ளிபாளை யம் ஒன்றியம் பாப்பம்பாளையத்தில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள், விவ சாய தொழிலாளர்களுக்கு வீட்டு மனைப் பட்டா கேட்டு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன் றியக் குழு உறுப்பினர் பார்வதி தலை மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இதில் மாவட்ட தலைவர் சி.துரை சாமி, மாவட்ட செயலாளர் வி.பி. சபா பதி, மாநில குழு உறுப்பினர் எஸ்.சம் பூர்ணம், கிளைச் செயலாளர் பாண்டி யன், சுந்தரராஜன் உட்பட திரளா னோர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து, நிர்வாக அதிகாரியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.