தோழர் பன்னீர்செல்வம் தொழிலாளர்களை சங்கமாக ஒன்றுபடுத்திய காரணத்திற்காக கொலை செய்யப்பட்டார் என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தபொழுது அன்றைய பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் முத்துக்குமாரை பாஜகவில் இணைத்துக்கொள்ளும் மிகப்பெரிய விழாவை நடத்தினர். கடந்த 26 வருடங்களுக்கு முன்பே, குற்றவாளிகளுக்குப் புகலிடம் வேண்டுமென்றால் பாஜகவில் அடைக்கலமாக வேண்டும் என்ற கலாச்சாரம் தொடங்கியதைப் பார்க்க முடியும்.
கே.காமராஜ் உலகத் தொழிலாளர்கள் இன்று பெற்றுவரும் பல்வேறு சட்ட உரிமை கள், சமூக பாதுகாப்புகள் அனைத் தும், உலகத்தில் பல்வேறு பகுதிக ளில் பல்வேறு காலகட்டங்களில் தொழிலாளர்கள் போராடி பெற்ற வையாகும். ஆளும் அரசுகளோ, முதலாளிகளோ தொழிலாளர்கள் மீது அக்கறை கொண்டு இவற்றை வழங்கவில்லை. கடந்த 140 வருடங் களுக்கு முன்பு தொழிலாளர்கள் தினசரி 16 மணி நேரம் முதல் 18 மணி நேரம் வரை வேலை செய்த அவல நிலை இருந்தது. போராடிப் பெற்ற உரிமை அமெரிக்காவில் உள்ள சிக் காகோ நகரில் 1886ஆம் ஆண்டு தொழிலாளர்கள் 8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர உறக்கம் என்ற முழக்கத்தை முன்வைத்து நீண்ட போராட்டத்தை நடத்தி பல்வேறு உயிர் தியாகங் களை செய்து, 8 மணி நேரம் வேலை உரிமையைப் பெற்றனர். அதற்குப் பின்தான் 8 மணி நேர வேலை என்பது பல நாடுகளில் நடைமுறைக்கு வந் தது. அந்த தியாகிகளை நினைவு கூர்ந்துதான் 1889ஆம் ஆண்டு முதல் மே தினத்தை உலக தொழிலாளி வர்க்கம் தொடர்ந்து கொண்டாடி வருகிறது. அதுபோலவே 1917ஆம் ஆண்டு சோவியத்ரஷ்யாவில் தோழர் லெனின் தலைமையில் நடந்த புரட்சி யின் மூலம் அமைந்த சோசலிச அரசு தான், தொழிலாளர்களுக்கு பல சட்ட உரிமைகளையும், சமூகப் பாதுகாப் புக்களையும் வழங்கினர். அதற்கு பின்னர் உலகத்தில் பல பகுதிகளில் சோவியத்தைப் போல எங்களுக் கும் சட்ட, சமூக பாதுகாப்பு வேண்டு மென்று தொழிலாளர்கள் போராடி யதன் பயனாக பல சட்ட உரிமைகள் கிடைத்தன.
பஞ்சப்படி போராட்டம்
இன்று திருப்பூரில் பனியன் தொழிலாளர்கள் பெற்று வரும் சம் பள உயர்வு, பஞ்சப்படி போன்ற பொருளாதார உரிமைகளும் கடந்த காலத்தில் பனியன் தொழிலாளர் கள் பல போராட்டங்களை நடத்தித் தான் பெற்றனர். 1984ஆம் ஆண்டு பனியன் தொழி லாளர்கள் பஞ்சப்படி கோரிக் கையை முன்வைத்து போராட்டத் தில் இறங்கினார்கள். தங்களுக்கு உரிமை கிடைக்கும் வரை போராடு வது என்று சபதம் எடுத்து சுமார் 127 நாட்கள் பசியோடும், பட்டினியோ டும் ஒன்றுபட்ட ஒரே மனிதனாக போராடினார்கள். அதன் விளை வாக பனியன் முதலாளிகள் வேறு வழியின்றி பஞ்சப்படி கொடுப்ப தற்கு ஒப்பந்தம் போட்டார்கள். பனியன் தொழில் வரலாற்றில் 1984ஆம் ஆண்டுவரை பஞ்சப்படி என்பது இல்லை. இந்த நீண்ட போராட்டத்திற்கு பின்னர் பனியன் தொழிலாளர்கள் முதல்முறையாக நாள் ஒன்றுக்கு, ரூ.1.77 பைசா பஞ் சப்படி பெற்றார்கள். 2024ஆம் ஆண்டு, இன்றைய தினம் 8 மணி நேர வேலைக்கு ஒவ்வொரு தொழிலா ளிக்கும் ரூ.206 பஞ்சப்படியாக கிடைக்கிறது. ஒவ்வொரு பனியன் தொழிலாளியும் தற்பொழுது நாள் ஒன்றுக்கு ரூ.25 பயணப்படியாக பெறுகிறார்கள். அதுபோல பீஸ் ரேட் முறையில் பணிபுரிந்த பனியன் தொழிலாளர்களுக்கு 1977ஆம் ஆண்டு வரை போனஸ் கிடையாது. அதற்கு பின்னால் தொழிலாளர்கள் ஒன்றுபட்ட போராட்டத்தின் மூலம் இப்பொழுது போனஸ் பெற்று வருகி றார்கள். இன்று பனியன் தொழிலா ளர்கள் பெறக்கூடிய அனைத்து உரிமைகளும் போராடி பெற்ற உரிமைகளே.
உரிமைக்குரல் எழுப்பிய தோழர்
அதன்படி திருப்பூர் பி.என்.ரோட் டில் உள்ள ஜீனா கார்மெண்ட்ஸ் நிறு வனத்தில் ஒப்பந்தங்களை அம லாக்க வேண்டும் என்று, தொழிலா ளர்களை ஒன்றுபடுத்தும் பணியில் அப்பகுதியில் குடியிருந்த சிஐடியு சங்க தலைவரும், மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி ஊழியருமான தோழர் பன்னீர்செல்வம் ஈடுபட்டார். அவ்வாறு தொழிலாளர்கள் சங்கரீ தியாக திரண்டு விட்டால் தங்களு டைய கொள்ளை லாபம் பறிபோகும் என்ற கோபத்தில், தொழிலாளர் களை சங்கத்தில் ஒன்றுதிரட்ட முயற் சித்த தோழர் பன்னீர்செல்வத்தை கூலிக்கு ஆட்கள் வைத்து கொலை செய்யும் முயற்சியில் அந்த நிர்வா கம் ஈடுபட்டது.
இரண்டு ஜோடி செருப்பு
1998 மார்ச் 17 அன்று மாலை 7 மணியளவில் கிளை அலுவல கத்தில் இருந்து தோழர் பன்னீர் செல்வம் சைக்கிளில் வீட்டுக்கு சென் றபொழுது, வழிமறித்து சிலர் கொடூ ரமான முறையில் அவரைப் படு கொலை செய்தனர். படுகொலை நடந்த இடத்தில் இரண்டு ஜோடி செருப்புகள் மட்டும் கிடைத்தது. மற்றபடி எந்த ஆதாரமும் இல்லை. பொதுவாக காவல்துறை பன் னீர்செல்வத்திற்கு எதிரிகள் யாரா வது இருக்கிறார்களா? என்ற முறை யில் விசாரித்துக் கொண்டிருந்தனர். கட்சி, காவல்துறை அதிகாரிகளை சந்தித்து பேசியது. இரண்டு ஜோடி செருப்பில் ஒன்று சில தினங்களுக் குள் வாங்கிய கதர்க்கடை புது செருப்பு, இன்னொன்று பழைய பாட்டா செருப்பு. கதர்க்கடை புதிய செருப்பு எந்த கடையில் விற்பனை யானது என்று காவல்துறை அதி காரிகளும், கட்சி தோழர்களும் விசா ரித்தனர். அந்த செருப்பு பாண்டி யன்நகரில் ஒரு கடையில் வாங்கப் பட்டது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து விசாரணை மேற் கொண்டபோது, பாண்டியன் நகர் கட்சிக் கிளைக்கு வரக்கூடிய ஒருவ ருடன் வந்தவர், இந்த செருப்பை போட்டு வந்திருந்தார் என்று தெரிந் தது. கிளைக்கு வருபவரை பற்றி விசாரித்தபொழுது பாண்டியன் நக ரில் தான் குடியிருக்கிறார். ஜீனா கார் மெண்ட்ஸில் வேலை செய்கிறார் என்பது தெரிந்தது. இதையடுத்து காவல் துறை, இரவு சுமார் ஒரு மணி அளவில் அவர் தங்கியிருக்கும் வீட்டுக்குச் சென்று அவரை கைது செய்தது. அவர் தங்கியிருந்த வீட்டின் உரி மையாளரிடம், அந்த தொழிலாளி யைப் பற்றியும், அவருடன் யாரா வது தங்கி இருந்தார்களா என்று கேட் டபோது, சில நாட்களாக மூன்று, நான்கு பேர் தங்கி இருந்தார்கள் என்ற விபரத்தை வீட்டு உரிமை யாளர் கூறினார். கைது செய்யப்பட் டவரிடம், உடன் தங்கியிருந்தவர் களை பற்றி கேட்டபோது, எங்கள் காண்ட்ராக்டர் முத்துக்குமார் தான் அவர்களை எங்களோடு தங்க வைத் தார் என்று தெரிவித்தார். அதன் பிறகு முத்துக்குமாரிடம் காவல் துறை விசாரித்து, பெங்களூரில் இருந்து இங்கு வந்து தங்கிய இரு வரை வரவழைத்தனர். அவர்களிடம் விசாரித்தபொழுது குணா என்பவ ருக்கு, இந்த கதர் கடை செருப்பு பொருத்தமாக இருந்தது. காவல் துறை இதை எங்கே வாங்கினீர் என்று கேட்டபொழுது குணா விவரத்தை சொல்கிறார். அவர்தான் பாண்டி யன் நகர் கிளைக்கு தொழிலாளியு டன் வந்தவர் என்று தெரியவந்தது. ஆனால் கொலைக்கும், தனக்கும் சம்பந்தமில்லை என்று மறுத்தார். எனினும் அவரது சொந்த ஊரான விழுப்புரத்தில் உள்ள குடும்பத்தின ரிடம் விசாரிக்க வேண்டும் என்று வீட்டு முகவரியை காவல் துறையி னர் கேட்டபொழுது, நான் உண்மை யைச் சொல்லி விடுகிறேன் என்று குணா நடந்த விவரங்களைச் சொன்னார். தோழர் பன்னீர்செல்வத்தை முத்துக்குமாரும், குணாவும் சேர்ந்து கொலை செய்ததையும், அப்பொழுது முத்துக்குமார் வெட்டி யதில், குணாவின் தோள்பட்டை யிலும் வெட்டு விழுந்ததாக காயத்தை காட்டினார். அதற்கு பின் னால் முத்துக்குமாரை தனியாக வர வழைத்து விசாரித்தபொழுது முத் துக்குமாரும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
தீர்த்துக் கட்டினால்தான் வேலை!
எதற்காக கொலை செய்தீர்கள் என்று போலீஸ் கேட்டபொழுது, “பன்னீர்செல்வத்தை தீர்த்துக் கட்டி னால்தான் உனக்கு தொடர்ந்து கம் பெனியில் காண்ட்ராக்ட் வேலை கிடைக்கும், இல்லை என்றால் உனக்கு இங்கு வேலை இல்லை!”, என்று எங்கள் முதலாளி சொன்னார். எனவே வேறு வழியில்லாமல் பெங்களூரில் இருந்து கொலை செய்ய ஆட்களை அழைத்து வந்தேன். அவர்கள் பயந்து ஓடி விட்டார்கள். எனவே நானே நேரடி யாக கொலை செய்தேன் என்று ஒத்துக்கொண்டார். அதைத் தொடர்ந்து, கம்பெனி உரிமையாள ரையும் கைது செய்து, மூன்று பேரை யும் காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். வழக்கு நடைபெற்று சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்து வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு அவர்கள் வெளியே வந்தனர்.
குற்றவாளியை புனிதப்படுத்திய பாஜக!
தோழர் பன்னீர்செல்வம் தொழி லாளர்களை சங்கமாக ஒன்றுப டுத்திய காரணத்திற்காக கொலை செய்யப்பட்டார் என்பது ஆதாரப்பூர் வமாக நிரூபிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தபொழுது அன்றைய பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் (இப்போதைய ஜார்கண்ட் ஆளுநர்) சி.பி.ராதாகிருஷ்ணன் முன்னிலை யில் முத்துக்குமாரை பாஜகவில் இணைத்துக் கொள்ளும் மிகப்பெ ரிய விழாவை நடத்தினர். கடந்த 26 வருடங்களுக்கு முன்பே, குற்றவா ளிகளுக்குப் புகலிடம் வேண்டு மென்றால் பாஜகவில் அடைக்கல மாக வேண்டும் என்ற கலாச்சாரம் தொடங்கியதைப் பார்க்க முடியும். இப்பொழுது பாஜக ரவுடிகள் புகலி டமாக இருப்பதையும் பார்க்க முடி யும். பாஜக அதிகாரத்திற்கு வந்த தற்கு பின்னால் 44 தொழிலாளர் நலச் சட்டங்களை 4 சட்டங்களாக மாற்றிய துடன், தொழிலாளர்கள் உரிமைகள் முழுவதையும் பறிக்கும் நடவடிக் கையில் ஈடுபட்டு வருகிறது. 140 ஆண்டுகளுக்கு முன்பு போராடிப் பெற்ற 8 மணி நேர வேலை உரி மையை, இப்பொழுது இந்தியாவில் 12 மணி நேரம் என ஒன்றிய அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்திருக்கிறது. தொழிலாளர்கள், தற்போது இருக்கும் உரிமை களை பாதுகாக்க, ஒன்றுபட்டு சங்கரீ தியாக திரள வேண்டும். அப்பொழு துதான் உரிமைகளைப் பெற முடி யும். தியாகி பன்னீர்செல்வம் நினைவு தினத்தில் தொழிலாளர் களுடைய உரிமைகளை பாதுகாக்க நாம் சபதம் ஏற்போம்!