காட்டுயானை தாக்கியதில் தொழிலாளி பலி
உதகை, நவ.25- கூடலூர் அருகே காட்டுயானை தாக்கியதில், தேயிலைத் தோட்ட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரி டையே சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நீலகரி மாவட்டம், கூடலூர் மரப்பாலம் அருகே உள்ள பால்மேடு பகுதியைச் சேர்ந்தவர் பிரான்சிஸ். இவர் அங் குள்ள அரசு தேயிலைத் தோட்டத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் வெள்ளியன்று இரவு பணி முடிந்து, வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தர். அப்போது அங்கு புதர் மறைவில் காட்டு யானை ஒன்று நின்றுள்ளது. புத ராக இருந்ததால் பிரான்சிசுக்கு தெரியவில்லை. அப்போது, வெளியே வந்த காட்டுயானை கண்டு அதிர்ச்சியடைந்து, தப்பி யோட முயன்றார். ஆனால், யானை அவரை துரத்தி சென்று, தூக்கி வீசி காலில் போட்டு மிதித்தது. இதில் படுகாயமடைந்த பிரான்சிஸின் அலறல் சத்தம் கேட்டு, அங்கிருந்த பொதுமக் கள் திரண்டு வந்து பார்த்தனர். அப்போது அங்கு காட்டு யானை ஆக்ரோஷத்துடன் நிற்பதும், பிரான்சிஸ் படுகாயங்க ளுடன் கிடப்பதும் தெரியவந்தது. தொடர்ந்து அவர்கள் கூக் குரல் எழுப்பி காட்டு யானையை விரட்டி அடித்தனர். இதன் பின் படுகாயங்களுடன் ரத்தவெள்ளத்தில் மயங்கி கிடந்த பிரான் சிசை மீட்டு உதகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், வரும் வழி யிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தக வலறிந்ததும் போலீசார் மற்றும் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். யானை தாக்கி தொழிலாளி இறந்த சம்ப வம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பாலமேடு பகுதி யில் கடந்த சில நாட்களாகவே வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. எனவே, ஊருக்குள் நுழையும் காட்டு விலங்குகளை உடனடியாக அடர்ந்த காட்டுக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அரசுப்பள்ளியில் அமைச்சர் ஆய்வு
நாமக்கல், நவ.25- அத்தனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் அமைச்சர் அன் பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள அத்தனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீரென்று ஆய்வு மேற் கொண்டார். அப்போது, மாணவ, மாணவிகளிடம் மதிய உணவு, ஆசிரியர்கள் கற்பிக்கும் முறை பற்றி கேட்டறிந் தார். பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் பள்ளி நிறை, குறை களையும் கேட்டறிந்தார். அப்போது பள்ளியில் கழிப்பறை கள் பற்றாக்குறையாக இருப்பதாகவும், அங்கன்வாடி கட்ட டம் பழுதடைந்துள்ளதாகவும் அதற்கு புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும் என ஆசிரியர்கள் சார்பில் கோரிக்கை வைத்த னர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பேரூராட்சி மூலமாக கட்டடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இரும்பு பொருட்கள் திருட்டு: 7 பேர் மீது வழக்கு
ஈரோடு, நவ.25- நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை அருகே உள்ள செங் காடு பகுதியைச் சேர்ந்தவர் சுசீந்திரன் (26). இவர் ஈரோடு - பெருந்துறை சாலையிலுள்ள பிரபல தனியார் கட்டுமான நிறு வனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். அந்த கட்டுமான நிறுவனத்துக்கு சொந்தமான இரும்பு பொருட் கள், பெயிண்ட் டிரம்கள் என 5 டன் எடையிலான பழைய இரும்பு பொருட்கள் நிறுவனத்தின் கிடங்கில் போட்டு வைக் கப்பட்டிருந்தன. அந்த கிடங்கில் ராஜேஷ் என்பவர் காவலாளி யாக வேலை பார்த்து வந்தார். இந்த பழைய இரும்பு பொருட் களை அலாவுதீன் பாஷா என்பவர் வாங்கி செல்வது வழக் கம். இந்நிலையில், கட்டுமான நிறுவனத்தின் மேற்பார்வையா ளர் சுசீந்திரன் கடந்த நவ.16 ஆம் தேதியன்று கிடங்குக்கு சென்று பார்த்தபோது, அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான 5 டன் பழைய இரும்பு பொருட்களை காண வில்லை. இதையடுத்து நடைபெற்ற விசாரணையில் பழைய இரும்பு பொருட்களை வாங்கிச் செல்லும் அலாவூதீன் பாஷா மற்றும் வாட்ச்மேன் ராஜேஷ் மற்றும் 5 பேர் கொண்ட கும்பல், ஒரு வேனில் 5 டன் பழைய இரும்பு பொருட்களை எடுத்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சுசீந்திரன் வீரப்பன்சத்திரம் காவல் நிலை யத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் அலாவுதீன் பாஷா, ராஜேஷ் மற்றும் இரும்பு பொருட்களை திருடி சென்ற 5 பேர் என 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குளம், குட்டைகளில் மண் எடுக்க அனுமதிக்க அகல்விளக்கு தயாரிப்பவர்கள் வலியுறுத்தல்
தருமபுரி, நவ.25- குளம், குட்டைகளில் மண் எடுக்க அனு மதிக்க வேண்டும் என அகல்விளக்கு தயா ரிப்பவர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழ்நாட்டில். கார்த்திகை தீப திருநாள், வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் அகல் விளக்குகளில் எண்ணை ஊற்றி வீடுகளில் தீபம் ஏற்றி வழி படுகின்றனர். காத்திகை தீப திருநாளை யொட்டி மண்பாண்ட தொழிலாளர்கள் கார்த் திகைக்கு 2 மாதத்திற்கு முன்பிருந்தே அகல் விளக்கு தயாரிக்கும் பணியை துவங்கி விடு வார்கள். அதேபோல் தருமபுரி அருகேயுள்ள அதியமான்கோட்டை, கிருஷ்ணாபுரம், மல்லி குட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிக ளில் மண்பாண்ட தொழிலாளர்கள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பிருந்து அகல்விளக்கு தயாரிக்கும் பணியினை துவங்கினர். கடந் தாண்டு 1000 விளக்குகள் ரூ.600 முதல் 700 ரூபாய் வரை விற்கபட்ட நிலையில், இந் தாண்டு 1000 விளக்குகள் ரூ.1000க்கு விற்கப் படுவதால் தயாரிப்பாளர்கள் மகிழ்சியடைந் துள்ளனர். மேலும், இங்கு தயாரிக்கப்படும் விளக்கு களை தருமபுரி மாவட்டம் மட்டுமல்லாது சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, ராசிபுரம் உள் ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வியா பாரிகள் வந்து மொத்தமாக வாங்கி செல் கின்றனர். இந்நிலையில், ஏரி, குளம், குட்டை களில் இருந்த மண் எடுத்து மண்பாண்ட தொழில் செய்து வருகிறோம். மண் எடுப்ப தற்காக அனுமதி வழங்கிய அரசு தற்போது இரண்டு வருடமாக மண் எடுக்க அனுமதி வழங்காமல் கெடுபிடி செய்து வருகிறது. மேலும் ஓசூர், அதியமான்கோட்டை தேசிய நெடுஞ்சாலைகளுக்கு மண் எடுப்பதால், மண் கிடைக்காமல் தங்களால் போதிய அள வில் விளக்குகளை தயாரிக்க முடியாமல் இருந்து வருகிறோம். ஆகையால் தமிழக அர சும், மாவட்ட நிர்வாகமும் தங்களுக்கு குளம், குட்டைகளில் மண் எடுக்க அனுமதிக்க வேண் டும் என அகல்விளக்கு தயாரிப்பாளர்கள் வலி யுறுத்தியுள்ளனர்.
ஒரு டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்
நாமக்கல், நவ.25- நாமக்கல்லில் தடை செய்யப்பட்ட ஒரு டன் புகையிலைப் பொருட்களை போலீசார் வெள்ளியன்று பறிமுதல் செய்தனர். தமிழ்நாட்டில் புகையிலைப் பொருட் கள் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், பிற மாநிலங்களில் இருந்து விதிகளை மீறி கடத்தி வந்து பலர் விற்பனை செய்து வருகின்றனர். போலீசாரும் அவர்க ளைக் கண்டறிந்து கைது செய்து வருகின்ற னர். இந்நிலையில், நாமக்கல் - திருச்செங் கோடு சாலையில் வியாழனன்று இரவு போலீ சார் ரோந்து மற்றும் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சாலையோரம் சந்தேகத்துக்குரிய வகையில் நின்றிருந்த லாரி மற்றும் சொகுசு காரை சோதனை செய் தனர். அதில் தடை செய்யப்பட்ட ஒரு டன் புகையிலைப் பொருட்கள் 70 மூட்டைகளில் கடத்தி வந்தது தெரியவந்தது. மேலும், பாது காப்புக்காக சொகுசு காரில் நான்கு பேர் வந்த தும் கண்டறியப்பட்டது. இதையடுத்து நாமக் கல் நகரப் போலீசார் புகையிலைப் பொருட் களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக திருநெல்வேலியைச் சோ்ந்த சேர்மன் (24), அருள்ரவி (34), சிவலிங்கம் (24), வேலு கண்ணு (27) ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையி லைப் பொருட்கள், சொகுசு கார் ஆகியவற் றின் மொத்த மதிப்பு ரூ.36 லட்சமாகும். இது தொடர்பாக கைதான நான்கு பேரிடமும் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வரு கின்றனர்.
ஜெர்மன் உணவு திருவிழா துவக்கம்
கோவை, நவ.25- கோவையில் ஜெர்மன் நாட்டின் உணவுத் திருவிழா வெள்ளியன்று துவங்கியது. கோவை - அவிநாசி சாலையிலுள்ள கிராண்ட் ரீஜெண்ட் ஹோட்டலில் 3 நாட்கள் நடைபெறும் ஜெர்மன் உணவு திரு விழாவை ஜெர்மன் தூதரக துணைத்தூதர் மைக்கலே குச்லர் தொடங்கி வைத்தார். கோவையில் முதல்முறையாக நடை பெறும் ‘ஜெர்மன் அக்டோபர் ஃபெஸ்ட்’ என்ற இந்த உணவுத் திருவிழாவை கோவையில் உள்ள கோத்தே சென்ட்ரம் என்ற அமைப்பு நடத்துகிறது. நவ.26 ஆம் தேதி (இன்று) வரை 3 நாட்களுக்கு நடைபெறவுள்ள விழாவில், ஜெர்மானிய இசைக் குழுவினரும் பங்கேற்றுள்ளனர். அப்போது, ஜெர்மன் தூதரக துணைத்தூதர் மைக்கேல் குச்லர் பேசுகையில், உலகின் மாபெரும் விழாவாக கொண்டாடப்படும் ‘அக்டோபர் ஃபெஸ்ட்’ விழா கலாசாரம், பாரம்பரியம் மற்றும் கொண்டாட் டத்தின் உச்சமாக திகழ்கிறது. 1872 ஆம் ஆண்டு முதல் அக் டோபர் ஃபெஸ்ட் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நமது கொண்டாடட்டத்தின் சின்னமாக வளமிக்க கலாச்சாரத்தை உணர்த்துவதோடு, அக்டோபர் பெஸ்ட் விழாவை உயிரோட்ட முள்ளதாக மாற்றுவோம். எல்லைகளையும், தலைமுறை களையும் தாண்டி மக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து ஒற்றுமையாக கொண்டாடுவோம், என்றார்.
வங்கி சேமிப்பு கணக்கிலிருந்த பணம் திருட்டு?
கோபி, நவ.25- கூட்டுறவு வங்கி சேமிப்பு கணக்கிலிருந்த பணம் திருட்டு போனதால், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குழவிகரடு பகுதியைச் சேரந்தவர் சாந்தாள். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, வெள்ளாளபாளையம் தொடக்க கூட்டுறவு வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ரூ.90 ஆயிரம் தனது சேமிப்பு கணக்கில் செலுத்தியுள்ளார். இந்நி லையில், புதனன்று சாந்தாள் தனது குடும்ப செலவுக்காக பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது வங்கி கணக்கில் ரூ.1200 மட்டுமே உள்ளது என வங்கி ஊழியர்கள் தெரி வித்துள்ளனர். அதுபற்றி விசாரித்தபோது, வங்கி தரப்பில் முன்னுக்கு பின் முரனாக பதில் கூறியதை கண்டு அதிர்ச்சி யடைந்தார். இதுகுறித்து வங்கி அதிகாரியிடம் கேள்விகளை எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து வங்கி நிர்வாகத்தினர் சமாதானப்படுத்தி, வங்கி ஆவணத்தில் கையெழுத்து பெற்றுக்கொண்டு அவர் கேட்ட தொகை யினை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சாந்தாள் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தெரிவித்துள்ளார். இச் சம்பவம் காட்டு தீ போல் பரவியதால், வங்கி ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், வங்கி ஊழியர்கள் சாந் தாள் வீட்டிற்கு நேரில் சென்று வங்கியில் நடைபெற்ற முறை கேடு குறித்து உன்னிடம் எந்த ஆதாரமும் இல்லை இது குறித்து யாரிடமும் தெரிவிக்கக்கூடாது. எனவே சமாதான மாக சென்று விடலாம் என கூறியதாக தெரிகிறது. மேலும், சாந்தாளுக்கு ஆதரவாக பொதுமக்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஊழியர்களிடம் விளக்கம் கேட்டபோது, சாந்தாள் கூறிய குற்றச்சாட்டுக்கு எந்த ஆதார மும் இல்லை என்றும், வங்கி தரப்பில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி யில் உரிய விசாரணை நடத்தி, பொதுமக்களின் சேமிப்பு பணத்திற்கு தகுந்த பாதுகாப்பினை ஏற்படுத்தி தர வேண்டும் என வங்கியின் வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.
பட்டுக்கூடு ஏலம்
தருமபுரி, நவ.25- தருமபுரியில் செயல் பட்டு வரும் பட்டுக்கூடு ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்து விவ சாயிகள் பட்டுக்கூடுகளை கொண்டு வருகின்றனர். அதன் படி, வெள்ளியன்று 1939 கிலோ வெண் பட்டுக்கூடுகள் கொண்டு வரப்பட்டன. இதில் அதிகபட்சமாக ரூ.505க்கும், குறைந்தபட்ச மாக ரூ.360க்கும், சராசரி யாக ரூ.426க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.8.26 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது.
மின்வாரியத்திலுள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை
அவிநாசி, நவ.25- அவிநாசியில் தமிழ்நாடு மின்வாரிய ஜனதா தொழிலாளர் சங்க மாநில பொதுக்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடை பெற்றது. இப்பொதுக்குழு கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் கு. செல்வராஜ் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் சு.பாரி, பொருளாளர் எல்.ஜேம்ஸ் கென்னடி, துணைப் பொதுச் செய லாளர் இரா.வரதராஜன், மாநில அமைப்புச் செயலாளர் என். முத்துராமன் ஆகியோர் முன்னிலை வத்தனர். இதில் மின்வாரியத்தில் காலியாக உள்ள 60 ஆயிரத்துக் கும் மேற்பட்ட பணியிடங்களை, ஏற்கனவே இருந்த நடை முறைப்படி நேரடி நியமன அடிப்படையில் நிரப்ப வேண் டும். மேலும் சீருடை பணியாளர் வாரியத்துக்கு தானே பணி யமர்த்த வழிவகுத்தது போல, மின்வாரியத்துக்கும் அதிகாரம் வழங்க வேண்டும். 12(3) செட்டில்மெண்டில் விடுபட்ட ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தப்படுத்த வேண்டும். பணியமர்த்தப் பட்ட கேங்மேன்கள் சொந்த ஊர்களுக்கு மாறுதல் தொடர் பான ஆணை வழங்க வேண்டும். விடுபட்ட கேங்மேன்களை பணியமர்த்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
வாகனங்கள் பறிமுதல்: ரூ.2 லட்சம் அபராதம்
அவிநாசி, நவ.25 – அவிநாசியில் தகுதிச் சான்று இல்லாமல் வந்த வாகனங் களை வட்டார போக்குவரத்து அலுவலர் பாஸ்கரன் சனியன்று பறிமுதல் செய்து ரூ. 2லட்சம் வரை அபராதம் விதிக்கப் பட்டது. அவிநாசியில் பல்வேறு பகுதிகளில் வட்டார போக் குவரத்து அலுவலர் பாஸ்கரன், வாகனச் சோதனையில் ஈடு பட்டார். அப்போது, தகுதிச் சான்று, காப்புச் சீட்டு, அனுமதிச் சீட்டு உள்ளிட்டவை இல்லாமல் வந்த சுற்றுலா கார், ஆட்டோ மற்றும் அதிக பாரம் ஏற்றி வந்த லாரி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த வாகனங்களுக்கு மொத்தம் ரூ. 2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
ரூ.2.50 கோடி மதிப்பு கோவில் நிலம் மீட்பு
அவிநாசி, நவ.25 - அவிநாசி அருகே கானூர் கரிவிநாயகர், கருப்பராயசாமி கோவிலுக்கு சொந்தமான ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்பி லான நிலம் வெள்ளியன்று மீட்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம் சேவூர் அருகே கானூர் கிராமத்தில், கா.ச எண் 386ல் (பட்டா எண் 713) உள்ள 3.17 ஏக்கர் புஞ்சை நிலம் கரிவிநாயகர் மற்றும் கருப்ப ராயசாமி கோவிலுக்கு சொந்தமானது. இந்த நிலத்தை சில நபர்கள் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தனர். திருப்பூர் மண்டல இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணை யர் குமரதுரை அறிவுறுத்தல்படி, கோவிலுக்கு சொந்தமான நிலம் அளவீடு செய்யப்பட்டு, எல்லை கற்கள் நடப்பட்டு மீட்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, திருப்பூர் மாவட்ட உதவி ஆணையர் (கூடுதல் பொறுப்பு) ஜெயதேவி தலைமை யில், தனி வட்டாட்சியர் (ஆலய நிலங்கள்) ரவீந்தரன், அவிநாசி ஆய்வாளர் செல்வப்பிரியா ஆகியோர் முன்னி லையில் கோவில் நில ஆக்கிரமிப்பை மீட்டு, அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.
ஃபிட் இந்தியா உறுதிமொழி ஏற்பு
திருப்பூர், நவ. 25 - திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் அலகு-2 சார்பாக சனியன்று கல்லூரி வளாகத் தில் ஃபிட் இந்தியா உறுதிமொழி எடுக்கப்பட்டது. கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தலைமையில் என்எஸ்எஸ் திட்ட அலுவ லர் மோகன் குமார் முன்னிலை வகித்தார். தமிழ் துறை பேராசி ரியர் பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டு பேசுகையில், வெளிப்புற விளையாட்டு, உடற்பயிற்சி, உடற் செயல்பாடு கள் தங்களது அன்றாட வழக்கத்தில் ஒரு பகுதியாக சேர்த்து கொள்வது மனதிற்கும், உடலுக்கும் நல்லது, அனைவரும் தினந்தோறும் 30 நிமிடமாவது உடற்பயிற்சி செய்ய வேண் டும், என்றார். மாணவ செயலர்கள் மதுகார்த்திக், தீபன் சந் தோஷ், செர்லின் ஆகியோர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். நவம்பர் 15 முதல் டிசம்பர் 15ஆம் தேதி வரை ஃபிட் இந்தியா மாதமாக கடைப்பிடிக்கவும், இதில் ஏதேனும் ஒரு ஆறு நாட்கள் ஃபிட் இந்தியா வாரமாக கடைபிடிக்கவும் மத் திய இளைஞர் நலத்துறை அறிவுறுத்தல்படி இந்நிகழ்ச்சி நடத் தப்பட்டது.
சுரங்கத்துறை ஆணையர் அறிக்கையை அரசு விரைந்து செயல்படுத்த வலியுறுத்தல்
திருப்பூர், நவ. 25 – தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப் பாயத்தில் தமிழ்நாடு புவியியல் மற்றும் சுரங்கத் துறை ஆணையர் சமர்ப்பித்தி ருக்கும் அறிக்கையை மிகப்பெரிய நிர் வாக சீர்திருத்தமாகவே கருத வேண்டி யுள்ளது என்று தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் மற்றும் விவசாயி கள் பாதுகாப்புச் சங்கம் ஆகியவை கூறி யுள்ளன. கல்குவாரி கிரசர் தொடர்பாக தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தின் ஜெகநாதசாமி 2022-இல் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை யில், தற்போதைய நடைமுறை அல் லது அமைப்பில் உள்ள குறைபாடு களை சரி செய்வதற்கு மற்றும் சிக்க லைத் தீர்க்கக்கூடிய ஒரு அறிக்கையை தாக்கல் செய்யவும், ஜிபிஎஸ் அல்லது புதிய நவீன கருவிகளை பொறுத்தி ஒவ் வொரு நடையையும் கண்காணிக்கும் படி ஒரு அறிக்கையை தாக்கல் செய்யு மாறு நீதிபதி அறிவுறுத்தினார். அதன் அடிப்படையில் புவியியல் மற்றும் சுரங்கத் துறை ஆணையர் கடந்த 17ஆம் தேதி தென் மண்டல தேசிய பசு மைத் தீர்ப்பாயத்தில் ஒரு அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். ஆணையரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள பல்வேறு விபரங்கள் கனிமத் துறையில் மிகப் பெரிய நிர்வாக சீர்திருத்தமாகவே கருத வேண்டி உள்ளது. பல்வேறு ஊழல் முறைகேடுகளுக்கும், சட்ட விரோத கனிமக் கொள்ளைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் என்ற எதிர் பார்ப்பு உள்ளது. எனவே இதனை அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும். கனிம வளத்தை வெட்டி எடுத்து பயன்படுத்துவதில் கடும் விதிகள் பின்பற்றப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். விதிமீறலில் ஈடுபடுவோர் மீது கருணையின்றி கடும் நடவடிக்கை எடுக்க வழிவகை செய்ய வேண்டும் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கமும், தமிழ்நாடு சுற்றுச் சூழல் பாதுகாப்பு இயக்கமும் கூறியுள் ளன. அத்துடன், சட்ட விரோத வெடி மருந்து புழக்கத்தை கட்டுப்படுத்த தேவையான வழிகாட்டு நெறிமுறை கள், விதிகள் வகுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். மாசு கட்டுப்பாட்டு வாரி யத்தின் ஏர்கேர் சென்டர் உடன் அனைத்து கல்குவாரி, கிரசர் - எம்.சாண்ட் யூனிட் செயல்பாடுகளை 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகை யில் இணைத்தும், 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் தானியங்கி முறையில் அமைந்த கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவதற்கான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர்.
திருப்பூரில் வைரஸ் காய்ச்சல் அதிகரிப்பு: அரசு மருத்துவமனையில் சிறப்பு படுக்கை வசதி
திருப்பூர், நவ. 25 - திருப்பூரில் வைரஸ் காய்ச்சல் அதிக ரித்து வருவதால், சிறப்பு படுக்கை வசதி களை ஏற்படுத்தி, தீவிர கண்காணிப்பு செய்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ள னர். கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்க ளில் பருவமழை பெய்து வருவதால், அதிக குளிர் காற்று வீசுகிறது. இதனால் வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. சிறிய வர்கள் முதல் பெரியவர்கள் வரை பலருக் கும் வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவி வரக் கூடிய நிலையில், கோவையில் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவைக்கு மிக அருகாமையில் உள்ள மாவட்டமான திருப்பூர் மாவட்டத்திலும் காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக திருப்பூர் அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனையில் தினந்தோ றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உள் நோயா ளிகளாகவும், புற நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். சுழற்சி முறை யில் மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பில் பணியாற்றி வருகின்றனர். காய்ச்சல் காரண மாக அனுமதிக்கப்படுபவர்களுக்கு சிறப்புப் படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், ப்ளூ வைரஸ் காய்ச்சல் தொற்று பரவு கிறதா என்பது குறித்து ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. பரிசோதனை முடிவு வரும் வரை மருத்துவர்கள் கண்கா ணிப்பிலேயே அவர்கள் இருக்க வைக்கப்ப டுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் காய்ச்சல் தொற்று கண்டறியப்ப டுபவர்கள் முகக்கவசம் அணிந்து கொள்ள வும், மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்ற னர். சாதாரண காய்ச்சல் கண்டறியப்பட்டா லும் உடனடியாக மருத்துவரை அணுகி மருத் துவ ஆலோசனை பெற வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இதுகுறித்து திருப்பூர் அரசு மருத்துவ மனை மருத்துவர் செண்பகஸ்ரீ கூறுகையில், கடந்த மாதம் காய்ச்சல் காரணமாக 70 பேர் மருத்துவமனைக்கு வந்திருந்தனர். இந்த மாதம் 120 நபர்களாக அதிகரித்துள்ளது. அனைவருக்கும் முறையாக ரத்தப் பரிசோ தனை உட்பட அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகிறது. டெங்கு காய்ச்சல் உள்ளவர்களுக்குச் சிறப்பு சிகிச்சை அளிக் கப்படுகிறது. தற்போதைக்கு 15 பேருக்கு டெங்கு காய்ச்சல் உள்ளது தெரியவந்துள் ளது. அவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், 60 படுக்கை வசதி யுடன்கூடிய சிறப்பு சிகிச்சை மையம் தயார் நிலையில் உள்ளது. தேவைப்பட்டால் கூடு தல் படுக்கை வசதிகள் அதிகரிக்கப்படும் என தெரிவித்தார்.
கூடுதல் ஆதார் மையம் அமைக்க கோரிக்கை
ஈரோடு, நவ.25- பெருந்துறையில் கூடுதலாக ஆதார் மையம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர். ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டாட்சியர் அலு வலகம், பெருந்துறை தலைமை தபால் அலுவலகம் மற்றும் பிஎஸ்என்எல் அலுவலகம் ஆகிய மூன்று இடங்களில், புதி தாக ஆதார் அட்டை விண்ணப்பிக்கும் மையங்கள் செயல் பட்டு வந்தன. இந்நிலையில், பிஎஸ்என்எல் அலுவலகத்தில் செயல்பட்டு வந்த மையம் மூடப்பட்டது. தற்போது, பெருந் துறை வட்டாட்சியர் அலுவலகம், பெருந்துறை தலைமை தபால் அலுவலகம் ஆகிய இடங்களில் மட்டுமே ஆதார் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. பெருந்துறை பகுதி யில் நிரந்தரமாக வசிக்கும் மக்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளா்கள் ஆதார் அட்டை கேட்டு விண்ணப்பித்து வருகின்றனர். இதில் வயதானவா்களின் கைரேகை சரியாக விழுவதில்லை. மேலும், ஆதார் மையங்களில் எப்போதும் அதிகளவில் கூட்டம் காணப்படுகிறது. இதனால், வயதானவர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. தொழிலா ளர்கள் விடுமுறை எடுத்து வந்து காத்து இருந்தாலும், சில சமயம் விண்ணப்பிக்க முடிவதில்லை. இதனை கவனத்தில் கொண்டு, பெருந்துறையில் கூடுதலாக ஆதார் மையத்தை அமைத்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமூக கட்டமைப்பை மாற்றியமைப்பவர்கள் வழக்கறிஞர்கள்
சேலம், நவ.25- சமூகத்தின் கட்டமைப்பை மாற்றி அமைப் பவர்களாக வழக்கறிஞர்கள் இருக்க வேண் டும் என சேலம் சட்டக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கல்லூரியின் தலைவர் உரை யாற்றினார். சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரியில் 25 ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரியின் விழா அரங்கத்தில் நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் முனைவர் பேகம் பாத்திமா வர வேற்றார். இதில், சிறப்பு விருந்தினராக வழக் கறிஞரும், முன்னாள் எம்பி.,யும், அகில இந் திய பார் கவுன்சிலின் முன்னாள் தலைவரு மான முனைவர் எஸ்.கே.கார்வேந்தன் பங் கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங் களை வழங்கினார். முன்னதாக, சட்டக்கல்லூரியின் தலைவர் த.சரவணன் பேசுகையில், பெண்களுக்கு அனைத்து துறைகளிலும் சம உரிமை அளித்து அதிகாரம் வழங்க வேண்டும். வழக்கறிஞர்கள் சமூகத்தின் கட்டமைப்பை மாற்றி அமைப்பவர்களாக இருக்க வேண் டும். தொழில் நெறிமுறைகளை சரியான வழி யில் பின்பற்றி அதனை பயன்படுத்த வேண்டும். கல்லூரியில் படிக்கும்போது சமு தாயத்தின் மீது அக்கறையுடன் இருந்து கற்று கொண்டதை வழக்கறிஞர் ஆன பின்பும் கைவிடாமல் செயலாற்ற வேண்டும். பஞ்சாப் மற்றும் தமிழ்நாட்டில் ஆளுநர்கள் சட்டத்தை எப்படி கையாளுகிறார்கள் என்றும் உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தீர்ப்புகளை சுட்டிக்காட்டி அடிப்படை அரசியலமைப்பை சரியான முறையில் கற்றுக்கொண்டு வழக் கறிஞர் தொழிலை நடத்தவும், எந்த பணியை எடுத்தாலும் அதனை சிறப்பாக செயல்படுத்த வேண்டும், என்றார்.
தொழிலாளிக்கு விபத்து இழப்பீடு தர மறுப்பு காவல் நிலையத்தில் மனைவி புகார்
சேலம், நவ.25- சேலம் மாவட்டம், அய்யம்பெருமாள் பட்டி ஊராட்சிக்குட் பட்ட உழவன் வட்டம் பகுதியில் வசித்து வருபவர் ரவி. இவ ருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலை யில், சேலம் மாநகரப் பகுதியில் உள்ள கிருபா மருத்து வமனையில் பாதாள பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது மண் சரிந்து விழுந்ததில் அவரது கால் முறிவு ஏற்பட்டு அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவரை அந்த மருத்துவமனையில் பழனிசாமி என்பவர் ஏஜென்சி மூலம் வேலைக்கு அனுப்பியுள்ளார். சிகிச்சை முடிந்து மூன்று நாட்கள் கழித்து வீட்டில் ஓய்வெடுக்குமாறும் 15 நாள் கழித்து மீண்டும் மருத்துவமனைக்கு வருமாறும் மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். பாதிக் கப்பட்ட கட்டிட தொழிலாளி தங்கள் மருத்துவமனையில் பணி யாற்றிய போது தான் விபத்து ஏற்பட்டுள்ளது. எனவே, ஒரு வருடத்திற்கு வேலை செய்ய முடியாத சூழல் ஏற்பட் டுள்ள நிலையில் அதற்கான இழப்பீடை மருத்துவமனை நிர்வாகம் தர வேண்டும் என கேட்டு உள்ளார். அதற்கு மருத்து வமனை நிர்வாகத்தினர் தொழிலாளியை வெளியே அனுப்பி விட்டனர். இதனால், மனமுடிந்த கட்டடத் தொழிலாளி தனது மனை வியிடம் தெரிவித்த நிலையில் மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது புகார் அளித்தார். இதுகு றித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.