districts

பட்டினிபோடும் ஒன்றிய மோடி அரசை கண்டித்து உடுமலையில் தொழிலாளர்கள் கஞ்சி காய்ச்சி போராட்டம்

உடுமலை, மார்ச் 8- ஊரக வேலை திட்ட தொழிலா ளர்களுக்கு கடந்த மூன்று மாதங்க ளாக கூலி வழங்க நிதி ஒதுக்காத ஒன்றிய மோடி அரசை கண்டித்து வெள்ளிக்கிழமை உடுமலை காந்தி  சிலையின் முன்பு அகில இந்திய விவ சாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் கஞ்சி காய்ச்சும் போராட்டம்  நடைபெற்றது. ஊரக வேலைத் திட்டத்தில் பணி  புரியும் தொழிலாளர்களுக்கு 3 மாத மாக கூலி வழங்காமல் பட்டினிபோ டும் ஒன்றிய அரசை கண்டித்தும், நிலு வையில் இருக்கும் சம்பளத்தை வழங்க உடனடியாக நிதி ஒதுக்க கோரி அகில இந்திய விவசாய தொழி லாளர்கள் சங்கத்தின் உடுமலை ஒன் றியத் தலைவர் எம்.ரங்கராஜ்  தலை மையில் போராட்டம் நடைபெற்றது.  இதில், கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் கன கராஜ், தமிழ்நாடு விவசாயச் சங் கத்தின் மாவட்டப் பொருளாளர் எ. பாலதண்டபாணி, சிஐடியு மாவட்ட துணைச்செயலாளர் எஸ்.ஜெகதீசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மடத்துக்குளம் தாலுகாச் செயலாளர்  ஆர்.வி.வடிவேல், விவசாயச் சங்கத் தின் உடுமலை தாலுகாத் தலைவர் எ. ராஜகோபால் ஆகியோர் நிதி ஒதுக் காத ஒன்றிய மோடி அரசை கண்டித்து  பேசினர். மேலும், சங்கத்தின் உடு மலை ஒன்றிய நிர்வாகிகள்  சுப்பு லட்சுமி, வனிதா, வஞ்சிமுத்து, செந் தில்குமார் மற்றும் ரத்தினசாமி, மாசானி, கருப்புசாமி, தண்டபாணி, சித்ரா, சர்மிளா  உள்ளிட்ட ஊரக வேலை திட்ட தொழிலாளர்கள் திர ளானோர் பங்கேற்றனர். பின்னர் உடு மலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சென்று துணை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர். சர்வதேச மகளிர் தினத்தில் சம்பளம் வழங்காத ஒன் றிய அரசை கண்டித்து கஞ்சி காய்ச் சும் போராட்டம் நடைபெற்றது அப்ப குதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.