திருப்பூர், ஜூலை 21- மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழு உறுப்பி னராக பணியாற்றிய தோழர் பி.முருகேசனின் நினைவு தினம் ஞாயிறன்று அனுசரிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் வடக்கு மாநகரச் செயலாளராகவும், மாவட்டக்குழு உறுப்பினராக வும், சிஐடியு பஞ்சாலை தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட பொதுச்செயலாளராகவும் பணியாற்றி மறைந்த தோழர் பி.முருகேசனின் 4 ஆம் ஆண்டு நினைவுதினம் ஞாயிறன்று கடைபிடிக்கப்பட்டது. திருப்பூர் தியாகி பழனிச்சாமி நிலை யம் முன்பு நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பஞ்சாலை தொழிலா ளர்கள் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் சி.ஈஸ்வரமூர்த்தி தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், மாவட்ட செயற் குழு உறுப்பினர் எம்.ராஜகோபால், மாவட்டக்குழு உறுப்பி னர் ஆர்.மைதிலி, வடக்கு மாநகரக்குழு உறுப்பினர் பா.சௌந்தரராசன் உள்ளிட்டோர் தோழர் பி.முருகேசனின் பணிகளை நினைவு கூர்ந்து உரையாற்றினார். தொடர்ந்து பி.முருகேசனின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் பலர் கலந்து கொண்டனர்.