ஈரோடு, டிச.5- பணி ஆணை மற்றும் ஊதிய உயர்வு வழங்கக் கோரி மாற்றுத்திறன் மாண வர்களுக்கான அனைத்து வகை பணியாளர்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். தமிழகத்தில் அரசு பள்ளி களில் 21 வகையான மாற்றுத்திறன் மாண வர்கள் பயின்று வருகின்றனர். இவர்களுக் கான சிறப்பு பயிற்றுநர்கள், இயன்முறை மருத்துவர்கள், பள்ளி ஆயத்த மைய ஆசிரி யர்கள் மற்றும் உதவியாளர்கள் என சுமார் 2 ஆயிரத்து 800 பேர் உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் 3 ஆயிரத்து 552 மாற்றுத்திறன் மாணவர்கள் உள்ளனர். இவர்களுக்காக 47 சிறப்பு பயிற்றுநர்கள், 13 இயன்முறை மருத் துவர்கள், 28 பள்ளி ஆயத்த மைய ஆசிரி யர்கள் என பணியாற்றி வருகின்றனர். இந் நிலையில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி யில் மாநில திட்ட இயக்குநரின் செயல்முறை ஆணைகள்படி மேற்கண்ட பணிகளில் ஈடுபட் டுள்ளோருக்கு 15 முதல் 30 விழுக்காடு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே திட்டத் தில் பணியாற்றி வரும் எங்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. எனவே, எங்களின் வாழ்வாதாரம் கருதி பணி ஆணை மற்றும் ஊதிய உயர்வு பெற் றுத்தர நடவடிக்கை எடுக்குமாறு கருப்பு பட்டை அணிந்து வந்த பணியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.