தருமபுரி, மார்ச் 27- விடுமுறை நாட்களில் பெண்களை பணிபுரிய வற்புறுத்த கூடாது என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியு றுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா தருமபுரி எஸ்வி சாலையில் உள்ள தனி யார் திருமண மண்டபத்தில் சனியன்று, சங்கத்தின் மாவட்ட மகளிர் துணைக்குழு அமைப்பாளர் பி.எஸ்.இளவேனில் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஏ.சேகர் வரவேற்புரையாற்றினார். இதில், “புவியை நடத்தும் புரட்சி பெண்ணே” என்ற தலைப்பில் மாநில துணைத்தலை வர் கோ.பழனியம்மாள் சிறப்புறையாற்றினார். இதில், மாவட்ட தலைவர் எம்.சுருளிநாதன், மாவட்ட பொருளாளர் கே.புகழேந்தி, மாவட்ட துணைத் தலைவர் ஜெயவேல், மக ளிர் துணைக்குழு உறுப்பினர் மகேஸ்வரி, தமிழ்நாடு சத்து ணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சி.காவேரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், பெண்கள் அதிகம் பணிபுரியும் தரும புரி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் குழந்தைகள் காப்பகம் அமைக்க வேண்டும். அரசு அலுவலகங்களில் பெண்கள் 6 மணிக்கு மேல் பணிபுரிவதால் பெண்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது. எனவே 6 மணிக்கு மேல் பணி செய்ய வற்புறுத்தகூடாது விடுமுறை நாட்களில் பெண்களை பணிக்கு வர சொல்லி கட்டாயப்படுத்தக் கூடாது. அலுவலகங்களில் விசாகா கமிட்டி அமைக்க வேண் டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியு றுத்தப்பட்டது.