திருப்பூர், ஜன.7- திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்தில் உள்ள எஸ்.ஜெ.எம் மஹாலில் கூட்டுறவு துறையின் சார்பில், மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் தலைமையில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெற்ற ரூ.20.33 கோடி கடனுக்கான தள்ளுபடி சான்றிதழ்களை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமி நாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் சனியன்று வழங்கினர். தமிழ்நாடு முழுவதும் உள்ள 1,04,870 சுய உதவிக் குழுக் களில் உள்ள 7,70,781 மகளிருக்கு ரூ.1549.03 கோடி அள விற்கு கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களில் மூலம் 1323 சுய உதவி குழுக்களுக்கு 12363 நபர்களுக்கு அசல் ரூ. 17.92 கோடி, வட்டி ரூ.2.41 கோடி மொத்தம் ரூ.20.33 கோடி அளவிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. இந்நிகழ்ச்சியில், திருப்பூர் மாநகராட்சி 4 ஆம் மண்டலத் தலைவர் இல.பத்மநாபன், மூலனூர் பேருராட்சித்தலைவர் மககள் தண்டபாணி, மூலனூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சுமதி கார்த்திக், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் மணி, கூட்டுறவு சார்பதிவாளர் சௌமியா, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய அரசு அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.