தனியார் செயலி மூலம் மோசடி
கோவை, ஜூலை 3- தினமும் பத்து நிமிடம் வேலை செய்தால் ஊதி யம் என ஆசை காட்டி செயலி மூலம் பணத்தை முதலீடு செய்ய வைத்து மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜிஎம்ஆர் (GMR) எனும் செயலியில் தினமும் 10 நிமிடம் வேலை செய்தால் வாரம்தோறும் சம்பளம் வரும் எனவும் அதற்கு முதலீடு செய்ய வேண்டுமென கோவை மதுக்கரை பகுதியை சேர்ந்த முபசீரா என்ற பெண் விளம்பரப்படுத்தியுள்ளார். இதனை, நம்பி பலரும் பணத்தை முதலீடு செய்துள்ளனர். அதில், வாரம் தோறும் தொகைக்கு தகுந்தார் போல் பணம் முதலீடு செய்தவர்களின் வங்கி கணக்கிற்கு பணம் வருவதாக கூறியுள்ளனர். இதனை அறிந்த பொதுமக்கள் பலரும் இந்த செயலில் முதலீடு செய்து வேலை பார்த்து வந்துள் ளனர். ஆனால், கடைசி வரை எந்த சம்பளமும் வரா ததை அறிந்த அதிர்ச்சியடைந்தனர். பின்னர், கோவை மாநகர குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் மோசடி புகார் அளித்தனர்.
இலங்கைத் தமிழர் முகாமைச் சேர்ந்த பெண்கள் எஸ்.பி. அலுவலகத்தில் மனு
ஈரோடு, ஜூலை 3- இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாமை சேர்ந்த பெண்கள், தங்களது மகன்களது மீதான வழக்குகளை முடித்து வைக்கக்கோரி மாவட்ட காவல் கண்காணிப் பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர். ஈரோடு மாவட்டம், அரச்சலூரிலுள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்த சாந்தமலர், மேரி ஜெனிந்தா ஆகியோர் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில், கஞ்சா வைத்திருந்ததாக எங்களது மகன்கள் ராபின்சன் (23), ஜெமிக்சன் (24), விதுசன் (26) ஆகிய 3 பேர் மீதும் கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோ பர் மாதம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள னர். நாங்கள் எங்கள் சொந்த நாட்டுக்கு திரும்பி செல்லவிருப்பதால், எங்கள் மகன்கள் மீதான வழக்கை முடித்து வைக்குமாறு அரச்சலூர் காவல் நிலையத்தில் பலமுறை கேட்டுக்கொண்டும், இதுவரை எவ்வித நடவ டிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இந்த வழக்கை முடித்துவைத்து உதவ வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கக்கட்டிகள் கொள்ளை: 6 பேர் கைது
சேலம், ஜூலை 3- ரயில் பயணியிடம் தங்கக்கட் டிகளை கொள்ளையடித்து, சேலத்தில் பதுங்கியிருந்த 6 பேரை ரயில்வே காவல் துறையினர் கைது செய்தனர். கோவையைச் சேர்ந்த சுபாஷ் (40) என்பவர், தங்க நகை வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த ஜூன் மாதம் தனது நண்பர்களுடன் பெங்களூரு விற்கு, தங்கக்கட்டிகள் மற்றும் நகை களை விற்பனை செய்ய சென்றுள் ளார். பின் தங்கக்கட்டி விற்பனை செய்த பணம் மற்றும் மீதமுள்ள தங்கக்கட்டி களுடன் ஜூன் 16 ஆம் தேதியன்று கோவைக்கு திரும்பியுள்ளார். இதற் காக குர்லா விரைவு ரயிலில் முன்பதிவு செய்து பயணித்துள்ளார். அப்போது ரயில் திருப்பூரில் நின்று புறப்படும் சமயத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் 4 பேர், சுபாஷின் பையை எடுத்துக்கொண்டு தப்பியுள்ளனர். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர், திருப்பூர் இருப்புப்பாதை காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கொள்ளையர்களை தேடி வந்தனர். 300 கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர். இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது ஸ்வான்பனி சவான் (22), விஜய் கன்டைக் ஜங்கேல் (20), அமர் பாரத் நிம்கிர் (20), அங்கீத் சுபாஷ் மேனே (23), சைத்தன்யா விஜய் சின்டே (20), கௌரவ் மாருதி வாக்மேர் (19) ஆகி யோர் என்பது தெரியவந்தது. மேலும், இவர்கள் சேலத்தில் இருப்பதை அறிந்த தனிப்படையினர் அங்கு சென்று சேலம் பேருந்து நிலையத்தில் இவர்களை கைது செய்தனர். மேலும், அவர்கள் கொள்ளையடித்து வைத்திருந்த 595.14 கிராம் தங்கக்கட்டிகள், ரூ.10,10,200 ரொக்கம் ஆகியவற்றை காவல் துறை யினர் பறிமுதல் செய்தனர்.
வீட்டுக்குள் நுழையை முயன்ற காட்டுயானை
பொதுமக்கள் அச்சம் கோவை, ஜூலை 3- மருதமலை குடியிருப்பு பகுதி யில் கதவை உடைத்து வீட்டுக்குள் நுழையை முயன்ற காட்டு யானை யால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். கோவை மாவட்டம், மருதமலை பாலாஜி நகர் பகுதியில் உணவு தேடி செவ்வாயன்று இரவு உலா வந்த ஒற்றை காட்டு யானை அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் கதவை உடைத்து வீட்டுக்குள் நுழைய முயன்றது. இத னால், வீட்டில் இருந்தவர்கள் அச்சம் அடைந்தனர். உடனடியாக வனத் துறை யினருக்கு தகவல் தெரிவித்தனர். தக லின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானையை வனப் பகுதிக்குள் விரட்டினர். மேலும், அப்ப குதியில் யானை உலா வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். இச்சம்பவம், வீட்டின் அருகே உள்ள மற்றொரு வீட் டில் பொருத்தப்பட்டு இருந்த கண்கா ணிப்பு கேமராவில் இந்த காட்சிகள் பதிவாகி உள்ளது. இதேபோல், மருதமலை சுப்பிரம ணிய சுவாமி கோவிலுக்கு செல்லும் படிக்கட்டு பாதையில் இரண்டு யானை கள் கடந்து செல்லும் செல்போன் வீடியோ காட்சிகள் மற்றும் மலைப் பாதையில் காட்டு யானைகள் கடந்து செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகி றது. யானைகள் குடியிருப்பு பகுதி யில் நிரந்தரமாக நுழையாமல் தடுத்து பொதுமக்களின் உயிரை பாதுகாக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
தேசிய அளவிலான போட்டிக்கு ஈரோடு அரசுப் பள்ளி மாணவி தேர்வு
தேசிய அளவிலான போட்டிக்கு ஈரோடு அரசுப் பள்ளி மாணவி தேர்வு ஈரோடு, ஜூலை 3- தேசிய அளவிலான வாட்டர் போலோ போட்டியில் பங் கேற்க, ஈரோடு அரசுப் பள்ளி மாணவி தேர்வு செய்யப் பட்டுள்ளார். ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்த அல்ஃபியாகான் அபிகான் எனும் மாணவி, ஈரோடு நகரவை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த ஜூன் 23 ஆம் தேதி சென்னை யில் நடைபெற்ற மாநில அளவிலான பெண்கள் பிரிவு வாட்டர் போலோ போட்டியில் கலந்து கொண்டு, வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து அவர் வரும் ஜூலை 7 முதல் 11 ஆம் தேதி வரை மத்தியபிரதேச மாநிலம், இந்தூரில் நடைபெறவுள்ள பெண்களுக்கான 40 ஆவது சப் -ஜூனியர் மற்றும் 50 ஆவது ஜூனியர் நேஷனல் அக்குவாடிக் சாம்பியன்ஷிப் - 2024 எனும் தேசிய அளவிலான போட்டியில் தமிழ்நாடு அணியில் விளை யாட தேர்வாகியுள்ளார்.
நடைபாதையை சீரமைக்க கோரிக்கை
நடைபாதையை சீரமைக்க கோரிக்கை உதகை, ஜூலை 3- உதகை கமர்சியல் சாலை நடைபாதையை சீரமைக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. நீலகிரி மாவட்டம், உதகைக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இது தவிர உள்ளூர் பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்காக நகரின் முக்கிய கடை வீதிகளுக்கு வருகின்றனர். குறிப்பாக, கமர்சியல் சாலை யில் உள்ள கடை வீதிகளிலேயே எப்போதும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில், இந்த கமர்சியல் நடைபாதையில் ஒரு சில இடங்களில் பெயர்ந்து பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இரவு நேரங்களில் இந்த நடை பாதையில் செல்வோர் தடுக்கி விழுந்து விபத்து ஏற்பட்டு வருகி றது. எனவே, இந்த நடைபாதையை விரைந்து சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
285 நீர்நிலைகளில் வண்டல் மண், களி மண் எடுக்க அனுமதி
285 நீர்நிலைகளில் வண்டல் மண், களி மண் எடுக்க அனுமதி திருப்பூர், ஜூலை 3 - திருப்பூர் மாவட்டத்தில் 285 நீர்நிலைகளில் வண்டல் மண் மற்றும் களி மண் இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி வழங் கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தெரிவித் துள்ளார். திருப்பூர் மாவட்டத்திலுள்ள நீர் நிலைகளில் படிந்துள்ள வண்டல் மண், களி மண்னை விவசாய பணிகள் மற்றும் மண் பாண்ட தொழிலுக்காக இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி வழங்குவது குறித்து, திருப்பூர் மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீட்டு எண்.06. நாள்:27.06.2024-ன்படி அறிவிக்கப்பட் டுள்ளது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 9 நீர்நி லைகள் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 276 நீர்நிலைகள் ஆக மொத்தம் 285 நீர்நிலைகளில் வண்டல் மண், களி மண்ணை இலவசமாக எடுத்துச் செல்ல நீர்நிலை கள் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிவா ளர்கள் https://tnesevai.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம். வண்டல் மண், களி மண் எடுக்கப்பட வேண்டிய நீர்நிலைகள் குறித்த விவரம் www.tiru ppur.nic.in என்ற இணையத்தளத்திலும், மாவட்ட ஆட்சி யர் அலுவலக தகவல் பலகையிலும் சம்பந்தப்பட்ட வட்டாட்சி யர் அலுவலகத்தை அணுகியும் தெரிந்து கொள்ளலாம் என்று ஆட்சியர் கிறிஸ்துராஜ் கூறியுள்ளார்.
நலவாரியக் கோரிக்கை போராட்டம் நூறு ஆட்டோக்கள் பங்கேற்க முடிவு
நலவாரியக் கோரிக்கை போராட்டம் நூறு ஆட்டோக்கள் பங்கேற்க முடிவு திருப்பூர், ஜூலை 3 – தமிழ்நாட்டில் நலவாரியத்தில் பதிவு செய்யப்பட்ட தொழி லாளர்கள் பெயர் பட்டியல் கணினியில் அழிந்துவிட்டதாக கூறுவதை மீட்க வேண்டும், நலவாரிய பயன்களை உடன டியாக தொழிலாளர்களுக்குக் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 16ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டத்தில் நூறு ஆட்டோக்களில் ஆட்டோ தொழி லாளர்கள் பங்கேற்பது என்று சிஐடியு முடிவு செய்துள்ளது. சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம் சங்கத் தலைவர் டி.வி.சுகுமார் தலைமையில் நடைபெற் றது. இதில் சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஒய்.அன்பு, ஆட்டோ சங்கச் செயலாளர் சிவராமன், துணைத் தலைவர் பெருமாள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் நலவாரியக் கோரிக்கைகள் குறித்து ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டத்தில் நூறு ஆட்டோத் தொழிலாளர்கள் ஆட்டோக்களுடன் பங்கேற்பது, இது குறித்து ஆட்டோத் தொழிலாளர்களிடம் விரிவாக பிரச்சா ரம் செய்வது என்று தீர்மானிக்கப்பட்டது.
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு
திருப்பூர், ஜூலை 3- அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு வருகை தந்த முதலாமாண்டு மாணவர்களை இந்திய மாணவர் சங்கத் தினர் வாழ்த்து அட்டை வழங்கி வரவேற்றனர். தமிழ்நாடு முழுவதும் புதனன்று அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கின. இதனையொட்டி கல்லூரிக்கு வரும் புதிய மாணவர்களை வரவேற்கும் வகையில் இந்திய மாண வர் சங்கம் சார்பில் இனிப்புகள் வழங்கி, வாழ்த்து அட்டை வழங்கி வரவேற்கும் நிகழ்வுகள் நடைபெற்றது. திருப்பூர் சிக் கண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாணவர் சங்க கிளைத் தலைவர் விமல் ராஜ் தலைமை வகித்தார். எல்ஆர்ஜி மகளிர் கல்லூரியில் நடை பெற்ற நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுஜிதா தலைமை வகித்தார். பல்லடம் அரசு கல்லூரியில் நடைபெற்ற நிகழ்விற்கு கிளைத் தலைவர் பிரவீன் தலைமை வகித்தார். இந்த நிகழ்வுகளில் மாநில செயற்குழு உறுப்பினர் ஷாலினி, மாவட்டக்குழு உறுப்பினர் கண்ணன், சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அரசு ஊழியர் சங்கம் எழுச்சி தின ஆர்ப்பாட்டம்
அரசு ஊழியர் சங்கம் எழுச்சி தின ஆர்ப்பாட்டம் திருப்பூர், ஜூலை 3 - ஜூலை 2ஆம் தேதி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் எழுச்சி தின ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஊத்துக்குளி வட்டக்கிளை சார்பில் வட்டாட்சியர் அலுவல கம் முன்பு வட்டக்கிளைத் தலைவர் சுகந்தன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட இணைச் செயலாளர் ஆர்.ராமன் விளக்கிப் பேசினார். துணைத் தலைவர் துரை நன்றி கூறினார். அதேபோல் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற் றும் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, தாராபுரம், காங்கே யம், பல்லடம் ஆகிய வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு எழுச்சி தின ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு ஊழியர்களின் நிலுவைக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நடை பெற்ற ஆர்ப்பாட்டங்களில் திரளான ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் அவிநாசி, ஜூலை 3 - அவிநாசியில் சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் பல் வேறு கோரிக்கைகளை முன்வைத்து புதனன்று ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்துக்கு ஒன்றியத் தலைவர் எம்.ஜெயஸ்ரீ தலைமை வகித் தார். இதில், சத்துணவு மையங்களில் காலியாக உள்ள அமைப்பாளர், சமையலர், உதவியாளர் உள்ளிட்ட பணியி டங்களை உடனடியாக நியமித்து, காலிப் பணி யாளர்களின் பணிச்சுமையைக் குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான சத்துணவு பணி யாளர்கள் பங்கேற்றனர்.
மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருப்பூர், ஜூலை 3 - திருப்பூர் ஜெய்வாபாய் மாநக ராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி யில் மீண்டும் மஞ்சப்பை என்ற விழிப்பு ணர்வு பிரச்சார நிகழ்ச்சி நடைபெற் றது. ஜூலை 3ஆம் தேதி நெகிழிப்பை இல்லா தினம் கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு புதன்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜ் பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மஞ்சப்பை பயன்பாடு தற்போது அதிகரித்து வருகிறது. நெகி ழிப்பை சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்து வதால் அதைத் தவிர்க்க வேண்டும். எதிர்கால சந்ததிக்கு சுற்றுச்சூழலைப் பாதுகாப்புடன் வழங்குவது நம் கடமை என்று அவர் கூறினார். மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மு.செந்தில்குமார், மாவட்ட கல்வி அலு வலர் ஆனந்தி, ஜெய்வாபாய் மாநக ராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ஸ்டெல்லா அமலோற்பவ மேரி உள்பட ஆசிரியர்கள், மாணவிகள் பங்கேற்றனர். திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 மற்றும் ரோட்டரி சங்கம் இணைந்து சர்வதேச நெகிழி இல்லா தினத்தை முன்னிட்டு திருப்பூர் குமரன் நினைவு மண்டபத்தின் முன்பு பிளாஸ் டிக் இல்லாத் தமிழகம் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவ, மாணவிகள் பிளாஸ்டிக் அரக்கன் போல் வேடமிட்டும், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், துண்டு பிரசுரங்களை வழங் கியும், துணிப்பைகளை கொடுத்து கலை நிகழ்ச்சிகள் நடத்தி விழிப்பு ணர்வு ஏற்படுத்தினர். ரோட்டரி சங்க நிர்வாகிகள் கார்த்திக், கிருத்திகா, சதிஷ் ஆகியோர் கலந்து கொண்ட னர். இறுதியில் மாணவ பிரதிநிதி சுந்த ரம் நன்றி கூறினார். நிகழ்விற்கான ஏற்பா டுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.
நிலக்கடலை ஏலம்
நிலக்கடலை ஏலம் அவிநாசி, ஜூலை 3 - சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் 7 விவசாயிகள் கலந்து கொண்டு 45 மூட்டைகள் நிலக் கடலையை ஏலத்திற்கு கொண்டு வந்து இருந்தனர். திருப்பூர் மற்றும் ஈரோடு சுற்றுவட்டார வியாபாரிகள் 3 பேர் கலந்து கொண்டனர். மறைமுக ஏலத்தின் வாயிலாக நிலக்கடலை குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரகம் ரூ.6,700 முதல் ரூ.7,000 வரையிலும், இரண்டாம் ரகம் ரூ.6,400 முதல் ரூ.6,700 வரையி லும், மூன்றாம் ரகம் ரூ.5,700 முதல் ரூ.5,950 வரையிலும் ஏலம் போனது, மொத்தம் ரூ.1.05 இலட்சத்திற்கு ஏலம் நடைபெற் றது.
திருப்பூர் எல்ஆர்ஜி மகளிர் கல்லூரியில் நேனோ பொருட்கள் 2024 தேசிய கருத்தரங்கு
திருப்பூர் எல்ஆர்ஜி மகளிர் கல்லூரியில் நேனோ பொருட்கள் 2024 தேசிய கருத்தரங்கு திருப்பூர், ஜூலை 3 - திருப்பூர் எல்.ஆர்.ஜி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் ஜூலை 11-12 ஆகிய நாட்களில் மத்திய அரசின் அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியlத்தின் நிதி உதவியு டன்” நேனோ பொருள்கள் - 2024” என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கு நடைபெற உள்ளது. ஹைதராபாத், மும்பை, கல்பாக்கம் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் உள்ள அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்க ளில் பணியாற்றும் இந்தியாவின் தலை சிறந்த விஞ்ஞானிகள், அறிவியல் வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்வி யாளர்கள் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு “இன்றைய அறிவியல் உலகில் நேனோ பொருள்களின் முக்கியத்துவம் மற்றும் பயன்கள் குறித்து சிறப்புரை ஆற்றுகின்றனர். இந் தியா முழுவதும் இருந்து அறிவியல் துறைகளில், கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் பணிபுரியும் அறிவியலா ளர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் பங்கு பெற்று, தங்களின் “நேனோ ஆராய்ச்சி” குறித்த கட்டுரைகளை சமர்ப்பிக்கின்ற னர். சிறந்த கட்டுரைகளுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது. இந்த கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை இயற்பியல் துறைப் பேராசிரியர்கள் செய்து வருகின்றனர். கருத்தரங்கில் பங்கு பெற விரும்புவோர் https://www.ncn2024.in இணைய தளத்தைப் பார்க்கும்படி கருத்தரங்கு ஒருங்கிணைப்பாளர், இயற்பியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் கிங்சன் சால மன் ஜீவராஜ் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் மருத்துவர் மருந்து சீட்டு இல்லாமல் மருந்து விற்பனை செய்தால் உரிமம் ரத்து
திருப்பூர், ஜூலை 3 - திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மருந்துக் கடைகளிலும் மருத்துவரின் மருந்து சீட்டு இன்றி மருந்துகள் விற்பனை செய்தால் மருந்து விற்பனை உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மருந்துக் கடைகளிலும் வலி நிவாரண மாத்தி ரைகள், துாக்க மாத்திரைகள் மற்றும் மன நலம் சம்பந்தப்பட்ட மருந்துகளை மருத்துவ ரின் மருந்து சீட் இன்றி விற்பனை செய்வது தொடர்பாக மருந்துகள் ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். இதில் கடந்த ஓர் ஆண்டில் விதிமீறல்கள் கண்டறியப்பட்ட 11 கடைகள் மீது சட்ட நடவ டிக்கைள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தவறு கள் கண்டறியப்பட்ட 6 மருந்துக் கடைகளின் மருந்து விற்பனை உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தீவிர சட்ட விதிமீறல்கள் கண்டறியப்பட்ட 4 மருந்துக் கடைகளின் மருந்து விற்பனை உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தற்பொழுது மருந்துக் கடைகளில் இத்த கைய மருந்துகள் கிடைக்காததால் ஆன் லைன் மூலமாக ஆர்டர் செய்தும், வெளி மாநி லங்களில் இருந்து கொள்முதல் செய்தும் சில சமூக விரோதிகள் விற்பனை செய்து வரு கின்றனர். அவர்கள் மீது காவல்துறை நடவ டிக்கை எடுத்து வருகிறது. போதைப்பொருள் தடுப்பு ஆய்வுக் கூட் டங்களில் விவாதிக்கப்பட்ட அடிப்படையில் இதுபோன்ற மருந்துகளை விற்பனை செய் யும் மருந்துக் கடைகள் மற்றும் தனிநபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்து ராஜ் தெரிவித்துள்ளார்.
அஞ்சலக சிறுசேமிப்பு வசூலில் சேலம் அபாரம்
அஞ்சலக சிறுசேமிப்பு வசூலில் சேலம் அபாரம் சேலம், ஜூலை 3- அஞ்சலக சிறுசேமிப்பு வசூலில் மாநில அளவில், சேலம் மாவட்டம் தொடர்ந்து 4 ஆவது ஆண்டாக முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. சேலம் மாவட்டத்தில் அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்க ளில் வசூல் செய்து சாதனை புரிந்த அஞ்சலக சிறுசேமிப்பு முகவா்களுக்கு பரிசளிப்பு விழா மாவட்ட ஆட்சியர் ரா. பிருந்தாதேவி தலைமையில் புதனன்று நடை பெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பேசுகை யில், 2022 – 23 ஆம் நிதியாண்டில் அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்களில் ரூ.1,779.24 கோடி, 2023 – 2024 ஆம் நிதியாண்டில் ரூ.2,287 கோடி என மொத்த வசூல் சாதனையை சேலம் மாவட்டம் எய்தியுள்ளது. படித்த கிராமப்புற, நகா்ப்புற பெண்கள், ஆண்கள் சுயவேலை வாய்ப் பாக அஞ்சலக சிறுசேமிப்பு முகவர் பணியினை செய்து வரு கின்றனர். தற்போது, 2022 – 2023 ஆம் நிதியாண்டில் சிறுசே மிப்பு வசூலில் சாதனை புரிந்த அஞ்சலக சிறுசேமிப்பு முக வர்களுக்கு தற்போது பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப் பட்டுள்ளன. குறிப்பாக, கே.வேலுமணி என்ற சிறுசேமிப்பு முகவர் அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்களில் ரூ.71,39,51,200 வசூல் சாதனை செய்து, தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார். ‘இன்றைய சேமிப்பு நாளைய பாதுகாப்பு’ என்பதற்கேற்ப எதிர்கால வாழ்க்கை பாதுகாப்பாகவும், இனிமையானதாகவும் அமைந்திட பெற் றோர் தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை தொடர்ந்து சேமிப் பதோடு, தங்கள் பிள்ளைகளுக்கும் சிறுவயது முதலே சேமிக் கும் பழக்கத்தை ஏற்படுத்திட வேண்டும். அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு, பாடுபட்டு உழைத்து சேமித்த தங்கள் வருமா னத்தை சிட் பண்டு, தனியார் நிதி நிறுவனங்கள் போன்றவற் றில் முதலீடு செய்து ஏமாறாமல் அரசின் பாதுகாப்பான, உத்தரவாதமான அஞ்சலகங்களில் தங்களுக்கேற்ற சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும், என் றார்.
நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி மருத்துவமனை ஊழியர் சிறையிலடைப்பு
நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி மருத்துவமனை ஊழியர் சிறையிலடைப்பு தருமபுரி, ஜூலை 3- நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாகக்கூறி, பெண் ணிடம் பண மோசடி செய்த மருத்துவமனை ஊழியரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியை அடுத்த ராஜீவ்ந கரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி காமாட்சி (26). இவரது அண்ணன் கணேசன் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தருமபுரி அரசு மருத்துவக்கல் லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். காமாட்சி, தனது அண்ணனை மருத்துவமனைக்கு பார்ப்பதற்காக அடிக் கடி சென்று வந்துள்ளார். அப்போது, மருத்துவமனை ஊழிய ரான கடத்தூர் அருகே உள்ள மடதஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த அதியமான் (39) என்பவர், காமாட்சியிடம் பேச்சு கொடுத்து, அவரிடம் குடும்ப விவரங்களை தெரிந்து கொண் டுள்ளார். பின்னர் காமாட்சியின் அண்ணன் மகன் சரவண னுக்கு, ஒசூரில் நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதா கக் கூறி ரூ.4.5 லட்சம் பெற்றுள்ளார். பணத்தை வாங்கிக் கொண்ட அதியமான், வேலை வாங்கித் தராமலும், பணத்தை திருப்பிக் கொடுக்காமலும் ஏமாற்றி வந்ததாகத் தெரிகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் பாப்பாரப்பட்டி காவல் துறையி னர் வழக்குப்பதிவு செய்து, திருப்பூரில் பதுங்கியிருந்த அதிய மானைக் கைது செய்து, நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர்.
உதகை படகு இல்ல கட்டுமானப் பணிகள் நிறுத்தம்
உதகை, ஜூலை 3– உதகை படகு இல்லத்தில் நடை பெற்று வந்த கட்டுமானப் பணிகள் பசு மைத்தீர்ப்பாயத்தின் நடவடிக்கையால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், ஹாக்கா கமிட்டியிடம் முறையாக அனு மதி வாங்கிய பின் கட்டுமானப் பணிகள் துவங்கப்படும் என சுற்றுலாத் துறை அமைச்சர் கா.இராமசந்திரன் தெரிவித் தார். நீலகிரி மாவட்டம், உதகை படகு இல் லம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழ கத்தின் கீழ் இயங்கி வருகிறது. இங்கு, அதிக அளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கில் பல வகையான சாகச விளையாட்டுகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற் கான, ரூ. 5.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப் பட்டது. இந்த படகு இல்லம் ஏரியில், இழை வரிக் கோடு, மாபெரும் ஊஞ்சல், ரோலர் கோஸ்டர், பங்கீ ஜம்பிங், தொங்கு பாலம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தது. ஏரியை ஒட்டி அத்து மீறி பணிகள் நடந்து வருவதாக ஆரம்ப முதல் சுற்றுசூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். தேசிய பசுமை தீர்ப்பாயம் பணிகளை நிறுத்த மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட் டதை அடுத்து, அங்கு நடந்து வந்த கட்டு மானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து சுற்றுலாத் துறை அமைச்சர் ராமசந்திரன் கூறுகையில், படகு இல்லத்தில் நடந்து வந்த சாகச விளையாட்டுகளை அறிமுகப்படுத் தும் கட்டுமானப் பணி குறித்து சில ஆவ ணங்களை அளிக்க கோரியதால். அதற் கான ஆவணங்களை அளித்து ஹாக்கா கமிட்டியிடம் முறையாக அனுமதி வாங் கிய பின் கட்டுமானப் பணிகள் துவக் கப்படும். என்றார்.
சரிவர செயல்படாத ஆதார் சேவை மையம்: மக்கள் அவதி அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்த ஆட்சியர்
நாமக்கல், ஜூலை 3- பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகத்தில் செயல்படும் ஆதார் மையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட ஆட்சி யர் ச.உமா, அடிக்கடி பூட்டப்படும் ஆதார் சேவை மையத்தால் மக்கள் அவதியடையுறுவதை கண்டு, அதிகாரிகளுக்கு எச்ச ரிக்கை விடுத்துள்ளார். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் சாலை விரி வாக்கம் மற்றும் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடை பெற்று வருகிறது. இப்பணிகள் குறித்து ஆய்வு செய்வதற் காக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா புதனன்று பள்ளி பாளையம் பகுதிக்கு வந்தார். அப்பொழுது மேம்பால ஒப் பந்ததாரர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகளிடம், கட்டு மானப் பணிகளை விரைவாக முடித்து தர வேண்டுமென அறிவு றுத்தினார். இதற்கு, மூன்று மாத காலத்திற்குள் பணிகள் அனைத்தும் முடிவடையும் என ஒப்பந்ததாரர்கள் ஆட்சியரி டம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, சாலை பணிகளை ஆய்வு செய்தபடியே, திடீரென நகராட்சி அலுவலகத் திற்குள் சென்ற ஆட்சியர், நகராட்சி ஆதார் சேவை மையம் செயல்படும் இடத்திற்கு சென்றார். அங்கு சுமார் 30க்கும் மேற் பட்ட பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் ஆதார் சேவைக்காக வந்திருந்ததை பார்த்த ஆட்சியரிடம், பள்ளி பாளையத்தில் மட்டும் ஆதார் சேவை மையம் முழுமை யாக செயல்படுவதில்லை என பொதுமக்கள் புகாரளித்த னர். இதையடுத்து, “இருவர் வேலை செய்யும் இடத்தில் ஒரு வர் மட்டுமே பணியாற்றிக் கொண்டுள்ளீர்கள். பள்ளி செல்ல வேண்டிய மாணவ, மாணவிகள் ஆதார் சேவைக்காக மணிக் கணக்கில் காத்துக் கொண்டுள்ளனர். தொடர்ந்து இதேபோல செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என ஆட்சி யர் ச.உமா எச்சரிக்கை விடுத்தார். இதன்பிறகு நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் ஆட்சி யர் உமா, பள்ளிபாளையம் நகர்மன்றத் தலைவர் செல்வராஜ், வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி, காவல் ஆய்வாளர் சர வணன், நகராட்சி பொறியாளர் ரேணுகா, மேம்பால ஒப்பந்த தாரர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, பள்ளிபாளையத்தில் புதிதாக பேருந்து நிலையம் அமைப் பதற்கான பணிகள் குறித்து மேம்பால பணிகள் குறித்தும், பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் ஆகாயத்தாமரை செடி களை அகற்றுவது குறித்தும் கூட்டத்தில் பேசப்பட்டது.