districts

img

வீட்டுமனைப் பட்டா கோரி பெண்கள் ஆவேசப் போராட்டம்

திருப்பூர், அக். 17 – திருப்பூர் மாவட்டத்தில் வீடில்லாதவர் களுக்கு வீடு, அரசு புறம்போக்கு நிலங்க ளில் குடியிருப்போருக்கு வீட்டுமனைப் பட்டா  என்ற முழக்கத்தை மையமாக வைத்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தி னர் கோபாவேச ஆர்ப்பாட்டம் நடத்தி மாவட்ட  நிர்வாகத்திடம் மனுக் கொடுத்தனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக திங்களன்று அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தினர் தமிழ் மாநில  மாநாட்டு கோரிக்கையை முன்வைத்து ஆர்ப் பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.பவித்ரா தேவி தலைமை ஏற்றார். இதில் மாவட்டச் செயலாளர் கு.சரஸ்வதி எம்.சி., மாவட்டப் பொருளாளர் ஆர்.கவிதா மற்றும்  மாவட்ட நிர்வாகிகள் ஜி.சாவித்திரி, ஆர். மைதிலி, எ.சகிலா பா.லட்சுமி, சி.பானுமதி,  மினி உள்பட பெருந்திரளானோர் பங்கேற்ற னர். மாநில மாநாட்டு கோரிக்கைகள் என்ற  அடிப்படையில் வீட்டுமனைப் பட்டா, நகர்ப்பு றங்களில் நூறு நாள் வேலை திட்டத்தை அமல் படுத்துவது, விலைவாசி உயர்வைக் கட்டுப் படுத்துவது ஆகியவற்றை வலியுறுத்தி முழக் கங்கள் எழுப்பினர். இதைத் தொடர்ந்து 600க்கும் மேற்பட்ட  வீட்டுமனைப் பட்டா கோரிக்கை மனுக்களை  மாதர் சங்கத்தினர் மாவட்ட நிர்வாகத்தில் ஒப் படைத்தனர்.

அவிநாசி

அதேபோல் அவிநாசியில் வீடற்றவர்க ளுக்கு வீடு, வீட்டுமனைப் பட்டா வழங்க வலி யுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங் கத்தினர் திங்களன்று வட்டாட்சியர் அலுவல கம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு மனு கொடுத்தனர். அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் முன்பாக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்த முற்பட்டனர். எனினும் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நீதிமன்றம் நடை பெறும் நிலையில் விசாரணைக்கு பாதிப்பு  ஏற்படும் என்பதால் மாற்று இடத்தில் ஆர்ப் பாட்டம் நடத்தும்படி காவல்துறையினர் கேட்டுக் கொண்டனர். இதைத் தொடர்ந்து அவிநாசி பேருந்து நிறுத்தம் முன்பு மாதர் சங் கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக வட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.  இதில் மாதர் சங்க  மாவட்ட துணைச் செயலாளர் இ.வளர்மதி  கோரிக்கையை விளக்கி உரையாற்றி னார். இந்த இயக்கத்தில் மாதர் சங்க ஒன் றிய செயலாளர் ஆர்.கே.செல்வி, ஒன்றிய  தலைவர் சித்ரா, ஒன்றிய நிர்வாகிகள் வி. தேவி, எஸ்.சிவகாமி, திருமுருகன்பூண்டி நகர மன்ற உறுப்பினர் பார்வதி, புதுப்பாளையம் ஊராட்சிமன்ற உறுப்பினர் தேவிகா உட்பட பலர் கலந்து கொண்டனர்.