தருமபுரி, மார்ச் 9- சர்வதேச மகளிர் தினத்தை முன் னிட்டு, தமுஎகச மற்றும் மாணவர் சங்கத்தினர் பல்வேறு இடங்களில் கேக் வெட்டி கொண்டாடினர். தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர்கள் - கலைஞர்கள் சங்கத் தின் சார்பில் மகளிர் தின விழா தரும புரி முத்து இல்லத்தில் நடை பெற்றது. சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் கு.சிவப்பிர காசம் தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்ச்சியில், மாவட்ட துணைச்செயலாளர் பெ.துரை ராஜ் வரவேற்றார். தருமபுரி அரசு கலைக்கல்லூரி முதல்வர் ப.கி.கிள்ளிவளவன், மக்கள் நல்வாழ்வு மருத்துவர் பகத்சிங், தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினர் மேட்டூர் வசந்தி, மாநிலக்குழு உறுப்பினர் நாகைபாலு, மாவட்ட செயலாளர் ஆர்.சிங்காரவேலு, மாவட்ட பொருளாளர் எம்.கார்த்தி கேயன், அரசு ஊழியர் சங்கத்தின் மகளிர் துணைக்குழு மாவட்ட அமைப்பாளர் பி.எஸ்.இளவேனில் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்நிகழ்ச்சியில், வளைய பந்து போட்டிகளில் தேசிய அளவில் பதக்கம் வென்ற தருமபுரி அரசு கலைக்கல்லூரி மாணவி அகல்யா விற்கு பரிசுகள் வழங்கி, கௌர வித்தனர். முடிவில், அவ்வையார் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ப.செல்வி நன்றி கூறினார். இதேபோல், உலக மகளிர் தின விழா கருத்தரங்கம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட மகளிர் துணைக்குழு அமைப்பாளர் பி.எஸ்.இளவேனில் தலைமை யில், சிஐடியு அலுவலகத்தில் நடை பெற்றது. மாநில துணைத்தலைவர் கோ.பழனியம்மாள் கருத்துரை யாற்றினார். இதில், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் மாவட்ட அமைப்பாளர் சி.கலாவதி, சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் தேவகி, அங்கன்வாடி ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் லில்லிபுஷ்பம், கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க பொறுப்பாளர் ஹாஜிகா பேகம், அரசு ஊழியர் சங்க மாவட்ட செய லாளர் ஏ.சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சேலம்
இந்திய மாணவர் சங்கம் சார்பில் சேலம் அரசு இருபாலர் கலைக்கல்லூரியில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. அப் ்போது ஆண், பெண் சமத்துவம் கல்வி நிலையங்களில் கடை பிடிக்க வேண்டும் என்றனர். இதில், சங்கத்தின் மாவட்ட தலைவர் அருண்குமார், துணைச்செய லாளர் டார்வின், இசை, ரம்யா, ஸ்வேதா, நதியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சேலம் சிவில் இன்ஜினியர் அசோசியேசன் கட்டிடத்தில், மனித கடத்தல் தொடர்பான விழிப் புணர்வு கருத்தரங்கம் நடை பெற்றது. இதில், சேலம் நாடாளு மன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், கிராமிய பெண்கள் மேம்பாட்டு நிறுவன இயக்குநர் வி.அலமேலு, காவல் ஆய்வாளர் இந்திரா, இன்சூரன்ஸ் ஊழியர் சங்க நிர்வாகி ஷோபனா, அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்க நிர்வாகி கவிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நாமக்கல்
பள்ளிபாளையத்தில், மகளிர் தினத்தை முன்னிட்டு, தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு உத்தரவின் படி, நாமக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவர் என்.குணசேகரன் மற்றும் ராசிபுரம் வட்ட சட்டப்பணிகள் குழு தலைவர் பி.தீனதயாளன் ஆகியோர் வழி காட்டுதல்படி மகளிருக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் வியாழ னன்று நடைபெற்றது. இதில், மூத்த வழக்கறிஞர் கே.ஜெயராஜ், ராசிபுரம் சட்டப்பணிகள் குழு இளநிலை அலுவலர் இளைய பாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.