“இன்று குரூப் 2 தேர்வு” திருப்பூரில் 21,039 பேர் எழுதுகின்றனர்
திருப்பூர், மே 20- தமிழக அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார் பில், குரூப் - 2 மற்றும் 2 ‘ஏ’ போட்டித்தேர்வு வெள்ளி யன்று (இன்று) நடைபெற உள்ள நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் 21 ஆயிரத்து 39 பேர் எழுதுகின்றனர். தமிழக அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார் பில், குரூப் - 2 மற்றும் 2 ‘ஏ’ போட்டித்தேர்வு, மே 21 ஆம் தேதியன்று (இன்று) நடைபெறுகிறது. திருப்பூர் மாவட்டத்தில், 21 ஆயிரத்து, 39 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். 57 பள்ளி, கல்லுாரிகளில், 69 மையங்களில் நடைபெற உள்ள இத்தேர்வு பணிகளை கண்காணிக்க, துணை ஆட்சியர் நிலை அதிகாரிகள் அடங்கிய, 11 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டுள் ளது. வருவாய்த்துறையினர் அடங்கிய 10 பறக்கும் படைகளும், 72 வீடியோ கேமரா மேன்கள், வருவாய் ஆய்வாளர் நிலையில் சூப்பர்வைசராக 120 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே போட்டித் தேர்வு நடக்கும் போது, தாலுகா வாரியாக தேர்வு மையங்கள் அமைக்கப்படும். தற்போதைய குரூப்-2 தேர்வுக்கு, திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, தாரா புரம் தாலுகாவில் மட்டும் மையம் அமைக்கப்பட் டுள்ளது. உடுமலை பகுதியில், தேர்வு மையம் அமைக் கப்படாதது தேர்வு எழுதுவோரை அதிர்ச்சியில் ஆழ்த் தியுள்ளது. இதுகுறித்து, வருவாய்த்துறை அதிகாரிகள் கூறு கையில், மொத்தம் 57 பள்ளி, கல்லுாரிகளில் தேர்வு நடைபெற உள்ளது. குரூப்-4 தேர்வுக்கு மட்டுமே, தாலுகா வாரியாக தேர்வு நடக்கும். குரூப்-2 தேர்வுக்கு, விண்ணப்பம் செய்தவர் எண்ணிக்கை, இருப்பிடத்தை பொறுத்து, அரசுப்பணியாளர் தேர்வாணையமே, தேர்வு மையங்களை தேர்வு செய்து அளிக்கிறது. தேர் வாணையத்தின் வழிகாட்டுதலின்படி, போட்டித்தேர்வு நடத்தப்படும், என்றனர்.
கணவரிடமிருந்து ஜீவானாம்சம் பெற்றுத்தர வலியுறுத்தி பெண் தர்ணா
திருப்பூர், மே 20- கணவரிடமிருந்து ஜீவனாம்சம் பெற்றுத்தர வேண் டும் என வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் குழந்தைகளுடன் பெண் தர்ணா போராட் டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பத்மா வதி என்ற பெண் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு பரந்தா மன் என்பவரை திருமணம் செய்து கொண்டு, திருப்பூர் மாவட்டம், சிறுபூலுவப்பட்டியில் உள்ள பனியன் நிறுவ னத்தில் பணிபுரிந்து வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த சில வருடங்களாக பரந்தா மனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்ப தாகவும், இதைதட்டி கேட்ட தன்னிடம் தகராறில் ஈடுபட்டு, துன்புறுத்தி வருவதாகவும் பத்மாவதி பலமுறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், இரண்டு மகள்களுடன் வாழ்வாதா ரம் இல்லாமல் இருக்கின்ற சூழ்நிலையில் தன்னுடன் வாழ மறுத்து வேறு ஒருவருடன் வாழ்ந்து வரும் கண வரிடமிருந்து மகள்களுக்கான ஜீவனாம்சம் பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத்தி பத்மாவதி தனது இரண்டு மகள்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
3.50 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
திருப்பூர், மே 20- திருப்பூர் மாநகராட்சி, 3 ஆவது மண்டலத்துக்குட் பட்ட பகுதியில் 3.50 டன் எடையுள்ள தடைசெய்யப் பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட் டது. திருப்பூர் மாநகராட்சி, 3 ஆவது மண்டலத்துக்குட் பட்ட எம்.ஜி.புதூர், காமாட்சியம்மன் கோவில் வீதி, ஜம்மனை வீதி ஆகிய பகுதிகளில் சுகாதார அதிகாரி ராமச்சந்திரன் தலைமையில் சுகாதார ஆய்வாளர் ராம கிருஷ்ணன் மற்றும் ஊழியர்கள் கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் 2 கடைகள் மற்றும் ஒரு குடோனில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள், ஒருமுறை பயன்படுத்தும் டம்ளர்கள் மூட்டை, மூட்டை யாக பதுக்கி வைத்திருந்ததை கண்டறிந்தனர். மேலும், ஜம்மனை வீதியில் உள்ள கடைக்கு அருகே இருந்த குடோனில் இருந்து 2.50 டன் எடையுள்ள பாலித்தீன் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதை யடுத்து அந்த கடை உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுபோல் 2 கடைகளிலிருந்து ஒரு டன் பாலித்தீன் பைகள், டம்ளர்கள் பறிமுதல் செய்யப்பட்டு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதையடுத்து பறி முதல் செய்யப்பட்ட பாலித்தீன் பைகள், டம்ளர்களை மேயர் தினேஷ்குமார் பார்வையிட்டார். மேலும், பாலித் தீன் பைகள், டம்ளர்களை வாங்கி விற்பனை செய் யவோ, மக்கள் பயன்படுத்தவோ கூடாது என எச்ச ரிக்கை விடுத்தார். இதில், 3 ஆவது மண்டல தலைவர் கோவிந்தராஜ் உட்பட மாநகராட்சி அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
விவசாயிகள் போராட்டம்
திருப்பூர், மே 20- திருப்பூரில் ஆடுகள் திருடப்படும் சம்பவத்தில் காவல் துறை அலட்சியமாக நடந்து கொள்வதாக குற்றம் சாட்டி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பர பரப்பு ஏற்பட்டது.
அவிநாசியில் சட்ட விழிப்புணர்வு முகாம்
அவிநாசி, மே 20- அவிநாசியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பில் ரேவதி நர் சிங் கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட உரிமை யியல் நீதிபதி வடிவேல், குற்றவியில் நீதித் துறை நடுவர் சபீனா ஆகியோர் சிறப்புரை யாற்றினர். மேலும், இம்முகாமில் புகை யிலை பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்தும்,இதிலிருந்து மாணவர் கள் தங்களை தற்காத்துக் கொள்ளும் முறை கள் பற்றியும் விளக்கமாக எடுத்துரைக் கப்பட்டது. மாணவர்களின் நல்லொ ழுக்கங்கள் மற்றும் இலவச சட்ட உதவி மையத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடு கள் பற்றியும் விளக்கப்பட்டது. இதில், மூத்த வழக்கறிஞர்கள் பிரகாஷ், சுப்பிர மணி, அவிநாசி வழக்கறிஞர் சங்க செயலா ளர் சாமிநாதன், இணைச் செயலாளர் கணேஷ்குமார், நர்சிங் கல்லூரி முதல்வர் பிரபாவதி உட்பட பலர் கலந்து கொண்ட னர். முன்னதாக, இந்நிகழ்ச்சியை சட்டப் பணிகள் குழு முதுநிலை நிர்வாக உதவி யாளர் வசந்தி ஒருங்கிணைத்தார்.
நூல் விலை உயர்வு: மே 22 முதல் ஜூன் 5 வரை ஜவுளி உற்பத்தியாளர்கள் போராட்ட அறிவிப்பு
திருப்பூர், மே 20- நூல் விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டு வர வலியுறுத்தி மே 22 ஆம் தேதி முதல் ஜூன் 5 ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு முழுமையாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக கோவை, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர். கோவை, திருப்பூர் மாவட்டங் களில் ஏறத்தாழ 2 லட்சம் விசைத்தறி கள் செயல்பட்டு வருகின்றன. விசைத் தறிகளுக்கு ஜவுளி உற்பத்தியாளர்கள் பாவு, நூல் கொடுத்து அதை துணியாக மாற்றி விற்பனை செய்து வருகிறார் கள். இதற்கிடையே வியாழனன்று கூடிய ஜவுளி உற்பத்தியாளர்கள் பொதுக்குழுவில் உற்பத்தி நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால்15 நாட்களுக்கு தறிகள் இயங்காத சூழல் உருவாகும். நூல் விலை ஏற்றம் கார ணமாக ஏற்கனவே 50 சதவிகித உற் பத்தி நடைபெற்று வந்தது. இந்நிலை யில் 16, 17 தேதிகளில் முழுமையான வேலை நிறுத்தம் செய்தும் நூல் விலைக்கு ஏற்றபடி ஜவுளி விலை உயர்வாகவில்லை. எனவே, தற்போது 15 நாள் வேலை நிறுத்தம் செய்யப்படு வதாக ஜவுளி உற்பத்தியாளர்கள் பொதுக்குழுவில் முடிவு செய்யப் பட்டது. இந்த வேலை நிறுத்தத்தின் கார ணமாக விசைத்தறிகளில் பணியாற் றும் லட்சக்கணக்கான தொழிலாளர் கள் நேரடியாக பாதிக்கப்படுவர். நாள் ஒன்றுக்கு 100 கோடி ரூபாய் அள விலான ஜவுளி உற்பத்தி, வர்த்தகம் பாதிக்கப்படும். ஆகவே, பஞ்சு மற் றும் நூல் ஏற்றுமதிக்கு தடை விதித்து, நூல் விலையை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு கோவை, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.
‘காந்தி அமைதி விருது’ பெற அழைப்பு
திருப்பூர், மே 20- ‘காந்தி அமைதி விருது’ பெற தகுதியான நபர்கள் விண் ணப்பிக்கலாம் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, அகிம்சை மற்றும் பிற காந்திய முறை மூலம் சமூக பொருளாதார மற்றும் அரசியல் மாற்றத்திற் கான சிறப்பான பங்களிப்பு வழங்கியவர்கள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து, ‘காந்தி அமைதி விருது’க்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேசியம், இனம், மதம், பாலினம் ஆகியவற்றை பொருட்படுத்தாமல் அனைத்து தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்கும் இவ்விருது வழங்கப்படுகிறது. இவ்விருதுக்கு தகுதியானவர்கள் தகுந்த ஆதாரங்களை மே 26 ஆம் தேதி மாலை 5 மணிக் குள், அறை எண்: 35 மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திருப்பூர் என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும், கூடுதல் விவரங்களுக்கு, 0421 2971168 என்ற எண்ணை அழைக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
பருத்தி ஏலம்
தாராபுரம், மே 20- திருப்பூர் மாவட்டம், மூல னூர் ஒழுங்குமுறை விற் பனைகூட முதுநிலை செய லாளர் ஆர்.பாலச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது, மூல னூர் ஒழுங்குமுறை விற்ப னைக்கூடத்தில் பருத்தி விற் பனை மறைமுக ஏலம் நடை பெற்றது. இதில் திருப்பூர், கருர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, கோவை மாவட்டங் களை சேர்ந்த 919 விவசாயி கள் பருத்தியை விற்பனைக் காக கொண்டு வந்திருந்த னர். இந்த ஏலத்தில் அதிக பட்ச விலையாக பருத்தி குவிண்டால் ஒன்றிற்கு ரூ.15 ஆயிரத்து 98க்கும், குறைந்த பட்ச விலையாக ரூ.12 ஆயி ரத்து 50க்கும், சராசரி விலை யாக ரூ.13 ஆயிரத்து 50க்கும் விலை போனது. மொத்தம் 8 ஆயிரத்து 56 முட்டை களில் கொண்டு வரப்பட்ட 2 ஆயிரத்து 750 குவிண்டால் பருத்தி ரூ.3 கோடியே 44 லட்சத்து 61 ஆயிரத்து 875க்கு விற்பனையானது.
ஈரோடு : மே 24 இல் ஜமாபந்தி ஆட்சியர் அறிவிப்பு
ஈரோடு, மே 20- ஈரோடு மாவட்டத்தில் 1431 ஆம் பசலிக்கான வரு வாய் தீர்வாயம், ஈரோடு மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து வட்டங்களிலும் வரும் 24 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதன்படி கொடுமுடி, மொடக்குறிச்சி, பவானி, ஈரோடு, நம்பியூர் ஆகிய வட்டங்களில் வருகிற மே 24 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரையிலும், தாளவாடி வட்டத் தில் 24 ஆம் தேதியன்றும், அந்தியூர் வட்டத்தில் 24 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரையிலும், கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் மற்றும் பெருந்துறை ஆகிய வட்டங்களில் 24 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரையிலும், (சனி, ஞாயிறு, விடுமுறை நாட்கள் மற்றும் திங்கள்கிழமை நீங்க லாக) அந்தந்த வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது. எனவே, பொது மக்கள் தங்கள் கோரிக்கை மனுக் களை அந்தந்த வருவாய் தீர்வாய அலுவலர்களிடம் சமர்ப் பித்து உரிய நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம். மேலும், தற்போது நிலவிவரும் கொரானோ நோய் தொற்று பரவல் காரணமாக பல்வேறு வகையான தடுப்புப்பணி கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பொது மக்கள் வருவாய் தீர்வாயம் நடைபெறும் நாட்களில் அலுவல கத்துக்கு வருகைபுரியும் போது சமூக இடைவெளியை கடைபிடித்தல், முகக் கவசம் அணிதல், கை கழுவுதல் மற்றும் கூட்டத்தைத் தவிர்த்தல் போன்ற அரசின் அறிவு றுத்தல்களை தவறாமல் பின்பற்றுமாறு மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
சிறுவாணியில் 65 மி.மீ., மழைப் பதிவு
கோவை, மே 20- சிறுவாணி அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 65 மி.மீ., மழை பதிவானது. கோவை மாநகராட்சியின் குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை உள்ளது. தமிழக-கேரளா எல்லையில் உள்ள இந்த அணையின் மொத்த நீர்த்தேக்க உயரம் 50 அடி. சிறுவாணி அணைப் பகுதியில், தற்போது மழைப் பொழிவு காணப்படுகிறது. வியாழக்கிழமை காலை 6 மணி நிலவரப்படி, அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி யில், 65 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. சிறுவாணி அடி வாரத்தில், 15 மி.மீ., மழை பெய்துள்ளது. சிறுவாணி அணை யின் நீர் மட்டம்18.25 அடியாக இருந்தது. தற்போது குடிநீர் தேவைக்காக, 5.3 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்ப டுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தார் திருடிய இருவர் கைது
கோவை, மே 20- கோவையில் தார் திருடிய இருவரை காவல்துறையி னர் கைது செய்து, 3 லாரிகளை பறிமுதல் செய்தனர். கோவை மதுக்கரை காவல் உதவி ஆய்வாளர் கவி யரசு மற்றும் போலீசார் மதுக்கரை சீராபாளையம் பகுதி யில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். .அப்போது, அங்கி ருந்து குடோனை சோதனை செய்தபோது, 775 கிலோ தார் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் மலுமிச்சம் பட்டியை சேர்ந்த லாரி ஓட்டுநர் ஞானப்பிரகாசம் (48) என்ப வர் சாலையில் நிறுத்தி இருந்த லாரியில் இருந்து தாரை திருடி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து ஞானபிரகாசை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். மேலும், அவர் திருடி வைத்திருந்த 775 கிலோ தார் மற் றும் 2 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோன்று, லட்சுமி நகர் பகுதியிலும் தார் திருட பட்டு பதுக்கி வைத்து இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு உள்ள ஒரு குடோனை சோதனை செய்த போது, அங்கு 775 கிலோ தார் திருடி மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.விசா ரணையில் மச்சம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பொன்ராஜ் (33) என்பவர் தாரை திருடி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து தார் மற்றும் மினி லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
கோவைக்கு வரும் 2 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்
கோவை, மே 20- கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் 2 ரயில்கள், மாற்றுப் பாதையில் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, கோவை போத்தனூர் ரயில் நிலையங்கள் இடையே பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், மே 23 ஆம் தேதி காலை 8.15 மணிக்கு பிலாஸ்பூரில் புறப்பட்டு 24 ஆம் தேதி மாலை 3.42 மணிக்கு கோவையை வந்தடை யும் பிலாஸ்பூர்-எர்ணாகுளம் வாராந்திரச் சிறப்பு ரயில் (22815) அன்றைய தினம் கோவை ரயில் நிலையத்துக்கு வராது. அதற்கு பதிலாக இருகூரில் இருந்து போத்தனூர் ரயில் நிலையம் சென்றடையும். அங்கிருந்து எர்ணா குளத்துக்கு இயக்கப்படும். இதேபோல், மே 24ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு பாட்னாவில் புறப்பட்டு, 26 ஆம் தேதி மாலை 5.02 மணிக்கு கோவையை வந்தடையும் பாட்னா - எர்ணாகுளம் வாராந்தி ரச் சிறப்பு ரயில் (22670) அன்றைய தினம் கோவை ரயில் நிலையத்துக்கு வராது. அந்த ரயில் இருகூரில் இருந்து போத்தனூர் ரயில் நிலையம் சென்றடையும். அங்கிருந்து எர்ணாகுளத்துக்கு இயக்கப்படுகிறது. இந்த 2 ரயில்க ளும் கோவை ரயில் நிலையத்துக்கு பதில், போத்தனூா் நிலையத்தில் நின்று செல்லும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
பெருந்துறையில் நாளை த.தீ.ஒ. முன்னணியின் சிறப்பு மாநாடு
ஈரோடு, மே 20- சாதி, ஆணவப் படுகொலைகளைத் தடுக்க சிறப்பு சட்டம் நிறைவேற்ற வேண்டும் எனக்கோரி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மேற்கு மண்டல சிறப்பு மாநாடு ஞாயிறன்று பெருந்துறையில் நடைபெறவுள்ளது. மாநில துணை பொதுச்செயலாளர் யு.கே.சிவஞானம் தலைமை யில் நடைபெறும் மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், முன்ன ணியின் மாநில பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ், மாநில தலைவர் டி.நல்லக்கண்ணு உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளனர். இதில், நீலகிரி, கோவை, திருப் பூர், நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த திரளானோர் கலந்து கொள்ள உள்ளனர்.