அவிநாசி, அக். 12- சேவூா் அருகே பாளியக்காடு பகுதியில் கனமழையால் வீடு இடிந்து விழுந்ததில் பெண் படுகாயமடைந்தார். சேவூா் ஊராட்சி, பாளியக்காடு ஆதிதிராவிடா் காலனியில் வசித்து வருபவா் ராமன் மகன் சந்திரன் (47). ஆட்டோ ஓட்டுநர். இவரது வீடு மிகவும் பழுதடைந்ததால், அருகிலேயே புதிதாக வீடு கட்டி வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2 நாள்க ளாக சேவூர் பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், அப்புறப்படுத்தபடாத சந்திரனின் பழைய வீடு திடீரென இடிந்து அருகில் உள்ள பட்டான் என்பவரின் வீட்டின் மீது விழுந்தது. இதில் பட்டானின் வீட்டில் இருந்த கருவலூரைச் சோ்ந்த உறவினர் அம்மணி (58) கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்தார். இதையடுத்து சிகிச்சைக்காக அவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தக வலறிந்து வந்த வருவாய்த் துறையினர், அம்மணி குடும்பத் தினருக்கு நிவாரணத் தொகை வழங்கினர்.