சேலம், ஜூன் 25- அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மார்க்சிஸ்ட் கட்சி சார் பில் கன்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இளைஞர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெறு வலியுறுத்தி, சேலம் மாவட்டம் கொங்கணாபும் பேருந்து நிலையம் முன்பு கொங்கணாபுரம் ஒன்றிய குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ். கே.சேகர், ஜி.கணபதி, கொங்கணாபுரம் செயலாளர் எஸ். முத்துசாமி உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். சிபிஎம் சங்க கிரி தாலுக்கா குழு சார்பில் நடைபெற்ற கன்டன ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா குழு உறுப்பினர் ஆர். ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இதில், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ராமமூர்த்தி, தாலுக்க குழு உறுப்பினர் ஏ.சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.