ஈரோடு, ஜூலை 12- ஈரோடு விசைத்தறியாளர்களின் வேலை நிறுத்த போராட் டம், அமைச்சரின் வாக்குறுதியால் நிறைவு பெற்றது. இதை யடுத்து விசைத்தறிகள் இயக்கம் மீண்டும் துவக்கியது. ஈரோடு சுற்றுவட்டார பகுதியில் உள்ள செயற்கை இழை (ரயான்) துணி உற்பத்தி செய்யும் விசைத்தறியாளர்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் துணிக்கு மூன்று ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்ட காரணத்தால் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட் டது. கடந்த ஜூலை 3 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை நடை பெற்ற வேலை நிறுத்தம் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் சங்க தலைவர் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில், தமிழக அரசின் வேட்டி, சேலை தொடர்பாக சென் னையில் கடந்த வியாழனன்று மாநில கைத்தறி துறை அமைச் சரை நேரில் சந்தித்தோம். அப்போது வெகு விரைவில் வேட்டி உற்பத்தி தொடங்க வழிவகை செய்யப்படும் என அமைச்சர் வாக்குறுதியளித்தார். இதனால் கடந்த ஒரு வார காலமாக துணியின் விலையில் 25 பைசா மட்டும் உயர்ந்த நிலை யிலும். மேற்கொண்டு பெரும் நஷ்டம் ஏற்படும். இருந்த போதி லும் தற்போது உள்ள ரயான் பாவுகளை உற்பத்தி செய்து காலி செய்வது என்றும், அதன்பின் வேட்டி ரகத்திற்கு தயாராவது என்றும், விசைத்தறி தொழிலாளர்களின் நலன் கருதி ஈரோடு விசைத்தறி உரிமையாளர் சங்கத்தின் சார்பாக அறிவிக்கப் பட்ட உற்பத்தி நிறுத்தம் திரும்பப்பெறப்படுகிறது என தெரி விக்கப்பட்டது. இதனால் ஒருவார கால வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்து திங்களன்று வழக்கம் போல் விசைத்தறிகள் இயங்கின. மேலும், அமைச்சரின் அறிவிப்புக்கு விசைத்தறியாளர்கள் நன்றி கூறினர்.