districts

img

அரூரில் அரசு கூட்டுறவு மரவள்ளி கிழங்கு அரவை தொழிற்சாலை அமையுமா?

தருமபுரி, ஜன.12- அரூரில்  அரசு கூட்டுறவு மரவள்ளிக் கிழங்கு அரவை தொழிற்சாலை அமைக்க வேண்டும் என மர வள்ளி கிழங்கு விவசாயிகள் தமிழக அரசை வலி யுறுத்தியுள்ளனர். தமிழகத்திலே அதிகமாக மரவள்ளிக் கிழங்கு சாகு படி செய்வது தருமபுரி, சேலம் மாவட்டங்கள் தான். குறிப்பாக, தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், மொரப்பூர் ஆகிய பகுதிகளில் மானாவாரி பயி ராக மரவள்ளிக் கிழங்கு சாகுபடியில் அதிகளவில் விவ சாயிகள் ஈடுபடுகின்றனர். மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்ய ஏற்ற மண் உள்ளதால்  விவசாயிகள் மரவள்ளி கிழங்கு சாகுபடி யில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மரவள்ளி கிழங்கு சாகுபடி 10 மாத பயிராகும். மாவட்டத்தில் சுமார் 50 ஆயி ரம் ஏக்கர் பரப்பளவில் மானாவாரி, இறவை ஆகிய வற்றில்  மூலம் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப் பட்டு வருகிறது. ஒரு ஏக்கருக்கு சாகுபடி செய்ய  ரூ.15ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை செலவாகி றது. ஏக்கருக்கு 100 மூட்டை மரவள்ளி கிழங்கு விளை கிறது. ஒரு மூட்டை ரூ.200 முதல் ரூ.300 வரை  கிடைக்கிறது. இங்கு விளைவிக்கும் மரவள்ளிக் கிழங் கிற்கு கட்டுப்படியான விலை கிடைப்பதில்லை என  விவசாயிகள் கூறுகின்றனர்.   இதில் பெரும் பகுதி விவசாயிகள்  சாகுபடி செய்ய கடன் வாங்குகின்றனர். மரவள்ளிக் கிழங்கு விளைந்து அறுவடைக்கு வரும் போது இடைத்தரகர்கள் விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு வாங்குகின்றனர்.  அரூர், மொரப்பூர், பாப்பிரெட்டிபட்டி பகுதியில் விளையும் இந்த மரவள்ளிக்கிழங்கை , சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள தனியார் ஆலைக்கு தான் அரவைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இங்கு ஸ்டார்ச், மைதா, ஜவ்வரிசி  போன்ற பொருட்கள் தயா ரிக்கப்படுகின்றன. ஆகவே, அரூர் பகுதியில் அரசு கூட்டுறவு மரவள்ளிக்கிழங்கு ஆலை அமைக்க வேண் டும் என இப்பகுதி விவசாயிகள்  வலியுறுத்துகின்ற னர்.