districts

img

ஆழியார் அணையில் படகு சவாரி துவங்கப்படுமா? சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு !

பொள்ளாச்சி ஆழியார் அணையில் மீண்டும்  படகு சவாரி தொடங்கப்படுமா? சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

பொள்ளாச்சி அடுத்த ஆழியாரில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பூங்கா மற்றும் அணை உள்ளது.

தினந்தோறும் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஆழியார் பூங்காவின் அழகை ரசிக்க ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள்  வந்து செல்கின்றனர்.

குறிப்பாக சனி ஞாயிறு மற்றும் பள்ளி விடுமுறை நாட்களில் இங்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதன்மூலம் பொதுப்பணித்துறைக்கும் ஆழியார் அணையில் இயக்கப்படும் படகுசவாரிக்கு 10 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ரூ .30-ம் 10 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூ 40-ம் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. இதன் மூலம் கோட்டூர் பேரூராட்சி கணிசமான வருவாயை ஈட்டிவந்தது.

இந்நிலையில், கடந்த 2020-ஆம் ஆண்டில் தமிழகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதன்பின் படகுசவாரி நிறுத்தப்பட்டது.

தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் முற்றிலும் நீக்கப்பட்ட பின்னும் படகு சவாரி தொடங்கப்படாமல் உள்ளது.

இதனால் ஆழியார்   அணையில் படகு சவாரி செய்து மகிழ வரும் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர் .

மேலும், கோட்டூர் பேரூராட்சிக்கு இதனால் பெரிதளவு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.

இனிவரும் தொடர் விடுமுறை காலமான மே மாதத்தில் ஆயிரக்கணக்கில் சுற்றுலா பயணிகள் வரக்கூடும்.எனவே மீண்டும் அணையில் படகு சவாரி தொடங்க வேண்டுமென சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.