districts

img

ராஜகால்வாயினை ஆக்கிரமித்து கட்டிடங்கள்: நடவடிக்கை எடுக்கப்படுமா? - பொதுமக்கள் எதிர்பார்ப்பு

தருமபுரி, ஜன.22- அரூரில் உள்ள பெரிய ஏரிக்கான ராஜ கால்வாய்களை ஆக்கிரமித்து வணிக வளாகம் உள்ளிட்ட கட்டிடங்கள் எழுப் பப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர் வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். தருமபுரி மாவட்டம், அரூர் அருகே சுமார் 165 ஏக்கர் பரப்பளவில் பெரிய ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் தண்ணீர் நிரம்பும் பட்சத்தில், அரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 15க்கும்  மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் உயர்ந்து, குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக் கும். கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை பொய்த்துப்போனதன் காரணமாக, அரூர் பெரிய ஏரிக்கு தண்ணீர் வரவில்லை. இந்த ஆண்டு பெய்த பருவ மழையால் பெரிய ஏரி நிரம்பியது. ஏரி  நிரம்பிய பின் வெளியேறும் தண்ணீர் ராஜவாய்க்கால் வழியாக வள்ளிமதுரை அணைக்கட்டுக்கு சென்று, தென் பெண்ணை ஆற்றில் கலக்கும். ஆனால், ராஜகால்வாயிலில் பராமரிப்பு இல்லாமை உள்ளிட்ட காரணங்களால் அரூர், திருவிக நகர், பெரியார் நகர், தில்லை நகர், பாரதியார் நகர், கோவிந்தசாமி நகர், சேலம் பிரதான சாலை, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி பகுதி உள்ளிட்ட குடி யிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

எனவே, ராஜவாய்க்காலை ஆக் கிரமிப்பில் இருந்து மீட்டு முறையாக பரா மரிக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கடந்த 21.11.2021 ஆம் தேதியன்று அரூர் கோட் டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் விளைவாக மாவட்ட நிர்வாகம் ராஜகால்வாயை சீரமைக்க ரூ.10 லட்சம் ஒதுக்கியது. ஆனால், சீரமைக்கும் பணி  முழுமையடையவில்லை. பல இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அதிகாரி கள் அப்படியே விட்டுவிட்டு சென்றுள்ள னர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் அரூர் ஒன்றிய செயலாளர் பி.குமார் கூறு கையில், அரூர் பெரிய ஏரி ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் ஏற்படுத்தப்பட்டது. இந்த ஏரியின் ராஜகால்வால் பராமரிப்பு இல்லாமல் ஆக்கிரமிப்பட்டு உள்ளது. இதையடுத்து சிபிஎம் சார்பில் போராட் டம் நடைபெற்றதன் காரணமாக நிதி ஒதுக் கப்பட்டு கால்வாய் சீரமைப்பு பணிகள் துவங்கியது. ஆனால், கால்வாயை மேலோட்டமாக தூர்வாரிவிட்டு சென்றுள் ளனர். தற்போது கால்வாயின் மேல்  வணிக வளாகம், வீடுகள் கட்டப்பட்டுள் ளது. இதனால், அதிக மழை பெய்யும் சமயத்தில், கால்வாயில் செல்லும் தண் ணீர், குடியிருப்புக்குள் புகுந்துவிடும் அபா யம் ஏற்பட்டுள்ளது. எனவே, ராஜ கால்வாய் ஆக்கிரமிப்புகளை உடனடி யாக அகற்ற வேண்டும். கால்வாயின் இரு புறமும் சிமெண்ட் மூலம் கரைகள் கட்ட  வேண்டும், என அவர் கோரிக்கை விடுத் துள்ளார்.