districts

img

வனவிலங்குகளுக்கும் பூமியில் வாழ உரிமை உண்டு - சிதம்பரம் இரவிச்சந்திரன்

ஈக்வடார் உலகில் முதல்முறையாக வனவிலங்கு களுக்கும் பூமியில் பயமின்றி வாழ உரிமை வழங்கியுள்ளது. வளர்ப்பு மிருகமாக பராமரிப்பதும் வனவிலங்குகளின் நலனிற்கு எதிரானது என்று அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் வழங்கிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பில் கூறியுள்ளது. உலகில் முதல்முறையாக ஒரு நாடு வனவிலங்குகளுக்கு இத்த கைய உரிமையை வழங்குவது இதுவே முதல்முறை.

அரசியல் சாசனம் தரும் மகத்தான உரிமை

ஈக்வடார் நாட்டில் இயற்கைக்கான உரிமை என்ற பிரிவின் கீழ் இயற்கைக்கும் இதேபோன்ற உரிமை வழங்கும்  சட்டம் அரசியல் சாசனத்தில் உள்ளது. மனித உரிமைகளைக் காக்க உலகில் பல நாடுகளும் போராடும்போது ஈக்வடார் வனவிலங்குகளுக்கு சட்டரீதியிலான உரிமையை வழங்கியுள்ளது.

மனிதன் தவிர மற்றவை

7-2 என்ற விகிதத்தில் நீதிமன்றம் அளித்த இத்தீர்ப்பின்  மூலம் மனிதன் தவிர மற்ற விலங்குகள் அனைத்திற்கும் வாழ உரிமை கொடுத்து சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது சூழல் காக்க எந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்தது  என்பதை எல்லா நாடுகளும் உணரவேண்டும் என்று விலங்குநல நிபுணர் கிறிஸ்டென் ஸ்டில்ட் (Kristen Stilt) கூறியுள்ளார்.

மகத்தான சட்டம் பிறக்கக் காரணமான சோகக் கதை

எஸ்ட்ரெலீட்டா (Estrellita) என்ற ஒரு வயதே ஆன வுல்லி  வகையைச் சேர்ந்த குரங்கு சட்டவிரோதமாக காட்டி லிருந்து கொண்டுவரப்பட்டது.  இது ஆன பியாட்ரிஸ் பர்பானோ ப்ரோனியோ (ana Beatriz Burbano Proanio) என்ற  நூலகரின் வீட்டில் 18 மாதங்கள் திருட்டுத்தனமாக செல்லப் பிராணியாக வளர்க்கப்பட்டுவந்தது. அந்த காலகட்டத்தில் இது குடும்பத்தினருடன் சைகைகள் மற்றும் செயல்கள்  மூலம் தகவல் தொடர்பு கொள்ளப் பழகியது. குடும்பத்தின ரின் பழக்கவழக்கங்களைக் கற்றுக்கொண்டது.

மீட்பும் மரணமும்

இது பிறகு உள்ளூர் அதிகாரிகளால் ஆனபியாவிடம் இருந்து மீட்கப்பட்டது. அருகில் இருந்த விலங்குகாட்சிச் சாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டு அங்கு பராமரிக்கப் பட்டது. இது நடந்த ஒரு மாதத்திற்குள் எஸ்ட்ரெலீட்டாவிற்கு  திடீரென்று ஒரு நாள் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது. 

நீதிமன்றத்தில் வழக்கு

இது நிகழ்வதற்கு முன் ஆனபியா ஈக்வடார் உச்ச நீதிமன்றத்தில் எஸ்ட்ரெலிட்டாவை அதிகாரிகளிடம் இருந்து மீட்டு தன்னிடமே மீண்டும் கொடுக்கவேண்டும் என்று கோரி  வழக்கு தொடுத்தார். ஒன்றரை ஆண்டுகாலமாக எஸ்ட்ரெ லீட்டா வாழ்ந்துவந்த சூழ்நிலையில் இருந்து திடீரென்று அதி காரிகளால் தன் குடும்பத்தினரிடம் இருந்து வலுக்கட்டாய மாகப் பிரிக்கப்பட்டதால் அது மன உளைச்சலுக்கு ஆளாகி யுள்ளது என்று அவர் வாதிட்டார்.

வழக்கின் திருப்புமுனை

நீதிபதிகள் வழக்கை அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுகினர். ஒரு வயதே ஆன அந்த குரங்கு தன் உடலையும்,  மனதையும் சுதந்திரமாக பராமரித்து பூமியில் வாழ அதற்கு  சகல உரிமையும் உண்டு. அதிகாரிகள் ஆனபியாவின் வீட்டில் இருந்து அதை காட்சிச்சாலைக்குக் கொண்டுவரும் முன் குரங்கின் உடல் மற்றும் மன நலம் பற்றிய பரிசோத னைகளை மேர்கொண்டிருக்கவேண்டும்.

வரலாற்றுத் தீர்ப்பு

சட்டவிரோதமாக ஆனபியா குரங்கினைக் காட்டில் இருந்து எடுத்துச்சென்று வீட்டில் வைத்து வளர்த்தது பெரும்  குற்றம். இயல்பான காட்டின் சூழலில் இருந்து குரங்கு  வலுக்கட்டாயமாக வேறொரு வாழிடத்திற்கு அழைத்துச்  செல்லப்பட்டிருப்பது வாழ்வதற்கான அதன் சுதந்திரத்தைப்  பறிப்பதே. அதனால் அரசு உடனடியாக வனவிலங்குகளின் வாழ்வுரிமைக்கான புதிய விதிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் புரட்சிகரமான தீர்ப்பை வழங்கினர்.

வனவிலங்குகளும் உயிருள்ள ஜீவன்களே

வனவிலங்குகள் சூழலைக் காப்பதில் முக்கியப்பங்கு வகிப்பவை. அவற்றை வீட்டுப்பிராணிகளாக்கி மனிதப் பழக்கவழக்கங்களை வலுக்கட்டாயமாக அவற்றின் மீது திணிப்பது பெரும் குற்றமே. இது சூழலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் குறிப்பிட்ட அந்த விலங்கினத்தின் இனவிருத்தியையும் பெரிதும் பாதிக்கும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

இயற்கையின் உரிமைகளைப் பாதுகாக்க தனிசட்டம்

2021ல் ஈக்வடார் நீதிமன்றம் இயற்கையின் உரிமை களை பாதுகாக்க தனி அரசியல் சட்டத்தை நிறைவேற்றியது. வனப்பகுதியில் சுரங்கம் தோண்டுவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம் அது இயற்கை  வாழ்வுரிமைக்கு எதிரானது என்று கூறி இந்த மகத்தான சட்டத்தைக் கொண்டுவந்தது. ஈக்வடார் நாடே அரசியல் சாசன பாதுகாப்பளித்து இயற்கையின் உரிமைகளை காப்பதற் கென்று தனி சட்டத்தைக் கொண்டுவந்த உலகின் முதல் நாடு.

வனவிலங்குகளின் உரிமைகளே இயற்கையின் உரிமை

வனவிலங்குகளின் பாதுகாப்பிற்கு இந்த சட்டம் பெரிதும் உதவும் என்று ஈக்வடார் சூழல் வழக்கறிஞர் ஹியூகோ எஷிவேரியோ (Hugo Echeverrio) கூறுகிறார். இந்தப்  புதிய சட்டத்தின்படி வனவிலங்குகளுக்கு எல்லாவிதமான உரிமைகளும் உள்ளன. இவை இயற்கையின் உரிமை களால் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உரிமைக்குக் குரல் கொடுக்கும் மற்ற இடங்கள்

நியூசிலாந்து, கனடா, சில அமெரிக்க நகரங்கள் மற்றும்  உலகின் வேறு பல இடங்கள் வனவிலங்குகளுக்கு இதே  போன்ற பாதுகாப்பை வழங்கும் ஒப்பந்தங்கள், சட்டப்பிரிவு கள் மற்றும் உள்ளூர் விதிகளை உருவாக்கி நடைமுறைப் படுத்தி வருகின்றன. என்றாலும் ஈக்வடார் தவிர வேறு எந்த  நாடும் நகரமும் தங்கள் அரசியல் சாசனத்தில் உட்படுத்தி வனவிலங்குகளுக்கும், இயற்கைக்கும் சட்டப்பூர்வமான பாதுகாப்பை இன்னும் இதுவரை வழங்கவில்லை.

அச்சமூட்டும் நிலை

சட்டப் பாதுகாப்பு இல்லையென்றாலும் உலகின் பெரும் பாலான இடங்களிலும் இயற்கையைப் பாதுகாக்க  எடுக்கப்படும் முயற்சிகள் அதற்காகப் பாடுபடுவோரின் உயிருக்கே அச்சுறுத்தலைத் தருவதாக அமைந்துள்ளது. ஈக்வடாரின் இப்புதிய சட்டம் உலகம் முழுவதும் எல்லா  நாடுகளாலும் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட வேண்டும். செழுமைப்படுத்தப்பட வேண்டும். நீண்டநாள் நடை முறையில் இருக்கவேண்டும். புதிய பரிணாமங்களை அடைய வேண்டும்.

வனவிலங்குகள் வாழும் பூமி'

இந்த செயல்கள் அனைத்தி லும் சூழல் பாதுகாப்பு என்பதே முதண்மையானது. காட்டில் வாழவேண்டிய உயிரினங்கள் காட்டில்தான் வாழவேண்டும். அவற்றின் சுதந்திர நடமாட்டம், வாழிடப் பாதுகாப்பு, உணவு, நீர், இருப்பிடத்திற்கான அடிப்படை உரிமை, இனப் பெருக்க உரிமை போன்றவை வேட்டையாடுதல், கள்ளக் கடத்தல், விற்பனை, பரிமாற்றம் போன்ற மனிதக்  குறுக்கீடுகளால் பாதிக்கப்படுகின்றன. வனவிலங்குகளுக்கு இயற்கையுடன் இணைந்து வாழும் வாழ்க்கைமுறை உள்ளது. இதற்கு எதிராக மனிதன் செயல்படக்கூடாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

உயிரினங்களில் பாகுபாடு 

அமெரிக்காவின் அழியும் நிலையில் இருக்கும் விலங்கு களின் பாதுகாப்பு சட்டம் உட்பட பல சர்வதேச சட்டங்களும் அழியும் நிலையில் இருக்கும் உயிரினங்களுக்கே முக்கியத்துவம் தருகின்றன. பறவைக் காய்ச்சல் போன்ற பெரும் தொற்றுகள் ஏற்படும்போது அதைத் தடுக்க வழி தெரியாத மனிதன் குறிப்பிட்ட அந்த இனத்தைச் சேர்ந்த உயிரினங்களையே ஒட்டுமொத்தமாகக் கொல்வது நியாயமற்றது என்று கிறிஸ்டென் ஸ்டில்ட் கூறுகிறார். காலநிலை மாற்றத்தின் கெடுதிகளை இன்று உலகம் அனுபவிக்கிறது. ஆறாம் இனப் பேரழிவு ஏற்கனவே தொடங்கிவிட்டது என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். இயற்கையுடன் நம் வாழ்வு பின்னிப் பிணைந்துள்ளது. மனித வாழ்க்கை இயற்கையுடன் பகிரப்படுகிறது. சூழல் சீரழிவு பூமியில் ஒவ்வொரு மனிதனையும் தனிப்பட்டமுறையில் இன்று பாதித்துள்ளது. இந்நிலையில் இத்தகைய சட்டங்கள் இயற்கைக்கு, வனவிலங்குகளுக்கு பாதுகாப்பு தரும் முக்கியக் கவசமாக அமையும். இதன் மூலம் பூமி எல்லா உயிரினங்களும் அமைதியுடன் நிம்மதியாக வாழும் இடமாக மாறும் காலம் விரைவில் வரும் என்று சூழல் ஆர்வலர்கள் நம்புகின்றனர்.