உதகை, ஜூன் 25- நீலகிரி அருகே சாலையில் யானைகள் நடமாட்டம் அதிக ரித்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டி களுக்கு வனத்துறையினர் எச்ச ரிக்கையாக இருக்குமாறு அறிவு றுத்தி உள்ளனர். நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் அடிக் கடி ஊருக்குள் வருகிறது. இத னால், பொதுமக்கள் அச்சம டைந்து வருகின்றனர். இந்நிலை யில் கூடலூரில் இருந்து ஓவேலி செல்லும் சாலையில் உள்ள கெவிப்பாரா என்ற இடத்தில் காட்டு யானைகள் கூட்டமாக முகாமிட் டுள்ளன. தொடர்ந்து சாலையில் அடிக்கடி உலா வருகிறது. மேலும், பாக்கு உள்ளிட்ட விவ சாய பயிர்களை தின்று சேதப் படுத்தி வருகிறது. இதன் காரண மாக கோக்கால் மலையடிவாரம், கெவிப்பாரா, தருமகிரி, காமராஜ் நகர் உள்பட பல்வேறு கிராமங் களை சேர்ந்த பொதுமக்கள் அச்ச மடைந்துள்ளனர். மேலும் இரவில் ஊருக்குள் வர வாய்ப்புள்ளது என வனத்துறையினரிடம் புகார் தெரி வித்தனர். இதைத்தொடர்ந்து ஓவேலி வனத்துறையினர் அப் பகுதியில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது, கூடலூர்-ஓவேலி சாலையில் எந்த நேரமும் வாகன போக்குவரத்து இருந்து வருகிறது. இதேபோல் பொதுமக்கள் அத்தி யாவசிய பணிகளுக்காக கூடலூ ருக்கு வந்து செல்கின்றனர். தற் போது காட்டு யானைகள் கூட்ட மாக கெவிப்பாரா பகுதியில் முகா மிட்டுள்ளன. இதனால் தோட்ட தொழிலாளர்கள் மிகுந்த விழிப்பு டன் பணியாற்ற வேண்டும். இதேபோல் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கவனமுடன் செல்ல வேண்டும். மேலும் சுற்றுவட்டார கிராம மக்கள் தனியாக நடந்து செல்லக்கூடாது. இருசக்கர வாக னங்களில் செல்பவர்கள் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள இடங்களில் வாகனங்களை நிறுத் தக்கூடாது. குடியிருப்பு பகுதிக்கு காட்டு யானைகள் வந்தால் உடனடியாக வனத்துறையின ருக்கு தகவல் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.