districts

img

குன்னூர் மலைப்பாதையில் காட்டுயானைகள் உலா

உதகை, ஜன.22- குன்னூர் – மேட்டுப்பாளையம் மலைப்பாதைகளில் காட்டுயானை கள் முகாமிட்டுள்ளதால், வாகன ஓட்டி களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை  விடுத்துள்ளனர். மலை மாவட்டமான நீலகிரி மாவட் டத்தில் தற்போது நிலவி வரும் காலநிலைக்கு ஏற்ப காடுகளில் பழங் கள் காய்த்துள்ளது. முக்கியமாக நாவல்பழம், பலா உள்ளிட்ட பழங்கள் அதிகளவில் காய்த்துள்ளதால், அவற்றை உண்ண வனவிலங்கு களான கரடி, யானை உள்ளிட்டவை வருகின்றன. இந்நிலையில், குன் னூர் – மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் அதிகளவில் பால  மரங்கள் உள்ளன. இந்நிலையில் பாலப்பழங்களை உண்பதற்காக குட்டியுடன் கூடிய ஆறுகாட்டு  யானைகள் கூட்டமாக கே.என்.ஆர்  மற்றும் புதுக்காடு போன்ற பகுதியில் முகாமிட்டுள்ளது. யானைகள் அவ்வப் போது சாலையை கடப்பதால்,  வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும் என வனத் துறையினர் வலியுறுத்தி உள்ளனர். மேலும், யானை கூட்டத்தை அருகே சென்று புகைப்படம் எடுக்கவோ, துன் புறுத்தவோ கூடாது என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.