உடுமலை, டிச.23- விளைநிலத்தில் இருந்த தென்னை மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகளை விளைநிலத்திற்கு வரா மல் தடுக்கும் வகையில், மலை அடிவா ரப் பகுதியில் சூரிய சக்தி மின் வேலி அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். உடுமலை திருமூர்த்தி மலை அரு கில் சனியன்று இரவு வளையபாளை யம், கே.வல்லக்குண்டாபுரம் பகுதியில் இருக்கும் புள்ளார்கரடில் தென்னை மரங்களை காட்டு யானைகள் சேதப்ப டுத்தி உள்ளன. விவசாய விளை நிலங்க ளையும், பயிர்களையும் சேதப்படுத் தும் விலங்குகளை கட்டுப்படுத்த சூரிய சக்தி மின் வேலி மற்றும் மலை அடிவாரப் பகுதியில் அகழிகள் அமைக்க வனத்து றையினர் நடவடிக்கை எடுக்க வேண் டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகை யில், மலைப்பகுதியில் இருக்கும் காட்டு விலங்குகள் உணவு மற்றும் குடிநீர் தேவைகளுக்காக மலை அடிவாரப் பகுதி யில் இருக்கும் விளை நிலத்தில் காட்டு யானைகள், பன்றிகள் தென்னை மரங் களை சேதப்படுத்தி வருவது கவலை அடைய செய்துள்ளது. காட்டு பகுதி யில் உள்ள விலங்குகள் விளை நிலங்க ளுக்கு வரத் தொடங்கி உள்ளதால் வனத்துறையினர் மலை அடி வாரத் தில் சூரிய சக்தி மின் வேலிகளை அமைக்க வேண்டும். யானைகளை கட் டுப்படுத்த அகழிகளை வெட்ட வேண் டும். வன விலங்குகளால் பாதிக்கப் பட்ட விவசாயிகள் மற்றும் தென்னை மரங்கள், விளை பயிர்களுக்கு உரிய நேரத்தில் இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்கள்.