கோவை, பிப்.12- கோவை அருகே விவசாய தோட்டத்தில் புகுந்த காட்டு யானை, தண்ணீர் பைப்புகளை சேதப்படுத்தி தாகம் தீர்த்து விட் டுச் சென்ற சம்பவம், அப்பகுதி விவ சாயிகளிடம் அச்சத்தை ஏற்படுத் தியுள்ளது. கோவை மாவட்டம், தடாகம் அருகே உள்ள பொன்னூத்து அம் மன் வனப்பகுதியில் தற்போது 20க் கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானை கள் மாலை மற்றும் இரவு நேரங் களில் வனத்தில் இருந்து வெளி யேறி அருகே உள்ள குடியிருப்பு மற்றும் தோட்டங்களில் புகுந்து அதிகளவில் சேதத்தை ஏற்படுத்தி வருவதாக விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நி லையில் திங்களன்று அதிகாலை தாளியூர் பகுதிக்குள் ஒற்றை யானை புகுந்தது. பின்னர் அந்த யானை மலர்விழி என்பவரது தோட் டத்திற்குள் புகுந்து அங்கிருந்த தண்ணீர் பைப்புகளை சேதப்படுத் தியது. பின்னர் அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் நீரை அருந்திய யானை, அருகில் உள்ள தோட்டத் திற்குள் புகுந்து தென்னை மற்றும் பாக்கு மரங்களை சேதப்படுத் தியது. தொடர்ந்து, வனத்துறையி னருக்கு தகவல் அளித்ததை அடுத்து அங்கு வந்த வனத்துறை யினர் யானையை வனப்பகுதிக் குள் விரட்டினர். இது குறித்து அப்பகுதி விவசா யிகள் கூறுகையில், இரவு நேரங்க ளில் ஊருக்குள் புகும் யானைக ளால் விவசாயப் பயிர்கள் முற்றி லும் சேதமாவதால் அதிக நஷ் டத்தை சந்தித்து வருவதாகவும், யானைகளால் பலர் விவசாயத்தை கைவிடும் சூழல் உருவாகியுள்ள தாகவும் கூறினர். மேலும், விவ சாயத்தை காக்க வேண்டும் எனில் யானைகள் ஊருக்குள் வருவதை வனத்துறையினர் தடுக்க வேண் டும் எனவும் கோரிக்கை விடுத்த னர். இதனிடையே தோட்டத்திற் குள் புகுந்த யானை தண்ணீர் பைப் புகளை சேதப்படுத்திவிட்டு தண் ணீர் குடித்து செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வளைதளங்களில் பரவி வருகிறது. ஈரோடு இதேபோன்று, ஈரோடு மாவட் டம், தாளவாடி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 3 காட்டு யானைகள் விவசாயி ரவிசந்தி ரன்(38) என்பவரின் தோட்டத்துக் குள் புகுந்து வாழை, தென்னை மரங்களை சேதப்படுத்தின. இதை யடுத்து அதே பகுதியில் உள்ள சேகர் (45) என்பவரின் தோட்டத் துக்குள்ளும் யானைகள் புகுந்து அங்கிருந்த வாழை மரங்களையும் சேதப்படுத்தின. தகவலறிந்து வந்த வனத்துறையினர், சுமார் 4 மணி நேரம் போராடி யானை களை காட்டுக்குள் விரட்டினர். யானைகளால் ரூ.2 லட்சம் மதிப்பி லான வாழைகள், தென்னை மரங் கள் சேதமடைந்துள்ளதாக விவசா யிகள் கவலை தெரிவித்தனர்.