districts

img

குடியிருப்பை சேதப்படுத்திய காட்டு யானைகள்

கோவை, ஜன.24- கோவை அருகே வடமாநில தொழிலாளர்கள் குடியி ருப்பை காட்டு யானைகள் சேதப்படுத்திய சம்பவம் அப்ப குதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் வனச்ச ரத்தில் உள்ள மூன்று காட்டு யானைகள் இரவு நேரங்க ளில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி, பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிக்குள் புகுந்து, ரேஷன் அரிசி மற்றும்  மாட்டு தீவனங்களை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள் ளது. இந்நிலையில், இந்த மூன்று யானைகளும் பெரியநாயக் கன்பாளையம் வனச்சரகம் கதிர் நாயக்கன்பாளையம் பகுதிக் குள் செவ்வாயன்று அதிகாலை நுழைந்தது. அப்போது அங்கு  கட்டிடத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தகர செட்டுகளை உடைத்து, அரிசியை தேடியது. அப்போது, அங்கிருந்த ஐந் துக்கும் மேற்பட்ட வட மாநிலத் தொழிலாளர்கள் உயிர் பயத் தால் உள்ளேயே பதுங்கிக் கொண்டனர். தொடர்ந்து எதிர்  வீட்டில் குடியிருக்கும் நபர்கள், வட மாநில தொழிலாளர் களை எச்சரிக்கை செய்து அங்கிருந்து வெளியே வரும்படி  அறிவுறுத்தினர். இதனைத் தொடர்ந்து ஒரு தொழிலாளி மட் டும் தகர செட்டுக்குள் இருந்து வெளியே ஓடினார். அப் போது அவரை ஆண் யானை ஒன்று தாக்க முன்ற நிலையில்,  யானையிடம் இருந்து அத்தொழிலாளி தப்பித்து அருகில் உள்ள குடியிருப்புகள் புகுந்து உயிர் தப்பினார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ”தாய் யானை யுடன் வரும் குட்டியானை மற்றும் ஆண் யானை என ஒரு  குழுவாக இந்த மூன்று யானைகள் உள்ளன. இந்த மூன்று  யானைகளும் இரவு நேரத்தில் வனப்பகுதியில் இருந்து வெளி யேறி குடியிருப்புகளை மட்டுமே குறிவைத்து அரிசி மற்றும்  மாட்டு தீவனங்களை சாப்பிடுகிறது. எந்த வீடாக இருந்தா லும் அதனை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று அரிசியை  சாப்பிட்டு வருகிறது. இந்த மூன்று யானைகளும் எங்கு அரிசி  வைக்கப்பட்டு இருக்கிறது என்பதை அறிந்து அந்த வீட்டை  மட்டும் உடைத்து உள்ளே செல்கிறது. இதன் காரணமாக மலை அடிவாரத்தை ஒட்டியுள்ள கிராம மக்கள் அச்சமடைந் துள்ளனர். எனவே, உடனடியாக இந்த யானைகளை அடர்ந்த  வனப்பகுதிக்குள் விரட்டி வெளியே வராத வகையில் வனத்து றையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித் தனர்.