பென்னாகரம், பிப்.2- விளைநிலங்களை சேதப்படுத்தி வரும் காட்டுயானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடித்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வியாழ னன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், வேப்பிலைஅள்ளி பகுதியில் காட்டு யானைகளை விரட்டும் பணி களில் மெத்தனம் காட்டியதாக போராட்டம் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட தகராறில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட விவசாயி களைத் தாக்கிய வனத்துறை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் மீது தொடுக்கப்பட்ட பொய் வழக்கை திரும்பப் பெற வேண்டும். காட்டுயானை உள்ளிட்ட வன விலங்குகள், விளைநிலங்களில் புகுந்து ஏற் படுத்திய பயிர் சேதத்தை முறையாக கணக் கிட்டு இழப்பீடு வழங்க வேண்டும். காட்டு யானையால் தாக்கப்பட்ட முதியவருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். வனப்பகுதியில் மணல் உள்ளிட்ட கனிம வளக்கொள்ளையில் ஈடுபடும் சமூக விரோதி களுக்கு உடந்தையாக செயல்படும் பாலக் கோடு வன சரகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வனப்பகுதியில் சிறு வன மகசூல் குத்தகையியல் முறைகேட்டில் ஈடுபட்டு, பட்டா நிலத்தில் சாகுபடி செய்யும் சீதாப்பழ மகசூலுக்கு விவசாயிகளிடம் மாமூல் கேட் கும் வனத்துறை ஊழியர்கள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும். விளை நிலங்களை தொடர்ந்து சேதப்படுத்தி வரும் காட்டு யானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடித்து,
அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தினர் பாப்பாரப் பட்டி பேருந்து நிறுத்தம் அருகே வியாழ னன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க வட்டார தலைவர் சின்னசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சோ.அர்ஜூ னன் கோரிக்கையை விளக்கி உரையாற்றி னார். இதில், சங்கத்தின் மாவட்ட தலைவர் குமார், துணைத்தலைவர்கள் கே.என்.மல் லையன், எஸ்.தீர்த்தகிரி, துணைச்செயலா ளர் ஆ.ஜீவானந்தம், கே.அன்பு, மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஏ.குமார், செயற் குழு உறுப்பினர் வே.விஸ்வநாதன், வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் சிலம்பரசன், விவ சாய தொழிலாளர் சங்க பகுதி செயலாளர் ராஜமாணிக்கம், தலைவர் சின்னராஜ், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ராதிகா அன்பரசு, ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் ராஜேஸ்வரி, அண்ணாமலை உட்பட் பலர் கலந்து கொண் டனர். முடிவில், ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து விவசாயிகள் சங்க வட்டார துணைச் செயலாளர் காமராஜ் நன்றி கூறினார். இதைத் தொடர்ந்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை விவசாயி சங்க தலைவர்கள் கிராம நிர்வாக அலுவலர் முருகனிடம் அளித்தனர்.