districts

img

புதிய மோட்டார் சட்டத்தை அமலாக்க அவசரம் ஏன்?

திருப்பூர், டிச.16- ஒன்றிய அரசின் புதிய மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை, தமிழக அரசு  ஒன்றின் பின் ஒன்றாக அமல்படுத்தி  வரு வதை கண்டித்து அரசு போக்குவரத்து, ஆட்டோ, மோட்டார் தொழிலாளர் சங் கம் சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சிய ரகம் முன்பு வெள்ளியன்று ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. சிஐடியு அரசுப் போக்குவரத்து ஊழி யர் சங்க மண்டல பொதுச் செயலாளர்  பி.செல்லதுரை தலைமையில் நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஆல்  ட்ராக் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையா ளர்கள் நலச் சங்க நிர்வாகி கனகராஜ், சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கத்  தலைவர் சுகுமார், மோட்டார் சங்க செய லாளர் ஒய்.அன்பு ஆகியோர் கோரிக் கைகள் குறித்து உரையாற்றினர். சிஐ டியு மாவட்டச் செயலாளர் கே.ரங்க ராஜ்  சிறப்புரை ஆற்றினார்.  இந்த ஆர்ப்பாட்டத்தில்,தமிழக அரசு ஒன்றிய அரசின் புதிய மோட்டார்  வாகன சட்ட திருத்தத்தை ஒன்றின் பின்  ஒன்றாக அமல்படுத்தி  வருவதை கண் டித்தும், தொழிலையும், தொழிலாளர்க ளையும் பாதிக்கும் மோட்டார் வாகன  சட்ட திருத்தத்தை கைவிட வேண்டும்.  அநியாய ஸ்பாட் பைன் முறையை ரத்து  செய்ய வேண்டும். ஓலா, உபர் கம்பெ னிகளின் கொள்ளையை தடுத்திட  தமிழக அரசு செயலினை துவக்க  வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள்  வலியுறுத்தப்பட்டது. முடிவில் மோட் டார் சங்கப் பொருளாளர் அருண் நன்றி கூறினார்.