உதகை, ஏப்.3- முப்படை தளபதி பிபின் ராவத் இறந்த போது வராத மோடி தேர்தல் பிரச்சாரத்திற்கு மட்டும் வருவது ஏன்? என்று ஆ.ராசா கேள்வி எழுப்பி உள்ளார். நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு களை சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் 4 ஆவது முறையாக நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.ராசா புதனன்று உதகை அடுத்த கீர்த்தி குன்னூர் வெலிங்டன் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு வேனில் சென்று பொதுமக் களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், மோடி தமிழ் நாட்டிற்கு வருகை தந்து தமிழ்நாட்டை நேசிப் பதாகவும் தமிழை நேசிப்பதாகவும் கூறுகி றார். மேட்டுப்பாளையத்திற்கு வருகை தந்த பாஜக தலைவர் நட்டா பேசும்போது திமுக வும் ஸ்டாலினும் தமிழ்நாட்டை பிரிக்க பார்க்கி றார்கள் என்றும், தமிழ்நாடு தனியாக இருப்ப தாகவும் தேசிய ஓட்டத்திற்கு வருவதில்லை எனவும் கூறினார். ஆனால் பாகிஸ்தான் இந் தியா மீது படை எடுத்த போதும் கார்கில் போரிற்காக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் நிதி வழங்கினார். எங்களுக்கு தேச ஒற்றுமை இருக்கிறது. நீலகிரி மாவட்டத்திற்கு வர உள்ள மோடி பாரத் மாதா கி ஜே என்றும், தமிழை நேசிப்ப தாகவும் கூறிவிட்டு செல்வார். தேர்தல் நேரத் தில் மட்டும் நீலகிரி மாவட்டத்திற்கு வர உள்ள பிரதமர் நரேந்திர மோடி, முப்படை தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரி ழந்த போது ஏன் அவர் நீலகிரி மாவட்டத்திற்கு வரவில்லை. முப்படை தளபதி பிபின் ராவத் விபத்தில் உயிரிழந்த போது ஓடோடி வந்து தேசிய கொடியை போற்றி வீரவணக்கம் செலுத்தியவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மோடியின் ஓட்டுக்கான நாட கத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும், என்றார். இப்பிரச்சாரத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், மாவட்ட செய லாளர் முபாரக், குன்னூர் நகராட்சி துணைத் தலைவர் வாசிம் ராஜா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர். இதேபோல் மஞ்சூர் பகுதியில் தனியார் தேயி லைத் தோட்டத்தில் இருந்த தொழிலாளர்களி டம் ஆ.ராசா நேரில் சென்று வாக்கு சேக ரித்தார்.