திருப்பூர், பிப்.5 - தமிழகத்தில் வளர்ந்து விட் டோம், நாங்கள் தான் எதிர்க்கட்சி என கூறும் பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஏன் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடவில்லை என திராவிடர் கழகத் தலைவர் வீரமணி கேள்வி எழுப்பினார். திருப்பூர் அரிசி கடை வீதியில் திராவிடர் கழகம் சார்பாக சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பொதுக்கூட்டம் சனியன்று நடை பெற்றது. இதில், திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர் தமிழ் நாட்டில் மு.க.ஸ்டாலின் தலை மையில் சமூக நீதியை பாது காக்கும் வகையிலான திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வரு கிறது. அதை பொறுத்துக் கொள்ள முடியாத ஒன்றிய பாரதிய ஜனதா அரசு, தமிழகத்தில் ஒருபோதும் ஆட்சி அமைக்க முடியாத விரக்தி யில், ஏதேதோ செய்து கொண்டி ருக்கிறது. பெரிய ஊறுகாய் ஜாடியில் ஊறுகாய் ஊறிக் கொண்டிருப் பதைப் போல ஆளுநர் மாளிகை பெரிய ஜாடியாக உள்ளது. தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப் பட்ட, ஏராளமான மசோதாக்கள் அங்கு கிடப்பில் போடப்பட்டி ருக்கின்றன. கிடப்பில் போடப் பட்டுள்ள மசோதாக்கள் நிறை வேற்றப்பட வேண்டும்.
இல்லா விட்டால் கிடப்பில் போட்டவர்கள் வெளியேற்றப்படும் நிலை ஏற் படும். நாங்கள் வன்முறையில் நம்பிக்கை இல்லாதவர்கள். அரசி யலமைப்புச் சட்டப்படி தொடர்ந்து போராடுவோம். சனாதனம், திராவிட மாடலுக்கு எதிரானது, தமிழகத்தில் நாங்கள் வளர்ந்து விட்டோம், நாங்கள்தான் எதிர்க் கட்சி என கூறிக் கொள்ளும் பாஜக அதனை உறுதிப்படுத்த ஏன் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடவில்லை? தங்கள் பலத்தை நிரூபிக்க பாஜக வின் மாநில தலைவர் அண்ணா மலையே போட்டியிட்டிருக்க லாமே? இதை செய்யாமல் பாரதிய ஜனதா கட்சியினர் அதிமுகவை வைத்து பொம்மலாட்டம் ஆடிக் கொண்டிருக்கின்றனர். அண்ணா திமுகவாக இருந்த அதிமுக, தற் போது அடமான திமுகவாக மாறி இருக்கிறது. எண்ணற்ற வாக்குறுதி களை அளித்த ஒன்றிய பாஜக அரசு, எதையும் நிறைவேற்ற வில்லை. இது குறித்து கேட்டால் ஜூம்லா எல்லாம் சும்மா சொன்ன தாக, உள்துறை அமைச்சர் நீதி மன்றத்திலேயே பதில் கூறுகிறார். சேது சமுத்திரத் திட்டம் அதன் தொடக்க காலத்திலேயே நிறை வேற்றி இருந்தால் ஏராளமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கும். அதை விடுத்து நம்பிக்கையின் அடிப் படையில் ராமர் பாலம் இருந்த தாக காரணம் காட்டி அதனை தொடர்ந்து எதிர்க்கும் பணியை பாஜக செய்து வருகிறது. இவ் வாறு கி.விரமணி கூறினார். இந்த பொதுக் கூட்டத்தில் மாநில ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் செ.முத்து கண்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்ட செய லாளர் எஸ் ரவிச்சந்திரன் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.