districts

img

வைக்கம் பெரியார் நினைவகத்தில் அமைச்சர்கள் நேரில் ஆய்வு

கோவை, ஜன.23- கேரள மாநிலம், வைக்கம் பகுதியில் உள்ள தந்தை பெரி யார் நினைவகத்தில் பொதுப்பணித்துறை மற்றும் செய்தித் துறை அமைச்சர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.  கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில், தந்தை பெரி யார் நினைவகம் உள்ளது. இங்கு திங்களன்று, பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, செய்தித்துறை அமைச்சர்  மு.பெ.சாமிநாதன் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்ட னர். முன்னதாக, தந்தை பெரியார் அவர்களின் திருவு ருவச் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த திருவுருவப்படத் திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ் வின்போது. செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், பொதுப் பணித் துறை முதன்மை தலைமைப் பொறியாளர் இரா.விஸ்வநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.