திருப்பூர் ஜூலை 17- திருப்பூர் மாவட்டத்தில் கோடை காலத்தில் இயல்பான அளவை காட் டிலும் அதிக மழை பெய்துள்ளது.தென்மேற்கு பருவமழை துவங்கிய தும், கடந்த சில நாட்களாக திடீரென கருமேகம் திரண்டு, மழைக்கான அறிகுறி தென்படுவதும், பலத்த காற்று காரணமாக மழை பொய்த்து போவதுமாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் கோவை மாவட்ட பகுதி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த மழை யால், நொய்யலில் வெள்ளப்பெ ருக்கு ஏற்பட்டுள்ளது. வியாழனன்று முன் சித்திரைச்சாவடி பகுதிகளை கடந்து வந்த புது வெள்ளம், திருப்பூரை வந்தடைந்தது.திருப்பூர் நகரப்பகுதிக்குள் நுழைந்த மழை நீர்கழிவுநீருடன் கலந்து, கருப்புநிற மாக ஆர்ப்பரித்து பாய்ந்தோடுகிறது. நொய்யல் வெள்ளத்தால் மங்கலம் நல்லம்மன் தடுப்பணை, திருப்பூர் அணைமேடு, அணைக்காடு தடுப்ப ணைகளில், வெள்ளம் ஆர்ப்பரித்து ஓடியது. திடீர் மழை வெள்ளத்தால் அணைப்பாளையம் தரைப்பாலத் தில் போக்குவரத்து துண்டிக்கப் பட்டு. நொய்யல் ஆற்றில் தேங்கிய சாக்கடை கழிவுகள் அடித்துச்செல் லப்படுகிறது. அடுத்து புது வெள்ளம் பாய்ந்து வந்தால் அருகே உள்ள குளங்களுக்கு தண்ணீர் எடுக்கலாம் என தன்னார்வலர்கள் தெரிவித் துள்ளனர். நொய்யல் ஆறு மாவட்டத் தில் நுழையும் சாமளாபுரம் பகுதிக ளில் ஆகாயத்தாமரை அதிகம் படர்ந் துள்ளது. ஆற்றின் ஒரு அங்குலம் கூட கண்ணில் தெரியாதபடி ஆகாயத்தா மரை அடர்த்தியாக ஆக்கிரமித்துள் ளது. திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஆற்றில் படர்ந்திருந்த ஆகாயத்தாமரை தண்ணீரில் அடித் துவரப்பட்டது. அவ்வாறு, அடித்து வரப்பட்ட ஆகாயத்தாமரை அக்ர ஹாரப்புதூர் பாலத்தை முழுமை யாக அடைத்துவிட்டது. தண்ணீர் செல்லும் குழாய்கள் முழுமையாக அடைத்ததால், தரைப்பாலம் தண்ணீ ரில் மூழ்கியது. சூலூர் மற்றும் அவி நாசி ஒன்றிய பகுதிகளை இணைக் கும் பாலத்தில், போக்குவரத்து துண் டிக்கப்பட்டுள்ளது. ஆகாயத்தாம ரையை அகற்றாவிட்டால், அந்த ரோட்டை யாருமே பயன்படுத்த முடி யாத நிலை ஏற்பட்டுள்ளது.தண்ணீர் குறைந்ததும், பொக்லைன் மூல மாக ஆகாயத்தாமரையை அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். நொய்யலில் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டதால் திருப்பூர் சுற்றுப்பகுதி களில் உள்ள, தடுப்பணைகள் நிரம்பி வழிந்தன. மங்கலம் நல்லம்மன் தடுப்பணையில், புது வெள்ளம் பாய்ந்து ஆர்ப்பரித்து சென்றது.மழை வெள்ளப்பெருக்கால், அணையில் இருந்து வழிந்தோடிய தண்ணீரில் வெண்ணிற நுரை ஏற் பட்டது. கோவை மாவட்ட கிழக்கு பகு தியில், சூலூர் தாலுகா பகுதிகளில் ரசாயனங்கள் ஆற்றில் கலப்பதால் இத்தகைய சீர்கேடு ஏற்படுகிறது.ஆற்றில் ஆபத்தான கழிவுகள் கலப் பதை தடுக்க வேண்டுமென விவசாயி கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.