கோவை, மே 8- ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிக ளில் முறைகேடுகள் நடந்துள் ளதா? என்பதை அதிகாரிகளை கொண்டு ஆய்வு செய்து வருவ தாக நகர்ப்புற அமைச்சர் கே.என். நேரு கோவையில் செய்தியாளர் களிடம் தெரிவித்தார். கோவை மாநகராட்சி அலுவல கத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.5.59 கோடி மதிப்பில் 9 முடிவுற்ற பணிகள் மற்றும் ரூ.49.62 கோடி மதிப்பில் 263 புதிய திட்டங்களை நகராட்சி நிர்வாகத்துறை அமைச் சர் கே.என்.நேரு மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் ஞாயிறன்று துவக்கி வைத்தனர். இதனையடுத்து அமைச்சர் கே.என்.நேரு செய்தி யாளர்களிடம் பேசுகையில், மாந கராட்சிகளைப் பொறுத்தவரை 24 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு திட்டங்கள் அறிமுகப்ப டுத்தப்பட்டுள்ளது. கோவை மாந கராட்சியில் ரூ.591 கோடி மதிப் பில் பாதாள சாக்கடை திட்டம் அறி முகப்படுத்தப்பட உள்ளது. ஒரு வருட காலத்திற்குள் பில்லூர் குடி நீர் திட்டமும் செயல்படுத்தப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டம் மந்தமாக நடைபெறுவ தாக சிலர் கூறிய நிலையில், அத் திட்டங்களை பார்வையிட்டு விரைந்து முடிக்க அறிவுத்தப்பட் டுள்ளது, என்றார். மேலும், மாநகராட்சியில் செய் யப்படாத பணிகள் முடிக்கப்பட்ட தாக முறைகேட்டில் ஈடுபட்டவர் கள் மீது வழக்குப்பதிவு செய்யப் படும். அதிகாரிகள் மற்றும் ஒப் பந்ததாரர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதேபோல் ஸ்மார்ட் சிட்டி திட்டம் பணிகளில் முறைகேடுகள் உள்ளதா? என் பதை ஆய்வு செய்ய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எங்கு தவறு நடந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். கோவை மாநகராட் சியில் 5 முக்கிய சாலைகளை இணைக்கும் வகையில் 145 கோடி மதிப்பில் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. சென்னை, கோவை, மதுரை போன்ற மாவட்டங்களில் குப்பைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் பணி துவங்கப்பட உள்ளது. கோவை மாவட்டத்தில் வெள்ளலூர் குப்பை கிடங்கில் மக்கும் குப்பை மக்காத குப்பை ஆகியவை பிரித்தெடுக்கப்பட்டு அதிலிருந்து மின்சாரம் தயாரிக் கும் பணி தொடங்கப்படும். இதனைத்தொடர்ந்து கோவை வாலாங்குளத்தில் 67.86 கோடி மதிப்பில் சீர்மிகு நகரம் திட்டப் பணிகளை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோர் ஆய்வு செய்தனர். மேலும், கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் 41வது வார் டுக்கு உட்பட்ட ரேவதி நகர் பகுதி யில் 2.5 கோடி மதிப்பில் இருபத்தி நான்கு மணி நேர குடிநீர் விநியோ கத் திட்டத்தை துவக்கி வைத்த னர். முன்னதாக, இந்நிகழ்வில் நக ராட்சி நிர்வாகத்துறை செயலாளர் சிவதாஸ் மீனா, கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீ ரன், கோவை மாநகராட்சி ஆணை யாளர் ராஜகோபால் சுன்கரா, கோவை மாநகராட்சி மேயர் கல் பனா மற்றும் துணை மேயர் வெற் றிச்செல்வன் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் உடனிருந்த னர்.