உடுமலை, ஏப்.5- வருவாய்த்துறையின் சார்பில் ஏழை மக்க ளுக்கு, வழங்கப்பட்ட பட்டாவிற்கான இடத்தை ஆறு ஆண்டுகளாகியும் ஒதுக்கா மல் இருக்கும் நிர்வாகத்தை கண்டித்து, பட் டாவுக்கான நிலம் எங்கே என கேட்டு மார்க் சிஸ்ட் கட்சியினர் புதனன்று வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் தாலுகா கொமரலிங்கம் பகுதி மக்களுக்கு கடந்த 2017ஆம் ஆண்டு 94 ஏழை மக்களுக்கு வருவாய்த்துறை சார்பில் இல வச வீட்டு மனை பட்ட வழங்கப்பட்டது. பட்டா கிடைத்தும் இன்றுவரை நில அளவை செய்து இடம் ஒதுக்கீடு செய்து தரவில்லை. இது தொடர்பாக பொது மக்கள், தங்களுக்கு வழங் கிய பட்டாவின் படி இடம் ஒதுக்கி தர வலியு றுத்தி வட்டாட்சியர் முதல் வருவாய்த்துறை யில் உள்ள அனைத்து பிரிவுகளிலும் மனு தந்தனர். இதைதொடர்ந்து, கடந்த வருடம் கோட் டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களிடம் வருவாய்த்துறை அதிகாரி கள், தங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தின் மீது நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. இது அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்,
பின் னர் நிலத்தை அளந்து, பட்டாவின் படி அனை வருக்கும் இடம் தர நடவடிக்கை எடுக்கப்ப டும் என்ற வாக்குறுதி அளித்தனர். ஆனால் தற் பொழுது வரை பட்டாவிற்கான நிலம் தரப்பட வில்லை. நிர்வாகத்தின் இந்த அலட்சியப் போக்கை கண்டித்தும், உடனடியாக வருவாய்த்துறை அளித்த வாக்குறுதியின் படி பொது மக்க ளுக்கு வழங்கிய பட்டா அடிப்படையில் இடத்தை அளவீடு செய்து பிரித்துத்தர வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா குழு உறுப்பினர் பிரபுராம் தலைமை யில் மடத்துக்குளம் வட்டாட்சியர் அலுவல கம் முற்றுகையிடப்பட்டது. இந்த போராட்டத்தில், மடத்துக்குளம் தாலுகா செயலாளர் ஆர்.வி.வடிவேல், விவ சாய தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகள் மாசாணம், காந்தி மற்றும் ஓய்வு பெற்றோர் சங்கத்தின் தலைவர் கருணாநிதி உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகை யிட்ட மார்க்சிஸ்ட் கட்சியின் நிர்வாகிகளிடம் வட்டாட்சியர் செல்வி, நில அளவியர் உள் ளிட்ட வருவாய்த்துறையினர் மக்களுக்கு தரப்பட்ட பட்டாவின் படி வீட்டுமனை பிரித் துத்தரப்படும் என்ற கூறியதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.