districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

மகனை துப்பாக்கியால் சுட்டபோது  5 சிறுவர்கள் மீது குண்டு பாய்ந்தது

தருமபுரி, ஜூலை 19- அரூர் அருகே மகனை துப்பாக்கியால் சுட்டபோது, தெரு வில் விளையாடிக் கொண்டிருந்த 5 சிறுவர்கள் மீது குண்டு பாய்ந்தது. இதுதொடர்பாக காவல் துறையினர் ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், சித்தேரியை அடுத்த நலமாங்கடை பகுதியைச் சேர்ந்தவர் கரியராமன் (40). இவ ரது மகன் ஏழுமலை. குடிப்பழக்கத்திற்கு அடிமையான கரிய ராமன் போதையில் வீட்டிற்கு வந்து மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனை பார்த்த ஏழுமலை தந்தையை தடுத்துள்ளார். இதனால் தந்தைக்கும் மகனுக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரம டைந்த கரியராமன், வீட்டிலிருந்த நாட்டுத்துப்பாக்கியை எடுத்து ஏழுமலையை நோக்கி சுட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஏழுமலை தப்பி ஓடிய நிலையில், பால்ரஸ் குண்டுகள் சுவற்றில் பட்டு தெறித்து, தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மீது பாய்ந்தது. இதில் ரவி (13), சாரதி (12), பிரபாத் (11), திருமலைவாசன் (13),  அனிதா (16) ஆகியோர் காயமடைந்தனர்.  இதையடுத்து காயமடைந்தவர்களை அருகிலிருந்த வர்கள் மீட்டு சித்தேரி அரசு மருத்துவமனையில் சேர்த்த னர். இதன்பின் மேல் சிகிச்சைக்காக அவர்கள் அரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், இதுகுறித்து  அரூர் காவல் துறையினர் கொலை முயற்சி  உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கரியராமனை கைது செய்து,  நீதிமன்றத்தில் முன்நிறுத்தி அரூர் கிளை சிறையில் அடைத் தனர்.

ஜீவன் ரக்ஷா பதக் விருதிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சேலம், ஜூலை 19- சேலம் மாவட்டத்தில் 2022 ஆம் ஆண்டிற்கான “ஜீவன் ரக்ஷா பதக் விருதிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன. இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இந்திய  அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் ஆயுதப்படைகள், காவல்படைகள் மற்றும் அங்கீகரிக்கப் பட்ட தீயணைப்பு பணிகள் போன்ற துறைகளில் பணியாற்றி  மனிதாபிமானம் சார்ந்த செயல்களில் ஈடுபட்டு வரும் இரு பாலினத்தவருக்குமான “ஜீவன் ரக்ஷா பதக் விருதுகள்” விரு தாளரின் மரணத்திற்கு பிறகு வழங்கப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் 2022 ஆம் ஆண்டிற்கான “ஜீவன் ரக்ஷா பதக் விருதிற்கு” ஆயுதப்படைகள், காவல்படைகள் மற்றும்  அங்கீரிக்கப்பட்ட தீயணைப்பு பணிகள் போன்ற துறைகளில் நீரில் மூழ்குதல், விபத்துகள், தீ சம்பவங்கள் போன்ற சம்பவங் களில் ஒருவரின் உயிரைக் காப்பாற்றுதல், மின்சாரம் நிலச்சரிவு, விலங்குகள் தாக்குதல் மற்றும் சுரங்கங்களில் இருந்து மீட்பு நடவடிக்கை போன்ற மனிதாபிமானம் சார்ந்த  சிறந்த செயல்களில் ஈடுபட்டுவரும் இரு பாலினத்தவரிட மிருந்தும் கருத்துருக்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும், விண்ணப்பதாரர்கள் தங்கள் மனிதாபிமானம் சார்ந்த செயல்களில் ஈடுபட்டமைக்கான ஆவணங்களுடன் கூடிய கருத்துருவை 25.07.2022 அன்று மாலை 5.45 மணிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அறை எண்.126, மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சி யர் செ.கார்மேகம் தெரிவித்துள்ளார்.

மின் கட்டண உயர்வை ரத்து செய்ய விசைத்தறியாளர்கள் வலியுறுத்தல்

ஈரோடு, ஜூலை 19- தேர்தல் வாக்குறுதிப்படி மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என ஈரோடு மாவட்ட விசைத்தறியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். விசைத்தறி நெசவாளர்களின் நலன் கருதி முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியால் 500 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டது. அது விசைத்தறியாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றியது. தற்போது வரை விசைத்தறிக்கு ஏற்கனவே உள்ள 750 யூனிட்  இலவச மின்சாரத்தை தொடர்வதற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும், 2021 திமுக தேர்தல் அறிக்கையில்  வாக்குறுதி எண் 146-ல்  இலவச மின்சாரம் ஆயிரம் யூனிட்டாக உயர்த்தி வழங்கப்படும் என  வாக்குறுதி  அளிக்கப்பட்டுள்ளது. அதை அமல்படுத்தாத நிலையில், தற்போது யூனிட்டிற்கு 70 பைசா உயர்த்தி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. விசைத்தறி தொழில் ஏற்கனவே நலிந்து உள்ள நிலையில் இந்த உயர்வு மிகவும் சிரமத்தில் தள்ளிவிடும். பிற தொழில்களுக்கு குறைவாக உயர்த்தப்பட்டுள்ள போது (உயர் அழுத்த மின் இணைப்புகளுக்கு 40 பைசா உயர்வு) கடும் நெருக்கடியில் உள்ள விசைத்தறிகளுக்கு 70 பைசா உயர்த்தி இருப்பது தொழிலை கடுமையாக பாதிக்கும். எனவே, லட்சக்கணக்கான விசைத்தறியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் காக்க விசைத்தறிக்கான மின் கட்டண உயர்வை ரத்து  செய்து தமிழகத்தில் உள்ள 6 லட்சம் விசைத்தறி நெசவாளர்களை காப்பாற்ற வேண்டும் என ஈரோடு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

உழவன் செயலியில் பதிவு செய்ய கோவை மாவட்ட ஆட்சியர் அழைப்பு

கோவை, ஜூலை 19- உழவன் செயலியில் பதிவு செய்து பயன டையுமாறு விவசாயிகளுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது, முன்னாள் தமி ழக முதல்வர் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத் தில் தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு  வரும் தொலைநோக்கு திட்டத்தினை செயல் படுத்தும் விதமாக தொகுப்பு தரிசு நிலங் களில் நீர் ஆதாரம் உருவாக்கப்பட்டு சாகு படிக்கு உகந்த நிலங்களாக மாற்றப்படு கிறது. மேலும், தரிசு நிலங்களில் நுண்ணீர் பாசன வசதி ஏற்படுத்தி, மண் மற்றும் நீரின்  தன்மைக்கேற்ற குறைந்தநீர் தேவையுடைய பலன் தரக்கூடிய பயிர்கள் சாகுபடி செய்திட திட்டத்தில் வழிவகை உள்ளது. கோவை மாவட்டத்தில் இத்திட்டம் 56 கிராம பஞ்சாயத் துகளில் செயல்படுத்தப்பட உள்ளது. அதன் படி ஆனைமலை, அன்னூர், காரமடை, மதுக் கரை, பெரியநாயக்கன்பாளையம், பொள் ளாச்சி வடக்கு, பொள்ளாச்சி தெற்கு, சுல் தான்பேட்டை, சூலூர், தொண்டாமுத்தூர் ஆகிய வட்டார பகுதிகள் தேர்வு செய்யப் பட்டுள்ளன. இத்திட்டத்தில் தரிசு நிலமுடைய 8 அல் லது அதற்கு மேற்பட்ட விவசாயிகள் குழு வாக ஒன்று சேர்ந்து 15 ஏக்கர் தரிசு நிலத் தொகுப்பினை ஏற்படுத்தி குழுவாக சாகு படிக்கு கொண்டு வருவதற்கு கைபேசியில் உழவன் செயலியில் தாங்களாகவே பதிவு செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவ் வாறு பதிவேற்றம் செய்த விபரங்களை, துறை அலுவலர்கள் மூலம் தொகுப்புதரிசு நிலத்தினை நேரில் பார்வையிட்டு சரிபார்த்த பின்பு நிலத்தடிநீர் ஆய்வு மேற்கொண்டு ஆழ் துளைக்கிணறு அல்லது குழாய்க்கிணறு அமைத்துத்தர உரிய நடவடிக்கை எடுக்கப் படும். ஆகவே, இந்த நல்லவாய்ப்பை பயன் படுத்தி தரிசு நிலமுடைய விவசாயிகள் உழ வன் செயலியில் பதிவு செய்து பயனடைய வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

மரவள்ளிக்கிழங்கு விலை உயர்வு

நாமக்கல், ஜூலை 19- பரமத்திவேலூர் பகுதியில் மரவள்ளிக்கிழங்கு விலை  உயர்ந்துள்ளாதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்னர். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா விவசாயி கள் தங்களது நிலங்களில் மரவள்ளிக்கிழங்கு பயிரிட்டுள்ள னர். மரவள்ளிக்கிழங்கு நன்றாக விளைந்ததும் உள்ளூர் பகுதி களுக்கு வரும் வியாபாரிகளுக்கு மரவள்ளி கிழங்குகளை டன் கணக்கில் விற்பனை செய்து வருகின்றனர். மரவள்ளிக் கிழங்கை வாங்கி மல்லூர், நாமகிரிப்பேட்டை, ஆத்தூர், சின்ன  சேலம், கீரனூர், புதுச்சத்திரம், புதன் சந்தை, மலவேப்பங் கொட்டை மற்றும் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் ஜவ்வரிசி தயாரிக்கும் ஆலைகளுக்கு அனுப்பி வருகின்ற னர். மரவள்ளிக்கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையா ளர்கள், கிழங்கில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப் படையில் விலை நிர்ணயம் செய்து வருகின்றனர். கடந்த வாரம் மரவள்ளிகிழங்கு டன் ஒன்று ரூ.12 ஆயிரம் வரை விற்பனையானது. தற்பொழுது டன் ஒன்று ரூ.13 ஆயிரத் திற்கு விற்பனையாகிறது. அதேபோல், சிப்ஸ் தயாரிக்கும் மர வள்ளிக்கிழங்கு கடந்த வாரம் டன் ஒன்று ரூ.17 ஆயிரத்திற்கு  விற்பனையானது. தற்போது டன் ஒன்று ரூ.18 ஆயிரத்திற்கு  விற்பனையாகிறது. வரத்து குறைந்துள்ளதால், ‌மரவள்ளிக் கிழங்கின் விலை தொடர்ந்து உயர்வடைந்துள்ளதாக வியாபா ரிகள் தெரிவித்தனர். இந்த விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்னர்.

கனமழையால் நீலகிரி மாவட்டத்தில் 62 வீடுகள் சேதம்

உதகை, ஜூலை 19- நீலகிரி மாவட்டத்தில் பெய்து  வரும் கனமழையால் மாவட்டம் முழு வதும் 62 வீடுகள் சேதமடைந்துள்ளது எனவும், ஒருவர் உயிரிழந்துள்ளார் எனவும் மாவட்ட ஆட்சியர் அம்ரித் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் தென் மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து  வருகிறது. மழையால் பல இடங் களில் மரங்கள் முறிந்து விழுந்து மின் கம்பங்கள் சேதம் அடைந்துள்ளன. மேலும், மண்சரிவும் ஏற்பட்டு வீடு களும், நீரில் மூழ்கி விவசாய பயிர் களும் சேதமடைந்தன. இதையடுத்து மழையால் பாதிக்கப்பட்ட இடங் களில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்தி ரன், மின்சாரத்துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி, வனத்துறை அமைச் சர் கா.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து அதிகாரிகளும் அங்கு ஆய்வு பணி யில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கி டையே உதகையில் உள்ள கோடப்ப மந்து கால்வாய் பகுதியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆனந்த குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு  மேற்கொண்டார்.  இதன்பின் அவர் செய்தியாளர் களிடம் கூறுகையில், நீலகிரி மாவட் டத்தில் தென்மேற்கு பருவமழை 91  சதவிகிதம் அதிகமாக பெய்துள்ளது.  மாவட்டத்தில் பெய்துவரும் கன  மழையினால் ஏற்பட்ட மண் சரிவு, வீடுகள் சேதம், மரங்கள் சாய்வது  போன்ற பாதிப்புகள் குறித்து அமைச் சர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். கோடப்பமந்து கால்வாய் தூர்வாரப் பட்டு இருந்தாலும், மழை அதிகமாக பெய்யும்போது சில நேரங்களில் கால்வாயில் இருந்து தண்ணீர் வெளியேறுகிறது. நகராட்சி மற்றும் பொதுப்பணித்துறைகளிடம் இது தொடர்பாக முழு விவரங்கள் பெறப் பட்டு நிரந்தர தீர்வு ஏற்படுத்த அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப் படும். கனமழையினால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்த மதிப்பீடுகள் தயார்  செய்யப்பட்டு மாவட்ட ஆட்சியர் மூலம் அரசுக்கு அனுப்பி வைக்கப் படும், என்றார். இதைத்தொடர்ந்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் கூறுகை யில், மாவட்டத்தில் பெய்து வரும் தென்மேற்கு பருமழையினால் இது வரை ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக் கான நிவாரணங்கள் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை மாவட்டம் முழுவதும் 62 வீடுகள் பகு தியாகவும், ஒரு வீடு முழுமையாக வும் சேதமடைந்துள்ளது. கனமழை யினால் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது குடும்பத்தினருக்கு முதல் வரின் உத்தரவுப்படி நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது, என் றார்.

மது விற்பனை: ஒருவர் கைது

சேலம், ஜூலை 19- ஏற்காடு வட்டம், வெள் ளைக்கடை பஞ்சாயத்துக் குட்பட்ட பிளியூர் கிராமத்தில் சட்டவிரோதமாக மது பாட் டில் விற்பனை செய்த புஷ்ப ராஜை காவல் துறையினர் கைது செய்தனர். இவர் தனது கடையில் மது பாட் டில்களை மறைத்து வைத்து  விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரி டமிருந்த 48 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது

அவிநாசி, ஜூலை 19- அவிநாசி உள்ளிட்ட பகுதிகளில் பெண்களிடம் தங்கச் சங் கிலி பறித்த வழக்கில் தொடர்புடைய இருவரை காவல்துறை யினர் திங்களன்று கைது செய்தனர். அவிநாசி பகுதியில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்று வந்தது. இதனை தடுக்கும் வகையில் மாவட்ட கண்காணிப்பாளர் உத் தரவின் படி, சிறப்பு பிரிவு காவல் உதவி ஆய்வாளர்கள் விஜய குமார், தவசியப்பன் ஆகியோர் கொண்ட குழுவினர் தீவிர  சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.  இந்நிலையில், அவிநாசி- திருப்பூர் சாலையில் திங்க ளன்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப் போது, அவ்வழியாக சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகை யில் இருசக்கர வாகனத்தில் வந்த இரு நபர்களை பிடித்து  விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் திருப்பூர் ராயபுரம்,ஸ்டேட் பேங்க் காலனி, 2 ஆவது வீதியை சேர்ந்த காதர் பாட்ஷா (21), கோவை, சிங்காநல்லூர் மூகாம் பிகை நகர், எஸ்ஐஎச்எஸ் காலனி பகுதியை சேர்ந்த வல்லரசு (22) என்பது தெரிய வந்தது.  மேலும் அவர்கள் கடந்த வாரம் அவிநாசி-மங்கலம் சாலை பகுதியில் வீட்டின் முன்பு வாசல் தெளித்துக் கொண்டிருந்த  தவமணி என்ற பெண்ணிடம், முகவரி கேட்பது போல  சென்று இரண்டரை பவுன்  தங்க சங்கிலி பறித்துக் கொண்டு தப் பிச் சென்றதும், இதேபோல, மங்கலம், பல்லடம், ஊத்துக்குளி  உள்ளிட்ட பகுதிகளில் பெண்களிடம் சங்கிலிப் பறிப்பில் ஈடு பட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, அவிநாசி போலீசார் வழக்கு பதிவு  செய்து, ஷாஜகான் என்கிற காதர்பாட்ஷா, வல்லரசு ஆகி யோரை கைது செய்தனர். மேலும், இவர்களிடமிருந்த ஏழரை  பவுன் தங்க நகைகள், வழிப்பறிக்கு பயன்படுத்திய இருசக்கர  வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

திருப்பூரில் நான் முதல்வன் திறனாய்வு தேர்வுகள்

திருப்பூர், ஜூலை 19- திருப்பூரில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு படித்த மாணவ,  மாணவியர்களுக்கு நான் முதல்வன் கல்வி திட்டத்தின் கீழ்  திறனாய்வு தேர்வுகள் நடைபெற்றது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் தனியார் மென் பொருள் நிறுவனம் இணைந்து நான் முதல்வன் கல்வி திட்டத் தின் கீழ் திருப்பூர் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு  முடித்த மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை  பெறுவதற்கான திறனாய்வு தேர்வை செவ்வாயன்று நடத்தி னர். திருப்பூர் கே.எஸ்.சி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடை பெற்ற இந்த தேர்வில் திருப்பூர் மற்றும் பல்லடம் கல்வி  மாவட்டத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்  கலந்து கொண்டு தேர்வு எழுதினர். தேர்வில் வெற்றி பெறும்  மாணவர்களுக்கு தனியார் நிறுவனம் சார்பில் ஒரு வருடம் ஊதியத்துடன் கூடிய பயிற்சி வழங்கப்படும். அதன் பின்னர் உயர்கல்விக்குரிய செலவும் ஏற்றுக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வை திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி துவக்கி வைத்தார். மாவட்டத்திற்கு 75 பேர் என தமிழ்நாடு முழுவதும் 2000 மாணவ, மாணவிகளை தேர்ந்தெடுக்க இருப்பதாகவும் கல்வித்துறையினர் தெரிவித்தனர்.

திருப்பூரில் இளையோர் பிரிவு வாலிபால் போட்டி

திருப்பூர், ஜூலை 19- திருப்பூர் மாவட்ட அளவிலான இளையோர் பிரிவு வாலி பால் போட்டிக்கான வீரர், வீராங்கனைகள் தேர்வு வருகிற 24 ஆம் தேதி நடைபெறுகிறது.  இதுகுறித்து திருப்பூர் மாவட்ட வாலிபால் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது, திருப்பூர் மாவட்ட வாலிபால் சங் கத்தின் சார்பில் மாவட்ட அளவிலான இளையோர் பிரிவு வாலி பால் போட்டிகளுக்கான வீரர், வீராங்கனைகள் தேர்வு சிறு பூலுவபட்டியில் உள்ள திருப்பூர் விளையாட்டு மற்றும் கல்வி  அறக்கட்டளை மைதானத்தில் ஜூலை 24 ஆம் தேதி நடைபெறு கிறது. இதில், பங்கேற்கும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தங்களது வயதுச் சான்று, பிறப்புச் சான்று, 10 ஆம் வகுப்பு  மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், ஆதார் அட்டை ஆகி யவற்றுடன் பங்கேற்கலாம்.  இதில் பங்கேற்பவர்கள் கடந்த 2002 ஆம் ஆண்டு ஜனவரி  1 ஆம் தேதிக்குப் பின் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். இதில் தேர்வு செய்யப்படும் வீரர், வீராங்கனைகள் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் வரும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி  முதல் 9 ஆம் தேதி வரையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் விளையாட தேர்வு செய்யப்படுவர் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.

75ஆவது சுதந்திர ஆண்டை முன்னிட்டு தியாகி  திருப்பூர் குமரன் ரயில் நிலையம் என பெயர் சூட்டல்

திருப்பூர், ஜூலை 19-  இந்தியாவின் 75ஆவது சுதந்திர ஆண்டை முன்னிட்டு திருப்பூர் ரயில் நிலை யத்திற்கு தியாகி திருப்பூர் குமரன் ரயில் நிலை யம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்திய நாட்டின் 75ஆவது சுதந்திர தின  விழா வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டா டப்படுகிறது. இந்த சூழ்நிலையில், சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் ரயில்வே நிர்வாகம் சார்பில் திருப் பூர் ரயில் நிலையத்திற்கு திருப்பூரை சேர்ந்த  சுதந்திரப் போராட்ட வீரர் திருப்பூர் குமரன் பெயர் சூட்டப்பட்டுள்ளது. தியாகி திருப்பூர் குமரன் ரயில் நிலையம் என  தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டு திருப்பூர் ரயில் நிலையத் தில் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. மேலும், திருப்பூர் குமரன் நினைவை போற்றும் வகையில் ரயில் நிலைய வளாகத் தில் திருப்பூர் குமரன் புகைப்பட கண்காட்சி மற்றும் செல்பி பூத் அமைக்கப்பட்டுள்ளது.

75 ஆம் ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டம் ஒரு வார காலம் திருப்பூர் ரயில் நிலையத்தில் விழா

திருப்பூர், ஜூலை 19- திருப்பூர் ரயில் நிலையத்தில் 75 ஆம் ஆண்டு சுதந்திர கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய ரயில்வே சார்பில் ‘ஆசாதி கி ரயில் காடி அவுர் ஸ்டேஷன்ஸ்’ எனும்  ஒரு வார சிறப்பு நிகழ்ச்சி திங்களன்று மாலை  துவங்கப்பட்டது.  75 ஆம் ஆண்டு சுதந்திர கொண்டாட்டத் தின் ஒரு பகுதியாக இந்திய ரயில்வே சார்பில் ஜூலை 18 முதல் 23 ஆம் தேதி வரை ஒரு வாரத் திற்கு சுதந்திரப் போராட்டத்துடன் தொடர்பு டைய ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்கள்  எனும் தலைப்பில் (ஆசாதி கி ரயில் காடி  அவுர்) எனும் தலைப்பில் சுதந்திரம் குறித்த  நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படுள்ளது.  அதன் ஒரு பகுதியாக சேலம் கோட்டத்தில், திருப்பூர் ரயில் நிலையத்தில் இந்த தொடக்க  விழா நடைபெற்றது. இவ்விழாவில் சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்து புகைப்படக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழ்நாடு சுதந்திரப் போராட்ட வீரர்கள் சங்கத்தின் பொதுச் செய லாளர் பி.ஆர்.நடராஜன், திருப்பூர் மாநக ராட்சி ஆணையர் கிராந்தி குமார் பாடி மற்றும் சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் ஏ.கௌதம் ஸ்ரீநிவாஸ் ஆகியோர் முன்னிலை யில், கொடி காத்த குமரனின் பேரன் சிவானந் தம், புகைப்படக் கண்காட்சியைத் தொடங்கி  வைத்தார்.  இந்தக் கண்காட்சியில் சுதந்திரப் போராட் டம் மற்றும் பல்வேறு சுதந்திரப் போராட்ட வீரர் களின் தியாகம் பற்றிய புகைப்படங்கள் இடம்  பெற்றிருந்தன. திருப்பூர் குமரன் மற்றும் அவ ரது தேசபக்தி மற்றும் தியாகம் தொடர்பான புகைப்படங்கள் இடம் பெற்றன. பின்னர், சேலம் கோட்ட ரயில்வே மேலா ளர் ஏ.கௌதம் ஸ்ரீனிவாஸ் இந்த நிகழ்ச்சியின்  முக்கியத்துவத்தை விளக்கி உரையாற்றிய போது, திருப்பூர் குமரன் செய்த தியாகத்தை யும், அவரது தேசபக்தியையும் நினைவு கூர்ந் தார். மேலும், தேச பக்தியை தூண்டும் பாடல் கள் பாடப்பட்டன, சரோஜினி நாயுடு மற்றும்  சுதந்திரப் போராட்டத்தில் அவரது பங்கு பற் றிய நாடகம் நடத்தப்பட்டது. திருப்பூர் குமரன் நினைவாக செல்ஃபி பாயின்ட்டும் திறக்கப்பட்டுள்ளது. இதே போன்ற நிகழ்வுகள் இந்த வாரம் முழுவதும்  தினமும் மாலை நடைபெறும் என அதிகாரி கள் தெரிவித்தனர்.

செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் கோவையில் எல்இடி விளம்பர திரைகள்

கோவை, ஜூலை 19- மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்து கோவையில் விளம்பர எல்இடி திரை கள் வைக்கப்பட்டுள்ளன. இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக சர்வதேச அள வில் 186 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர் கள், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ள 44 ஆவது செஸ் ஒலிம்பி யாட் - 2022 போட்டியானது மாமல்லபுரத்தில் ஜூலை 28 ஆம்  தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெற உள் ளது. இதையொட்டி தமிழக அரசு பல்வேறு விதமான விழிப்பு ணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக கோவை மாநகராட்சி சார்பில் மாநகராட்சி பிர தான அலுவலகம், டவுன்ஹால், அனைத்து மண்டல அலுவ லகங்கள், வஉசி பூங்கா, வஉசி மைதானம், காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம், பூ மார்க்கெட், ஆர்.எஸ்.புரம், ரேஸ் கோர்ஸ், சாய்பாபா காலனி, பன் மால், டைடல் பார்க்,  ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் செஸ் ஒலிம்பியாட் -  2022 போட்டிகள் நடைபெறுவது குறித்த விளம்பர எல்இடி திரைகள் வைக்கப்பட்டுள்ளன.

கிராம சபை கூட்டங்களும் எளிய மக்களின் கேள்விகளும்...

ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட் டம், நஞ்சை கொளாநல்லி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கடந்த ஜூலை 12 ஆம் தேதி காலை 11 மணிக்கு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட் டத்திற்கான அழைப்பு வாட்ஸ் அப் மூலம் தகவல் கிடைத்தது. முறையாக சட்டம் வழங்கியிருக்கும் குறைந்தபட்ச நடை முறை 7 நாட்களுக்கு முன் அறிவிப்பு தண் டோரா போட வேண்டும். நோட்டீஸ் கொடுத்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். 100க்கு இவ்வளவு நபர்கள்  பங்கெடுக்க வேண்டும் என்ற நடைமுறை களை பின்பற்ற வேண்டும். பங்கேற்பு குறை வாக  இருந்தால் மீண்டும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும். வழக்கமாக வருடத்தில் 4 முறை கட்டாயம் கிராம சபை நடத்த வேண்டும். ஊராட்சி மன்ற தலைவர் எப்போது வேண்டுமானாலும் கிராம சபை கூட்டம் நடத்தலாம். இது ஊராட்சி மன்ற  தலைவருக்கு சட்டம் வழங்கிய அதி காரம். ஆனால், இங்கு கிராம சபை கூட்டம் நடைபெறும் நாளுக்கு முதல் நாள் மாலை 4 மணிக்கு நாளை கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என்று வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து தகவல் வந்தது என்று தெரிவித்தனர். அதன்படி நடந்த கூட்டத்தில் வறுமைக்கோடு பட்டியல் தயாரிப்பு குறித்த பொருள் இருந்தது. ஆனால், அதற்கான விவாதம் இல்லை.இவ்வாறு தான் பெரும்பாலான கிராம சபை கூட்டம் நிகழ்வுகள் உள்ளன என  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடு முடி - மொடக்குறிச்சி ஒன்றிய செயலா ளர் கே.பி.கனகவேல் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மாவட்ட நிர்வாகத் திற்கு அனுப்பிய மனுவில், கூட்டத்திற்கு வந்த உடனே கையெழுத்து வாங்கி கணக்கு காட்டுவது; 100 நாள் வேலை தலத்தில் கையெழுத்து வாங்குவது, மக் கள் கூடும் இடத்தில் நின்று கையெழுத்து பெறுவது என்று தான் நடைபெறுகிறது. பொதுமக்கள் கோரிக்கைகள், குறை கள், தேவைகள் தீர்மானங்களாக மாறுவது கிடையாது. மாவட்ட ஆட்சியர் அலுவல கம், வட்டார வளர்ச்சி அலுவலகத்திலி ருந்து கூறப்படுவதுதான் கூட்ட பொருளாக வைக்கப்படுகின்றன. மற்ற சாமானிய மக்க ளின் கோரிக்கை பொருளாவது இல்லை. அப்படியே மாறினாலும் அடுத்த கட்ட நட வடிக்கை இல்லாமல், தீர்மானம் நோட்டில் தான் இருக்கும். மாவட்ட ஆட்சியர் அலு வலகத்திற்கு அனுப்பி விட்டோம் என்ற பதில் மட்டுமே மிஞ்சும். கடந்த கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி யின் வரவு - செலவு குறித்து ஊராட்சி அலு வலகத்தில் 7 நாட்களுக்கு (பிளக்ஸ்) முன் வைக்க வேண்டும் என்ற விதிப்படி எதுவும் வைக்கப்படவில்லை. கூட்டம் தொடங்கும் போது புகைப்படம் எடுத்து சென்று விட்ட னர். மக்கள் விவாதம் செய்ய வழியில்லை.  அரசு என்ன தான் பயிற்சி கொடுத்தாலும் தயார் ஆகாத தலைவர்கள், சில ஊராட் சிகள் ஊராட்சி செயலாளர் கைபிடியில், சில ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் பிடியில் என்று உள்ளது. கிராம சபை கூட்டங்களை மக்களின் திருவிழா வாக நடத்த முயற்சி எடுக்க வேண்டும். ஆனால், போதிய விழிப்புணர்வு ஏற்படுத் தாமல், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து கிராம சபை கூட்டம் நடத்த தக வல் என்ற அடிப்படையில் கிராம சபைகள் சம்பிரதாயமாகவே நடத்தப்படுகிறது. எனவே, ஈரோடு மாவட்ட ஆட்சியர் இப் புகாரை ஏற்று நடைபெற்ற கிராம சபை கூட்டம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என சிபிஎம் ஒன்றிய செயலாளர் கே.பி.கனகவேல் கேட்டுக் கொண்டுள்ளார். -சக்திவேல், ஈரோடு.

வேளாண் கண்டுபிடிப்புகள் குறித்த உலகளாவிய மாநாடு; கண்காட்சி

கோவை, ஜூலை 19- தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் வேளாண் கண்டுபிடிப்புகள் குறித்த உலகளாவிய மாநாடு மற்றும் கண் காட்சி செவ்வாயன்று துவங்கியது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், மாணவர்களின் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தி, ஆராய்ச்சி கண்டுபிடிப்பு களை புதுமையான தயாரிப்புகளாக மாற்று வதற்கு ஏற்ற வகையில், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் உலகளாவிய மாநாடு மற்றும் கண்காட்சியை நடத்துகிறது. இந்த  மாநாட்டில், மாணவர்களின் தொழில்நுட்பங் களை காட்சிபடுத்துவதன் மூலம் தொழில் கள், தொழில்முனைவோர், தொழில் தொடங் குபவர்கள் ஆகியோருக்கு ஒரு உத்வேகம் ஏற்படும். இந்த மாநாட்டில் 60க்கும் மேற் பட்ட முதுகலை மாணவர்களின் ஆராய்ச்சி கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள் ளன. இந்த கண்காட்சி மூலம் விவசாயத் தொழில்கள் மற்றும் தொழில்முனைவோர், இந்த தொழில்நுட்பத்தின் தாக்கங்களை புரிந்து கொண்டு, தமிழ்நாடு வேளாண் மைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்பட முடியும். இந்த கண்டுபிடிப்புகள், பயிர் ஊட்டச் சத்து, பயிர் பராமாரிப்பு, பயிர் மேம்பாடு, அறு வடைக்கு  பிந்திய தொழில்நுட்பங்கள், மூலிகை ஊட்டச்சத்து மருந்துகள் என்று  வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் தொழில் முனைவோர்கள் அவர்களின் தேவைகளின் அடிப்படையில், கண்டுபிடிப்பு களை தேர்ந்தெடுக்க முடியும். ஆராய்ச்சி  வழிமுறைகளில் மாணவர்கள் மற்றும் தொழில் முனைவோர்களை இணைப்பதன் மூலம் தொழில்நுட்பங்களை வணிகமயமாக் கவும், சந்தைப்படுத்தவும் எளிதாக முடிகி றது. இந்த மாநாட்டில் 300க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள் இணையவழி மூல மும் நேரிடையாகவும் இணைந்துள்ளனர். இதர பல்கலைக்கழக மாணவர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இருப்பதால் மாற்று கற்றல் முறைக்கும் இது உதவியாக இருக்கும். வேளாண் கண்டுபிடிப்புகள் செவ் வாயன்று முதல் ஜூலை 22 ஆம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பொது மக்களுக்கு இலவசமாக காட்சிபடுத்தப்பட உள்ளது என தமிழ்நாடு வேளாண்மை பல் கலைக்கழகம் தெரிவித்துள்ளது.


செல்போனை பறித்த வாலிபர் 

கோவை, ஜூலை 19- கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் அருள் ராஜ் என்பவர் தனது செல் போனில் வீடியோ கால் பேசி யபடி நடந்து சென்று கொண் டிருந்தார். அப்போது அவரை வாலிபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து சென்று, அருள்ராஜின் செல் போனை பறித்துச்சென்று தப்பியுள்ளார். இதுகுறித்து அருள்ராஜ் காந்திபுரம் காட் டூர் காவல் நிலையத்தில் புகா ரளித்தார். அதன்பேரில் வழக் குப்பதிவு செய்த காவல் துறையினர், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண் காணிப்பு கேமராக்களின் பதிவுகளை வைத்து வழிப் பறியில் ஈடுபட்டவரை தேடி வருகின்றனர்.