districts

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

கந்துவட்டி கொடுமை குறித்து புகார் அளிக்க வாட்ஸ்-அப் எண் 

ஈரோடு, ஜூன் 12- கந்துவட்டி கொடுமை குறித்து புகார் அளிக்க ஈரோடு மாவட்ட காவல்துறை வாட்ஸ்-அப் எண் அறிவித்துள்ளது.  கடலூரை சேர்ந்த ஆயுதப்படை போலீ சார் சமீபத்தில் கந்துவட்டி கொடுமை கார ணமாக தற்கொலை செய்துகொண்ட சம்ப வம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இதையடுத்து தமிழகம் முழுவதும் கந்து வட்டி சம்பந்தமான புகார்கள் வந்தால் உட னடியாக நடவடிக்கை எடுக்கவும், இது தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருந்தால் அதனை உடனே விசாரித்து முடித்து வைக்க வேண்டும் என டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட போலீசார் கந்துவட்டி கொடுமை குறித்த விசாரணையை தீவிரப்ப டுத்தி வருகின்றனர். ஈரோடு மாவட்ட காவல்துறை கண்கா ணிப்பாளர் சசிமோகன் உத்தரவின் பேரில்  ஈரோடு மாவட்டத்தில் கந்துவட்டி புகார் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வாட்ஸ்-அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, காவல்துறை கண்காணிப்பா ளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது, ஈரோடு மாவட்டத்தில் கந்து வட்டி சம்பந்தமாக ஈரோடு நேரு வீதியை சேர்ந்த கறி கடை நடத்தி வரும் முகமத் ஷெரிப் என்பவர் கொடுத்த புகாரின் பேரில்  விசாரணை நடத்தி வீரப்பன்சத்திரம் போலீ சார் வழக்கு பதிவு செய்து ஒருவரை கைது செய்துள்ளனர்.  எனவே, கந்து வட்டி சம்பந்தமாக யாரா வது புகார் அளிக்க விருப்பமிருந்தால் ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத் தில் நேரடியாகவே, அல்லது காவல் கண் காணிப்பாளர் வாட்ஸ்-அப் எண் 96552 20100 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். மேலும், காவல் நிலையத்தில் உள்ள காவல் உதவி ஆப் மூலமாகவும் தகவல் தெரிவிக்கலாம். இது குறித்து விசாரணை நடத்தி, தக்க நடவ டிக்கை எடுப்பதுடன், தகவல் தருபவர்க ளின் பெயர், முகவரி ரகசியம் காக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமுஎகச வட்டகிளை மாநாடு

தருமபுரி, ஜூன் 12- தமுஎகச மாநாட்டிற்கு வட்ட தலைவர் சுகந்தி பாஸ்க ரன் தலைமை வகித்தார். வட்டசெயலாளர் மு.கார்த்திகே யன் வரவேற்றார். மாநிலக்குழு உறுப்பினர் நாகைபாலு, மாவட்ட தலைவர் எ.கொ.அம்பேத்கர் மாவட்ட செயலாளர் நவகவி ஆகியோர் உரையாற்றினர். இதனையடுத்து வட்ட தலை வராக சுகந்தி பாஸ்கரன், வட்டசெயலாளராக பேராசிரியர் முனைவர் கு.சிவப்பிரகாசம், பொருளாளராக மருத்துவர். வேலகணபதி உள்ளிட்ட 9 பேர் கொண்ட கமிட்டி தேர்வு செய்யப்பட்டனர்.

“792 தமிழ், ஆங்கில வார்த்தைகள் கூறுகிறார்” உலக சாதனை படைத்த 5 வயது சிறுவன்

நாமக்கல், ஜூன் 12- நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குமாரசரவணன். விவசாயி யான இவரது மனைவி மனோன்மணி முது கலை பட்டதாரியாக உள்ளார். இவர்களது 5 வயது மகன் கே.எம்.தக்ஷன் வாலரைகேட் டில் உள்ள தனியார் மெட்ரிகுலேசன் பள்ளி யில் யு.கே.ஜி. படித்து வருகிறார். இவர் ஆங் கிலத்தில் 26 எழுத்துகளில் தலா 10க்கும் மேற் பட்ட வார்த்தைகளையும், தமிழ் உயிர் எழுத்துகள், உயிர் மெய் எழுத்துகள் அடங் கிய 173 சொற்கள், 100 பழங்களின் பெயர்கள் 40 வாகனங்களின் பெயர்கள், 20 உடல் பாகங் கள், 25 காய்கறிகள், 35 பழங்கள் என சுமார் 800 வார்த்தைகளை கூறுகிறார். இந்த சாதனை மூலம் யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆப் ரிக்கார்ட்ஸ் புத்தகத்தில் ரெக்டி  மோஸ்ட் டாப்பிக்ஸ் நேம் அன்டு ஆப் ஜக்ட்ஸ் என்ற பட்டியலில் இடம் பிடித்துள் ளார். பியூட்சர்கலாம் புக் ஆப்சரிகார்டிலும் இவரது சாதனை பதிவு செய்யப்பட்டு சான்றுகள், பதக்கங்கள், அங்கீகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர கராத்தே மற்றும் ஸ்கேட்டிங்கும் பயன்று வருகிறார்.   இதுகுறித்து தக்ஷனின் தாயார் மனோன் மணி கூறுகையில், எனது மகன் ஏ முதல் இசட் வரை உள்ள 26 எழுத்துகளிலும் 260 வார்த் தைகளை கூறுகிறார். ராக்கெட் விண்வெளி குறித்து தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டும் இவரை, அவன் விரும்பும் துறை யில் படிக்க வைப்போம். சாதனை குறித்து செய்திகளை பார்த்த எனது மகன் தானும் இதேபோல் மெடல்கள் வாங்க வேண்டும் என கூறியதையடுத்து அவனை நெறிப்ப டுத்தி வழிகாட்டுதல் செய்து மற்றவர்கள் சாதனையை முறியடித்து வந்தால் தான் இது போல் மெடல் வாங்க முடியும் என  ஊக்குவித்து வழிகாட்டி வருகிறோம், என் றார்.

மின்தடை

ஈரோடு, ஜூன் 12- பெத்தாம்பாளையத்தில் நாளை மின்தடை அறிவிக் கப்பட்டுள்ளது. கவுந்தப்பாடி துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் பெத்தாம்பாளை யம் மின் பாதையில் பரா மரிப்பு பணிகள் நடைபெற வுள்ளது. வரும் 14 ஆம் தேதி (செவ்வாய்க்கி ழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பெத் தாம்பாளையம், கொளத் தான் பாளையம், மூலக் கடை, செங்கோடன் பாளை யம், பூச்சம்பதி, கே.ஜி.புதூர், திட்டுக்காடு, புலவர் பாளையம், தண்ணீர் பந்தல் பாளையம், எம்.ஜி.பாளை யம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக் காது என மின்வாரிய செயற் பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக தங்கியிருந்த  வெளிநாட்டைச் சேர்ந்த பெண் கைது

திருப்பூர் ஜூன் 12- பல்லடம் அருகே முறையான ஆவணங்கள்  இன்றி சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்து பெண் கைது. இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது : பல்லடம் அருகே கள்ளக்கிணர் பகுதியில் வெளிநாட்டைச்  சேர்ந்த பெண் ஒருவர் தங்கி இருப்பதாக காவல்துறைக்கு  கிடைத்த ரகசிய தகவலையடுத்து பல்லடம் துணை காவலர்  சூப்பிரண்டு வெற்றிச்செல்வன் உத்தரவின் பேரில், ஆய்வா ளர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அந்த  பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது கள்ளக் கிணர் மேற்கு தெருவில் இளவரசன் என்பவரது வீட்டில் தங்கி  இருந்த வங்கதேசம், டாக்கா நகரைச் சேர்ந்த முகமது  சபோலா என்பவரது மகள் சுமி என்கிற லீமா பேகம்(20) என்ப வரை விசாரித்தபோது அவர் முறையான ஆவணங்கள்  இன்றி சட்டவிரோதமாக தங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த காவல்துரையினர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவுப்படி சென்னை புழல் சிறையில் அடைக்க அந்தப் பெண் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி யில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.1.50 கோடி வாடகை பாக்கி: கோயில் நிர்வாகம் ஜப்தி நடவடிக்கை

அவிநாசி, ஜூன் 12- பெருமாநல்லூர் கொண்டத்துகாளியம்மன் கோயி லுக்கு ரூ.1.50 கோடி வாடகை பாக்கியுள்ள நிலையில், கோயில் நிர்வாகம் ஜூன் 14ல் ஜப்தி செய்ய நோட்டிஸ் வழங்கி  நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பெருமாநல்லூ ரில் கொண்டத்து காளியம்மன் கோயிலுக்கு சொந்தமான காலி இடத்தில், 28 பேர் மளிகை கடைகள், தேனீர் கடை, பள்ளி  உள்ளிட்டவை அமைத்து செயல்பட்டு வந்தனர். இவை கடந்த 2017 ஆம் ஆண்டு காலி செய்யப்பட்டது. இருப்பினும்  நில வாடகை ரூ.1 கோடியே 70 லட்சம் கோயிலுக்கு செலுத்தா மல் காலம் தாழ்த்தி வந்ததுதாக கூறப்படுகிறது. கோயில்  நிர்வாகத்தின் நடவடிக்கையால் 7 பேர் வாடகை செலுத்தி யுள்ளார்கள் மேலும் 21 பேர் ரூ.1 கோடியே 45 லட்சத்து  96 ஆயிரத்து 841 செலுத்தாமல் உள்ளதகவும். இதையடுத்து,  கடந்த வாரம் பள்ளி, மளிகை கடை, அரிசிக்கடை உள்ளிட்ட  8 கடைகளுக்கு ஜப்தி செய்ய உள்ளதாக கோயில் நிர்வாகம்  சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது என்றும். வரும் ஜூன் 14 ஆம் தேதி ஜப்தி நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட உள் ளதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

வஞ்சிபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியை  மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த கோரிக்கை

அவிநாசி, ஜூன் 12- அவிநாசி அருகே வஞ்சிபாளை யம் அரசு உயர்நிலைப் பள்ளியை மேல் நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த  கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் ஒன்றிய கவுன்சிலர் பி.முத்து சாமி, செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதனிடம் மனு அளித்தார். திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம், புதுப்பாளையம் ஊராட் சிக்கு உட்பட்ட வஞ்சிபாளையம் அரசு  உயர்நிலைப்பள்ளி தொடங்கப்பட்ட நாள் முதல் ஒன்றிய அளவில் அதிக மாணவ, மாணவிகள் பயின்று வருகின் றனர். இப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி  பெற்று வருகிறது.  இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து முடிக்கும் மாணவ, மாணவி கள் மேல் நிலைப் படிப்புக்கு தொலை  தூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்படு கிறது. இந்த காரணத்தால் பத்தாம்  வகுப்புடன் படிப்பை நிறுத்தி விடுகின்ற னர். குறிப்பாக பெரும்பாலும் பெண் கள் கல்வி தடைபட்டு விடுகிறது. அப்ப குதியைச் சேர்ந்த மக்கள் பொருளாதா ரத்தில் பின்தங்கிய நிலையில் இருப்ப வர்கள் ஆவர். இதன் காரணமாக வஞ் சிபாளையம் அரசு உயர்நிலைப் பள் ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம்  உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இவ்வாறு செய்தித்துறை அமைச் சர் மு.பெ.சாமிநாதனிடம் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய கவுன் சிலர் பி.முத்துசாமி மனு  அளித்தார். இம்மனுவை பெற்றுக்  கொண்ட அமைச்சர் சாமிநாதன் விரை வில் கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாக கூறினார்.

அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தி அறிவிக்கப்பட்டதை அமல்படுத்த மாதர் சங்க கூட்டத்தில் தீர்மானம்

தாராபுரம், ஜூன் 12- தாராபுரத்தில் நடைபெற்ற அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க  கூட்டத்தில் தாராபுரம் அரசு மருத்துவ மனையாக தரம் உயர்த்தி அறிவிக்கப் பட்டதை அமல்படுத்தவேண்டும் உள் ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தாராபுரம் தாலுக்கா பேரவை கூட்டம் தளவாய்பட்டிணம் சாலையில் உள்ள சங்க அலுவலகத் தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஜி.ராஜேஸ்வரி தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் வளர்மதி, மாவட்ட துணைத் தலைவர் சரஸ்வதி கலந்து கொண்டனர். கூட்டத்தில் தாராபுரம் தாலுக்கா ஒருங்கிணைப்பு குழு தேர்வு செய்யப்பட்டது. ஒருங்கி ணைப்பாளராக ராஜேஸ்வரி உறுப்பி னர்களாக மகுடீஸ்வரி, நவநீதம், அனிதா, கமலம், மோகனசுந்தரி ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து தாராபுரம் அரசு மருத்துவ மனை நீண்டகாலமாக செயல்பட்டு வருகிறது. இருப்பினும் மருத்துவம னையில் ஸ்கேன் உள்ளிட்ட வசதிகள் இல்லை. இந்நிலையில் தாராபுரம் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம்  உயர்த்தப்படும் என்ற அறிவிக்கப்பட் டது. ஆனால் அது நடைமுறைப்படுத் தப்படவில்லை. எனவே தாராபுரம் தொகுதி மக்களின் தேவையை கருத் தில்கொண்டு தாராபுரம் அரசு மருத்து வமனையை மாவட்ட தலைமை மருத் துவமனையாக உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். தாராபு ரம் வட்டம் சின்னக்காம்பாளையம் பேருராட்சி 4 வது வார்டு பகுதியில் குடிநீர் வசதி கேட்டு பலமுறை மனு அளித்தும் நிதி இல்லை எனக்கூறி கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேலும்  தெருவிளக்குகள் கேட்டு மனு அளிக் கப்பட்டதில் பெயரளவில் 2 தெருவி ளக்குகள் மட்டுமே போடப்பட்டுள் ளது, அடிப்படைதேவைகளை நிறை வேற்றித் தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டுள்ளது. முடிவில் மகுடீஸ் வரி நன்றி தெரிவித்தார்.

ஆதார் சிறப்பு திருத்த முகாம்

திருப்பூர் ஜூன் 12- உடுமலை நகராட்சியிலுள்ள 33 வார்டுகளில், நகராட்சி நிர்வாகம் சார்பில் அஞ்சல் துறையுடன் இணைந்து  ஜூன் 14ஆம் தேதி முதல், 17ஆம் தேதி வரை சதாசிவம் வீதி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 15, 16, 17, 19, 20, 21, 22, 23 மற்றும் 25வது வார்டு மக்களுக்கு சிறப்பு ஆதார் திருத்த முகாம் நடைபெற உள்ளது.

விழிப்புணர்வு ஓவியம்

திருப்பூர் ஜூன் 12- திருப்பூர் மாநகராட்சி சார்பில் என் குப்பை, எனது  பொறுப்பு, என் நகரம் எனது  பெருமை என்ற திட்டத்தின் கீழ் திருப்பூர் தெற்கு பகுதி யில் உள்ள மக்கள் அதிகம் கூடும் பகுதியான உழவர் சந்தை சுற்றுச் சுவரில் பிளாஸ்டிக்கை விடு... துணிப் பையை எடு... மரம்  வளர்ப்போம் போன்ற ஓவி யத்தை சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் அலகு -2 மாண வர்கள் தூய்மை விழிப்பு ணர்வு ஓவியம் வரைந்தனர்.  மாணவர்கள் ஒருக்கி ணைப்பாளர் மோகன்குமார் தலைமையில் மாணவ பிரதிநிதி ரத்தின கணேஷ் முன்னிலையில் 16க்கும் மேற்பட்ட மாணவர் கள் ஓவியம் வரைவதில் ஈடு பட்டனர். கண்கவர் விழிப்பு ணர்வு ஓவியம் அப்பகுதி மக் களை வெகுவாக ஈர்த்தது.  இந்நிகழ்விற்கான ஏற்பாடு களை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

சிறுமியின் கைகளில் சூடு  -  அருகாமை வீட்டு பெண் கைது'

கோவை, ஜூன் 12– பொள்ளாச்சி அடுத்த ஜமீன்முத்தூர் பகுதியில் சிறுமி ஒருவருக்கு பக்கத்து வீட்டு பெண் சூடு வைத்த சம்ப வம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட பெண் கைது செய்யப்பட்டார். பொள்ளாச்சி ஜமீன்முத்தூர் பகுதியை சேர்ந்தவர் சிவ லிங்கம். இவரது மகள் அங்குள்ள பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வருகிறார். சனியன்று சிறுமி அருக்காணி என்பவரது வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த அருக்காணி சிறுமியை வீட்டுக்கு அழைத்து சென்று திட்டியுள்ளார். பின்னர், கம்பியை சூடுப் படுத்தி திடீரென சிறுமியின் 2 கைகளிலும் சூடு வைத் தார். இதனால், சிறுமி வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டு கதறியுள்ளார். சந்தம் கேட்டு அவரது பாட்டி ஓடி வந்து பார்த்துள்ளார். சிறுமியின் கையில் சூடு வைத்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர், சிறுமியை பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.  இதை யடுத்து, சிறுமியின் பாட்டி தனது பேத்திக்கு சூடு வைத்தது குறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அருக்காணியை கைது செய்து சிறையில் அடைத்த னர்.

கிராமப்புற அஞ்சல் ஊழியர்களுக்கு சட்ட சமூக உரிமைகள் வேண்டும் 

உதகை, ஜூன் 12 – நகர்ப்புற அஞ்சல் ஊழியர்களுக்கு வழங்கப்படும் சட்ட சமூக பாதுகாப்பை கிராமப்புற அஞ்சல் ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து அன்பாலயத்தின் அனைத்துலக அன்பர் அமைப்பு பிரதமர் மற்றும் அஞ்சல் துறை அமைச்சருக்கு விடுத்துள்ள கோரிக்கையில் தெரிவித்துள்ளதாவது,  நகர அஞ்சல் ஊழியர்களுக்கு ஓய்வூதியம், ஜிபிஎஃப், பிஎஃப் மற்றும் மருத்துவ உதவிகள் அனைத்தும் தரப்படு கிறது. ஆனால் கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு இந்த சட்ட சலுகைகள் கிடைப்பதில்லை. மேலும், கிராம அஞ்சல் ஊழி யர்களுக்கு, ஆண்டுக்கு 20 நாட்கள் மட்டுமே விடுப்பு எடுக்க அனுமதி உள்ளது. 65 வயது வரை பணியாற்ற வேண்டிய சூழல் உள்ளது. இவை அனைத்தும் மனிதநேயமற்ற செயல். அரசியலமைப்புக்கு முரணானது. எனவே, ஒன்றிய அரசு உடனடியாக நகர அஞ்சல் ஊழியர்களுக்கு வழங்கப்ப டும் அனைத்து சலுகைகளும் கிராம அஞ்சல் ஊழியர்க ளுக்கு வழங்க வேண்டும். மேலும், மலைப்பகுதியில் பணி யாற்றுவதால் ஊழியர்களுக்கு சீருடைகள், மழைகோட், அஞ்சல் பை, காலணி, கம்போர்ட் தொப்பி, குடை தரப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.