districts

img

சவால்களில் மீண்டெழுந்த திருப்பூர் இப்போது என்ன செய்யப் போகிறது?

“எழுதப்பட்ட வரலாறு அனைத்தும் வர்க்கப்  போராட்டங்களின் வரலாறே!” இது மாமேதை காரல் மார்க்சின் புகழ்பெற்ற வரிகள். உலக  வரலாற்றுக்கு மட்டுமல்ல உள்ளூர் வரலாற்றுக் கும் இது பொருந்தக் கூடியது தான்! திருப்பூரின் வரலாற்றுக்கு இதைப் பொருத்திப் பார்க்கலாம். சுமார் 150 ஆண்டுக ளுக்கு முன்பு வரை, மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி செல்லும் நொய்யல் ஆற்றின் கரைகளில்  நெருக்கமாக அமைந்திருந்த சிறு கிராமங்களின் தொகுப்பாகத்தான் திருப்பூர் இருந்தது. நொய் யல் ஆற்றின் தெற்கு கரையில் அமைந்திருக் கும் ஈஸ்வரன் கோயிலும், அதன் மேற்குப் பகு தியில் சற்று தள்ளி இருக்கும் வீரராகவப் பெரு மாள் கோயிலும், இவற்றைச் சுற்றி இருக்கும்  கடைவீதிகளும், மண்டிகளும், குடியிருப்புக ளும் தான் பழைய திருப்பூரின் அடையாளங்க ளாக இருந்தன. சுற்று வட்டார பகுதியில் இருந்த  மானாவாரி விவசாயம் தான் பிரதான தொழில்.  அதைச் சார்ந்தே திருப்பூர் சமூகத்தின் வாழ்க்கை  இயங்கியது. சமூகத்தில் செல்வாக்கு செலுத்தும்  விரல் விட்டு எண்ணத்தக்க சில நில உடமையா ளர்கள், அவர்களை சார்ந்து விவசாய வேலை கள் செய்து பிழைத்த குடியானவர்கள், கைவினைஞர்கள், கிராம சமுதாயத்தில் இருக் கும் வேலை பிரிவினையின் அடிப்படையில் வாழக்கூடிய மக்கள் பிரிவினர்  என்றுதான் பழைய திருப்பூர் இருந்தது. திருப்பூர் வட்டாரத்தை சுற்றிலும் விளைந்த  பருத்தி வெள்ளையர்களின் பஞ்சாலைகளுக் கான மூலப் பொருளாக இருந்தது. எனவே இங்கி ருந்து பருத்தி மூட்டைகளை சந்தைப்படுத்து வதற்கு மிகப்பெரிய “காட்டன் மார்க்கெட்” இங்கு செயல்பட்டது. அதுதான் தற்போதுள்ள பழைய கலெக்டர் அலுவலகமாக செயல்பட்ட இடம். 

நவீன திருப்பூரின் தோற்றம்

இதன் தொடர்ச்சியாக ஆசர் மில், தனலட்சுமி  மில், எஸ்.ஆர்.சி. மில், டி.டி.பி. மில் ஆகிய பஞ்சா லைகள் இங்கு அமைக்கப்பட்டன. இவைதான்  நவீன திருப்பூர் உருவாவதற்கு அடித்தளமாக அமைந்தன. பஞ்சு வர்த்தகம், பஞ்சாலை உரு வாக்கம் ஆகியவை தான், புதிய வகையான வர்த்தகர்கள், தொழில் முதலாளிகள், தொழிலா ளர்கள் ஆகிய சமூகப் பிரிவைத் தோற்றுவித் தது. பழைய திருப்பூர் புதிய தொழில் நகரமாக  கருக்கொண்டது. கதர் இயக்கத்தின் தலைநகர மாகவும் திருப்பூர் இருந்தது. இந்தக் காலத்தில் தான் தேசிய விடுதலைப் போராட்டமும் எழுச்சி பெற்றது. பஞ்சு மண்டி யில் வேலை செய்த சென்னிமலை குமாரசாமி,  தாய் நாட்டின் கொடி காக்க சத்யாகிரகத்தில் பங் கேற்று காவல்துறையின் கொடிய தடியடி தாக்கு தலில் சிக்கி மண்டை பிளக்கப்பட்டு உயிரிழந்து,  கொடி காத்த தியாகி குமரனாக வரலாற்றில் நிலை பெற்றார். அவர் மட்டுமல்ல ஏறத்தாழ 20க் கும் மேற்பட்டவர்கள் எலும்பு முறிவுகள்  பெற்று உடலெங்கும் ரணமாக காயம்பட்டு,  வாழ்நாளெல்லாம் ஊனத்துடன் வாழ்ந்து  மறைந்தனர். தியாகி பி.எஸ். சுந்தரம் வரலாறும்  எளிதில் மறக்க முடியாதது, மறக்கக் கூடாதது!  அந்தத் தியாகியின் பெயரில்தான் ஊத்துக்குளி  சாலைக்கு தியாகி பி.எஸ்.சுந்தரம் சாலை என்று பெயர். 

போராட்ட பாரம்பரியம்


விடுதலைப் போராட்ட பாரம்பரியம் மட்டு மல்ல, தொழிலாளி வர்க்கத்தின் போராட்ட பாரம் பரியமும் திருப்பூரின் வரலாற்றில் மறைக்க முடி யாதது. இரண்டாம் உலகப் போர் காலத்தில்  பஞ்சப்படி கோரி ஆசர் மில் தொழிலாளிகள் செங் கொடியேந்தி வீரஞ்செறிந்த போராட்டத்தை நடத்தினர். கோரிக்கை ஏற்கப்பட்டு அந்தப் போராட்டம் வெற்றி பெற்றது என்பது வரலாறு.  இடதுசாரி இயக்கம் திருப்பூர் மண்ணில் வலு வாக இருப்பதற்கு, சுதந்திரப் போராட்ட காலத் திலேயே நடத்தப்பட்ட இந்தப் பாட்டாளிகளின் போராட்டங்கள் அடித்தளம் அமைத்தன. நாடு விடுதலை பெற்ற சமயம் விடுதலையின் உண் மையான அர்த்தம் என்பது சாமானிய ஏழை, எளிய உழைப்பாளி மக்கள், சமூக ரீதியாக ஒடுக் கப்பட்டவர்களின் உண்மையான வாழ்க்கை மேம்பாடாக இருக்க வேண்டும் என்று கம்யூ னிஸ்டுகள் போராடினார்கள். அந்தப் போராட்ட  காலத்தில் உயிர் தியாகம் செய்தவர்தான் ஆஸர்  மில் பழனிசாமி.  இரண்டாம் கட்ட வளர்ச்சி பஞ்சாலைகளின் தொடர்ச்சியாக, உள் நாட்டு பனியன் உற்பத்தி தொழில் மெல்ல மெல்ல  படர்ந்து பரவியது. அது நாடு முழுவதும்  சந்தையில் விற்பனை வாய்ப்பை பெற்று வேக மாக வளர்ந்தது. இந்த புதிய தொழிலின் வருகையும், சுற்று வட்டார கிராமப்புற விவசாயிகள், விவசாயக் கூலிகள் விவசாயம் நலிவுற்ற நிலையில், பனி யன் கம்பெனிகளின் தொழிலாளர்களாக நவீன  பாட்டாளிகளாக மாற்றமடைந்தனர். திருப்பூர் மேலும் விரிவடைந்தது. இது திருப்பூர் நகரின் இரண்டாவது கட்ட வளர்ச்சியாக அமைந்தது. இக்காலத்தில் தொழிற்சங்கங்களின் செயல்பா டும் வீறு கொண்டு பரவியது. தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு, பஞ் சப்படி, இதர உரிமைகள், ரவுடிகள், சமூக விரோ திகளுக்கு எதிரான போராட்டம் ஆகியவை தொழிலாளர்களுக்கு உரிமை பெற்று தந்தது மட் டுமின்றி திருப்பூரின் சமூக, அரசியல் வாழ்வும்  ஜனநாயகத் தன்மை பெற்றது. திராவிட இயக்கத்தின் தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் முதன்முதலாக சந்தித்துக்  கொண்டதும் இதே திருப்பூர் மண்ணில் தான்.  மிகப்பெரும் மொழிப் போராட்டம் நடத்தி கொந்த ளிப்பான காலத்தையும் கடந்திருக்கிறது இந்த  ஊர். 

மாறிய முகத்தோற்றம்

1970 களின் பிற்பகுதியில் பின்னலாடை ஏற்று மதி வாய்ப்பு திருப்பூருக்கு கிடைத்தது. இந்த  வாய்ப்பு ஒட்டுமொத்த திருப்பூரின் முகத் தோற் றத்தையும் மிக தீவிரமான மாற்றத்திற்கு உள் ளாக்கப் போகிறது என்று அப்போது தெரி யாது. 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற பனியன் தொழிலாளர்கள் பஞ்சப்படி போராட்டம் 127  நாட்கள் நீடித்து மிகப்பெரும் வெற்றி பெற்றது.  தொழிலாளர்களுக்கு கிடைக்கும் பஞ்சப்படி யும், சம்பள உயர்வும் எந்த ஒரு பணப்பெட்டி யிலும் போய் முடங்கி விடாது. அது சமுதாய  வாழ்க்கையின் சுற்றோட்டத்தில் பல்வேறு தரப்பி னருக்கும் வாழ்வாதாரமாக மாறும். அதுதான்  நடந்தது. அந்த தொழிலாளர்கள் போராட் டத்தால் திருப்பூர் தொழில் அழியவில்லை! சொல்லப்போனால் அதற்குப் பிறகுதான் திருப் பூர் பேரெழுச்சி பெற்றது. உள்நாட்டு பனியன்  உற்பத்தி சந்தை மட்டுமின்றி, ஏற்றுமதி வர்த்தக மும் பாய்ச்சல் வேகத்தில் அதிகரித்தது. இது தான் திருப்பூரை குட்டி ஜப்பான் என்றும், டாலர்  சிட்டி என்றும் உலக வரைபடத்தில் இந்தியாவின்  பின்னலாடை தலைநகரமாக அடையாளம் காணச் செய்தது. இது திருப்பூரின் மூன்றாவது கட்ட வளர்ச்சியாகும். 1980களில் திருப்பூர் மற்றும் சுற்று வட்டார  தொழிலாளர்கள் என்று இருந்தது, 1990களில்  தமிழகத்தின் தெற்கு மற்றும் கிழக்கு மாவட் டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக் கள், வேலை தேடி இங்கு வந்து, மிகப்பெரும் தொழிலாளர் பட்டாளமாக மாறியது. ஆயிரக் கணக்கான சிறு, குறு தொழில் உற்பத்தியா ளர்களும் பலனடைந்தனர். இத்தகைய தொழில் வளர்ச்சியின் காரண மாகவே திருப்பூர் நகரம் மாநகரமாகவும், மாவட்ட தலைநகரமாகவும் வளர்ந்தது. 

தாக்குப்பிடித்த திருப்பூர்

2000ஆவது ஆண்டுக்குப் பிறகு திருப்பூ ரின் தொழில் தன்மையில் சில அடிப்படையான மாற்றங்கள் ஏற்பட்டன. ஏற்றுமதி கோட்டா முறை  முடிவுக்கு வந்தது. திறந்த சந்தை போட்டியில் வெற்றி பெற்று தன்னை நிலைநிறுத்திக் கொண் டது திருப்பூர். சாய ஆலை கழிவு நீரால் நொய் யல் ஆறு மற்றும் திருப்பூர் சுற்றுவட்டார பகுதி கள் மாசடைந்த நிலையில் நீதிமன்ற வழக்கு கள், சாய ஆலைகளை மூடும் உத்தரவு என  சவால்களை கடந்து வந்தது. சாய கழிவு மறு சுழற்சி தொழில்நுட்பம் இந்தியாவிலேயே வேறு  எங்கும் இல்லாத அளவுக்கு திருப்பூரில் வெற்றி கரமாக நிறுவப்பட்டது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு,  நொய்யல் நதி மீட்பு, மரக்கன்றுகள் நடுதல் என  சூழல் விழிப்புணர்வு மிகப்பெரும் அளவு முன் னேற்றம் கண்டது. உள்ளூர் தொழிலாளர்கள், அதற்கு அடுத்து தமிழகத்திலேயே பிற மாவட்டங்களைச் சேர்ந்த  தொழிலாளர்கள் என்றிருந்த நிலையிலிருந்து, இப்போது இந்தியாவின் பிற மாநிலங்களைச் சேர்ந்த, குறிப்பாக வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் திருப் பூருக்கு அணி அணியாக வந்தனர். இது திருப்பூ ரின் நான்காவது கட்ட வளர்ச்சியாகும். இந்தக் காலத்தில் திருப்பூர் பின்னலாடை உற்பத்தி தொழில் பரவலாக இந்த மாவட் டத்தின் பல்வேறு ஊர்களுக்கு மட்டுமின்றி மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் பரவியது. சவால்களின் காலம் அதேசமயம் 2008 ஆம் ஆண்டு தொடங்கி அமெரிக்க வீட்டுக் கடன் நெருக்கடி, வங்கிகள்  நெருக்கடி, மூலப் பொருள் நூல் விலை தாறுமா றாக உயர்வு, பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரி  விதிப்பு, உலகளாவிய பொருளாதார நெருக்கடி  மற்றும் போட்டி நாடுகளால் சந்தை வாய்ப்பு சுருங்கியது என அடுத்தடுத்து பல்வேறு நெருக் கடிகளின் ஊடாகவே இப்போது வரை திருப்பூர்  பயணித்துக் கொண்டிருக்கிறது. இப்போது திருப்பூரில் சிறு குறு நடுத்தர  உற்பத்தியாளர்கள் நெருக்கடியை சந்திப்பது சிலர் ஆலைகளை மூடிவிட்டு வெளியேறுவது, தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு குறைவது, வருமானம் குறைவது என நெருக்கடியின் சுமை மென்மேலும் அதிகரித்துக் கொண்டே போகிறது. நடுத்தர, சிறு, குறு தொழில் நிறுவனங்க ளின் உற்பத்தி வாய்ப்பு மிகப்பெரும் நிறுவனங்க ளின் கைக்கு மாறிக்கொண்டிருக்கிறது. ஜாப்  ஒர்க் செய்த நிறுவனங்கள் காணாமல் போய்க்  கொண்டிருக்கின்றன. 

இருபெரும் முகாம்களாக...

திருப்பூரில் பனியன் தொழில் உருவான காலத்தில் இருந்து ஏற்பட்டிருக்கும் எத்த னையோ மாற்றங்களில் இப்போது ஏற்பட்டு கொண்டிருக்கும் மாற்றம் அடிப்படையில் மாறு பட்டதாக உள்ளது. இதுவரை பல்வேறு சவால் களை கடந்து, வளர்ந்து வந்த திருப்பூர், இப்போ தைய சவாலையும் கடக்கும் என்று நம்பிக்கை இருந்தாலும், ஒருபுறம் கார்ப்ரேட்மயமாகும் மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள், மறுபுறம் கொஞ்சநஞ்ச உடமைகளையும் இழந்து மிகப் பெரும் தொழிலாளர் பட்டாளம் உருவாவது  என இருபெரும் முகாம்களாக மாறிக்கொண்டி ருக்கிறது. இங்கிருக்கும் லட்சக்கணக்கான மக்களின் வேலைவாய்ப்பு, குடியிருப்பு, சுகாதாரம், குழந் தைகளின் கல்வி, மருத்துவம், பொழுதுபோக்கு  உள்ளிட்ட பண்பாட்டு நடவடிக்கைகளுக்கான வாய்ப்பு ஆகியவை நிறைவேற்றப்பட வேண் டும். விரல் விட்டு எண்ணத்தக்க சில நிறுவ னங்களின் உற்பத்தி அதிகரிப்பு, லாப உயர்வு மட் டுமே திருப்பூரை பாதுகாத்து விடாது. ஆயிரக்க ணக்கான சிறுகுறு தொழில்கள், வேலை வாய்ப்பு, லட்சக்கணக்கான மக்களின் வாழ்வா தாரம் பாதுகாக்கப்படும் போதுதான் இந்நகரின் அடுத்த கட்ட வளர்ச்சி சாத்தியமாகும்!  இதுவே ஐந்தாவது கட்ட வளர்ச்சியை எதிர்நோக்கும் திருப்பூர் இப்போது சந்தித்து வரும் சவால் ஆகும்! என்ன செய்யப் போகி றது திருப்பூர்? என்ன செய்யப் போகிறார்கள் மக் கள்? -வே.தூயவன்