districts

img

காவல்துறை ஆணையரையே விரட்டியடித்த இந்துத்துவா கும்பல்

கோவை, டிச.31- கோவையில் ஆர்.எஸ்.எஸ் முகாம் நடை பெறும் தனியார் பள்ளியில் சட்டம் ஒழுங்கு  துணை ஆணையரை உள்ளே அனுமதிக்க  மறுத்து  இந்துத்துவ கும்பல் விரட்டிய சம்ப வம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை விளாங்குறிச்சியில் உள்ள தர்மசாஸ்தா மெட்ரிக் பள்ளியில் ஆர்.எஸ். எஸ் அமைப்பின்  பயிற்சி முகாம் நடை பெற்று வருகின்றது. இம்முகாமையொட்டி பள்ளி வளாகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ்  மற்றும் இந்துத்துவ அமைப்பினர் ஏராளமா னோர் கூடியுள்ளனர். இந்த பயிற்சி முகா மிற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாழனன்று தந்தை பெரியார் திராவிடர் கழகம், மக்கள் அதிகாரம் உட்பட பல்வேறு அமைப்புக ளைச் சேர்ந்தோர் இந்தப் பள்ளியை முற்று கையிட்டு போராட்டம் நடத்திய நிலையில் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.  இந்நிலையில் வெள்ளியன்று நாம் தமி ழர் கட்சியின் சார்பில் முற்றுகை போராட் டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து பள்ளியின் முன்பாக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில் பாது காப்பு ஏற்பாடுகளை பார்வையிட கோவை  மாநகர காவல் சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் ஜெயச்சந்திரன், ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாம் நடைபெறும் பள்ளிக்கு வந் தார். அப்போது, பள்ளியின் முன்பு நின்றி ருந்த இந்துத்துவ அமைப்பினர் அவரை  தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர்.  இதனால் போலீசாருக்கும், இந்துத்துவ அமைப்பினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இந்த தள்ளு முள்ளுவில் துணை ஆணையர் ஜெயசந்திரன் நிலைதடுமாறி னார். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. இத னையடுத்து துணை ஆணையர் ஜெயசந்தி ரன் அந்த இடத்தில் இருந்து கிளம்பிச் சென் றார். இச்சம்பவம் காரணமாக  பள்ளியின் அருகே பதற்றம் ஏற்பட்டதால் அப்பகுதி யிலிருந்த கடைகள் அனைத்தும் அடைக் கப்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகை யில் காவல்துறை அதிகாரியையே உள்ளே  அனுமதிக்க மறுப்பது அதிர்ச்சியாக இருக் கிறது. அங்கே முகாமில் என்ன நடக்கிறது என்பதே பெரும் கேள்வியாக இருக்கிறது என தெரிவித்தனர்.