சேலம் தொங்கும் பூங்காவிலுள்ள அரங்கத்தில் நடைபெற்ற “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி, மாநகராட்சி ஆணையர் சீ.பாலச் சந்தர், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேந்திரன், அருள், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.