நாமக்கல், ஜூலை 26– மாமல்லபுரத்தில் நடை பெற உள்ள சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் ஒருபகுதியாக நாமக்கல் மாவட்டத்தில் ஒலிம்பியாட் ஜோதிக்கு உற்சாக வர வேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி சரித்திர புகழ் வாய்ந்த சுற் றுலா தளமான மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. இதன் ஒருபகுதியாக கோவையில் இருந்து நாமக்கல் மாவட்டத் திற்கு வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு நாமக்கல் மாவட்டத் தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாநில ஊரக வாழ்வா தார இயக்கம் – மகளிர் திட்டத்துறையின் சார்பில் ஒலிம்பி யாட் கோலம் வரையப்பட்டது. சிலம்பம், வில்வித்தை விளை யாட்டு வீரர், வீராங்கணைகளின் வீரமிகு விளையாட்டு நிகழ்ச் சிகள் நடத்தப்பட்டது. செஸ் ஒலிம்பியாட்டில் கலந்து கொள்ளும் 188 நாடு களை குறிக்கும் வகையில், 188 நாடுகளின் கொடிகள் ஒட்டப்பட்ட ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூன்களை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங், காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாணவிகள் உள்ளிட்டோர் பறக்கவிட்டனர்.