districts

img

பேட்டரி வாகனம் மூலம் பழங்குடி மாணவர்கள் பயணம் மலைவாழ் மக்கள் சங்கம் வரவேற்பு

பொள்ளாச்சி, ஜூன் 15- பொள்ளாச்சி அருகே உள்ள பழைய சர்க்கார்பதி பழங்குடியின மாணவர்கள் பேட்டரி வாகனம் மூலமாக பள்ளிக்குச் சென் றனர். பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு  இச்சலுகையை வனத்துறை ஏற்படுத்திய தற்கு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம்  வரவேற்பு தெரிவித்துள்ளது. கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்டு பழைய சர்க் கார்பதி கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் குடும்பங்களுடன் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், ஒன்று முதல் 5 ஆம் வகுப்பு  வரை மட்டுமே ஆரம்ப தொடக்க பள்ளி அமைந்துள்ளது. இப்பகுதி மாணவர்கள் மேற்படிப்புக்காக சேத்துமடை பகுதிக்கு  7 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டியுள் ளது. இதற்கிடையே பேருந்து வசதியும் இல்லாததால் பெரும்பாலான மாணவர்கள் பள்ளிப்படிப்பை மேற்கொள்ள மிகவும் சிர மப்பட்டு வந்தனர். எனவே, இப்பகுதி மாண வர்களுக்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்தி  தர வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக் கள் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.  இந்நிலையில், வனத்துறை தனியார் தொண்டு நிறுவனத்தை அணுகியது. இத னையேற்று  லீமா மார்ட்டின் என்பவர் பழங்கு டியின மாணவர்களுக்கு பேட்டரி வாகனம் ஏற்பாடு செய்து தருவதாக உறுதியளித்தார்.  

இதனைத்தொடர்ந்து ரூ.2 லட்சத்து 80 ஆயி ரம் மதிப்பிலான, ஒரே நேரத்தில் 14 மாணவர் கள் பயணிக்கக்கூடிய அளவில் பேட்டரி வாகனம் வாங்கப்பட்டது. இதில் மாணவர் கள் மகிழ்ச்சியாக பள்ளிக்கு சென்றனர். அவர்களுக்கு லீமா மார்ட்டின் மற்றும் வனத் துறையினர் இனிப்புகள் வழங்கி உற்சாகத் துடன் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் கணேசன் கூறுகையில், ஆனைமலை புலி கள் காப்பகத்திற்குட்பட்ட பழைய சர்க்கார் பதி கிராமத்தில் பழங்குடி மாணவர்கள் பள்ளி சென்று வர ஏதுவாக முதற்கட்டமாக தன்னார்வலர் மூலமாக  பேட்டரி வாக னத்தை ஏற்பாடு செய்துள்ளோம். மேலும்,  பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற் றும் தன்னார்வலர்கள் அனுகி கூமாட்டி மற்றும் எருமைப்பாறை, சின்னார்பதி,  கோழிக்கமுத்தி, நவமலை உள்ளிட்ட கிரா மங்களுக்கு பேட்டரி வாகனம் ஏற்பாடு செய்து தரப்படும். இதன் மூலம் பழங்குடி யின மாணவர்கள் பள்ளிக்கு செல்வது உறு திப்படுத்தப்படும், என்றார். இதுதொடர்பாக தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட தலைவர் வி.எஸ்.பரம சிவம் கூறுகையில், பழங்குடியின மாணவர் கள் மேற்படிப்பிற்காக பேட்டரி வாகனத்தை  வழங்கிய தன்னார்வலர் லீமாவிற்கு வாழ்த்துக்கள். மேலும், தன்னார்வலர்களை மட்டுமே எதிர்பாராமல் தமிழக அரசு மற் றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் புதிய  வாகன வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். மலை கிராமங்களில் கூடுதலான உண்டு  உறைவிடப்பள்ளி வசதிகளை ஏற்படுத்தி  தர வேண்டும். கல்வி தரத்தை மேம்படுத்தும்  வகையில் பழங்குடியின மாணவர்களுக்கு சிறப்பு உதவித்தொகை வழங்க வேண்டும். மேற்கல்வி மேற்கொள்ளும் பழங்குடியின மாணவர்களுக்கு அனைத்து வகையான கல்வி உபகரணங்கள் வழங்க வேண்டும். தகுதி வாய்ந்த பழங்குடி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என  தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.