districts

img

சிக்னல்களில் பசுமை பந்தல்: மக்களிடம் வரவேற்பு

கோவை, மே 3- கோவையை வாட்டி வதைக்கும் வெயிலில் இருந்து வாகன ஓட்டி களை பாதுகாப்பதற்காக, பசுமை பந் தல் அமைக்கும் புதிய பணியை மாந கராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள் ளது. இது மக்கள் மத்தியில் நல்ல வர வேற்பை பெற்றுள்ளது. தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள் ளது. கோவை மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாகவே 100 டிகிரியை தாண்டி வெயிலானது பதிவாகி வரு கிறது. வெயிலில் இருந்து தற்காத்து கொள்வதற்கு அரசு மற்றும் மருத்து வர்கள் பல்வேறு வழிமுறைகளை அறிவுறுத்தி வருகின்றனர். பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர், நீர்மோர் பந்தல்களில் மக் கள் தாகம் தணித்து வருகின்றனர். வெயிலில் குறிப்பாக வாகன ஓட்டி கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து  வருகின்றனர். இந்நிலையில் கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில், வெயில் அதிகமாக இருக்கக்கூடிய சிக்னல் களில் வாகன ஓட்டிகளுக்காக பசுமை  பந்தல் அமைக்கும் பணியை துவக்கி உள்ளது. கோவை- மேட்டுப்பாளை யம் சாலையில் கண்ணப்பா நகர் சிக்னலில் இந்த பசுமை பந்தல் அமைக் கப்பட்டு துவங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 10 இடங்களில் இதனை  அமைக்க உள்ளதாகவும், தேவைக் கேற்ப பல்வேறு பகுதிகளில் இதனை விரிவுபடுத்த உள்ளதாகவும் மாநக ராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் இந்த நடவடிக்கை மக்கள் மத்தியில் வர வேற்பை பெற்றுள்ளது. திருப்பூர் இதேபோன்று, திருப்பூரில் மாநக ராட்சி அலுவலகம் அருகே உள்ள  போக்குவரத்து சிக்னலில் தற்போது பச்சை திரை கொண்ட மேற்கூரை  அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாந கராட்சி நிர்வாகத்தின் சார்பில் முதற் கட்டமாக அமைக்கப்பட்டுள்ள இந்த  பச்சை நிற மேற்கூரையைப் போலவே  மாநகரின் பிற பகுதிகளிலும் பச்சை  திரை கொண்ட மேற்கூரை அமைக் கப்படும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.