சேலம், டிச.7- சேலத்தில் 5 மாற்றுத் திறனாளி ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. சேலம் மாவட்ட உதவிக் கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்கம் மற்றும் ஜீவி பவுண்டேசன் சார்பில் சேலம் தெய்வீக திருமண மண்டபத்தில் 5 மாற்றுத் திறனாளி ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. இவ்விழாவை மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா தலைமையேற்று நடத்தி வைத்தார். இதில் வேலை வாய்ப்புத்துறை மண்டல இயக்குநர் ஏ.லதா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இதையடுத்து 5 மாற்றுத்திறனாளிகள் திரு மண ஜோடிகளுக்கும் சீர்வரிசைகள் வழங் கப்பட்டது. இவ்விழாவில் தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்க தலைவர் டிஏபி.வரதகுட்டி, ஜீவி பவுண்டேஷன் தலைவர் விஜயலட்சுமி, மாற்றுத்திற னாளிகள் சங்க தலைவர் அத்தி அண்ணா ஆகியோர் கலந்து கொண்டனர்.