districts

img

சாம்சங் நிறுவன தொழிலாளர்களின் உரிமையை பாதுகாப்போம் மாணவர், வாலிபர், மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சேலம், அக்.15- அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையை மீறும் சாம் சங் நிறுவனத்தைக் கண்டித்தும், இதற்கு ஆதரவாகச் செயல்படும் தமிழக அரசைக் கண்டித்து மாண வர், வாலிபர், மாதர் சங்கத்தினர் செவ்வாயன்று தமிழகம் முழுவ தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம், சுங்கு வார்சத்திரம் பகுதியில் செயல்ப டும் சாம்சங் நிறுவனம், அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியுள்ள சங் கம் அமைக்கும் உரிமையைப் பறிக் கும் செயலில் ஈடுபட்டு வருகிறது.  இதனைக் கண்டித்து ஒரு மாதத்திற் கும் மேலாகத் தொடர் போராட்டத் தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர் களை கைது செய்வது, சிறையில்  அடைப்பது போன்ற செயல்களில் தமிழக காவல் துறை செயல்பட்டு வருகிறது. இதனைக் கண்டித்தும், இப்பிரச்சனையில் காவல் துறை  பொறுப்பு வைத்துள்ள முதல்வர்  தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி,  இந்திய மாணவர் சங்கத்தினர், இந் திய ஜனநாயக வாலிபர் சங்கத்தி னர், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் இணைந்து செவ் வாயன்று மாநிலம் தழுவிய ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்  ஒருபகுதியாக, சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.வைரமணி தலைமை  வகித்தார். இதில் மாதர் சங்க மாவட் டச் செயலாளர் எஸ்.எம்.தேவி,  மாநிலக்குழு உறுப்பினர் ஐ.ஞான சௌந்தரி, மாவட்ட நிர்வாகிகள் ராஜாத்தி, பரமேஸ்வரி, கவிதா, வாலிபர் சங்க மாவட்டச் செயலா ளர் பெரியசாமி, கிழக்கு மாநகரச் செயலாளர் விமல் குமார், மேற்கு  மாநகரச் செயலாளர் கோபி, மாண வர் சங்க மாவட்டச் செயலாளர் பவித்ரன், மாவட்ட நிர்வாகிகள் டார் வின், கோகுல், அபிராமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தருமபுரி

தருமபுரி பிஎஸ்என்எல் அலுவ லகம் முன்பு, மாதர் சங்க மாவட்டத்  தலைவர் ஏ.ஜெயா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்  மாதர் மாவட்டச் செயலாளர் ஆர்.மல்லிகா, துணைச்செயலாளர் தனலட்சுமி, மாவட்ட நிர்வாகிகள் கே.பூபதி, கே.சுசிலா, பி. கிருஷ்ணவேணி, நகரச் செயலாளர் எஸ்.நிர்மலா ராணி, ஒன்றியத் தலை வர் தமிழ்மணி, வாலிபர் சங்க மாவட் டச் செயலாளர் எம்.அருள்குமார், துணைச்செயலாளர் குறளரசன், மாணவர் சங்க மாவட்டச் செயலா ளர் ஸ்டாலின் உட்பட பலர் கலந்து  கொண்டனர்.

கோவை

வை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பிஎஸ் என்எல் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, வாலி பர் சங்கத்தின் மாவட்டப் பொருளா ளர் தினேஷ் ராஜா தலைமை வகித் தார். இதில், மாதர் சங்க மாநில  பொதுச்செயலாளர் ஏ.ராதிகா,  மாவட்டச் செயலாளர் சுதா, பொரு ளாளர் உஷா, மாநிலக்குழு உறுப்பி னர் ராஜலட்சுமி, வாலிபர் சங்க  மாவட்டச் செயலாளர் அர்ஜூன், மாணவர் சங்க மாவட்டச் செயலா ளர் ஜெகதீஷ், மாவட்டத் தலைவர்  ஜுல்ஃபி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். முடிவில், மாதர் சங்க  மாவட்டத் தலைவர் ஜோதிமணி நன்றி கூறினார். ஈரோடு ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி  4 ரோட்டில் சாம்சங் தொழிலாளர்க ளுக்கு ஆதரவாக மத்திய, மாநில  அரசு ஊழியர், ஆசிரியர் மற்றும்  பொதுத்துறை ஊழியர்கள், ஓய்வூ தியர்கள் ஒருங்கிணைப்புக் குழு வின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஒருங்கிணைப்பாளர் சி. பரமசிவம் தலைமை வகித்தார். இடைநிலை ஆசிரியர் சங்க நிர் வாகி பிரகாசம், ஓய்வு பெற்றோர் அமைப்பின் தலைவர் மணிபாரதி, அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ச.விஜயமனோகரன், டிஆர்இயு நிர்வாகி பிஜூ, மின் ஊழியர் ஓய்வு பெற்றோர் அமைப்பின் தலைவர் எம்.ஆர். பெரியசாமி, பிஎஸ்என்எல் நிர்வாகி கள் பாலு, மணியன், எல்ஐசி  நிர்வாகி முருகானந்தம் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.